06 ஆகஸ்ட் 2012

சொத்து கணக்கை வெளியிட்டார் ஜெயலலிதா...


தன்மீதான சொத்து குவிப்பு வழக்கு கர்நாடகத்தில் நடந்து வரும் நிலையில் தனது சொத்து நிலவரங்களை வெளியுட்டுள்ளார் ஜெயலலிதா...

அந்த அறிக்கை விபரம்வருமாறு......

ஜெயலலிதாவாகிய எனக்கு உள்ள சொத்துக்கள் பற்றிய விபரங்களை தமிழக மக்களுக்கு தெரியபடுத்த வேண்டியது எனது தலையாய கடமையாகும்.....

போயஸ் கார்டனில் உள்ள நான் வசிக்கும் இல்லம் எனது உடன்பிறவா சகோதரி சசிகலாவுக்கு சொந்தமானது ஆகும்......அதில் நான் வாடகை கொடுத்துதான் குடியிருக்கிறேன்....

கோடநாட்டில் உள்ள எஸ்டேட்டை அப்பகுதியில் உள்ள ஏழை மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து வசூல் பண்ணி ஓய்வு இல்லாமல் உழைக்கும் எனக்கு பரிசாக அளித்தனர் ..ஆனால் அதையும் நான் ஏற்றுகொள்ளாமல் ஏழை மக்களுக்கு எழுதி வைத்துள்ளேன்..... எனக்கு பின் அது ஏழை மக்களுக்கே சேரும்.........


நான் முதல் அமைச்சராக இருக்கும்போது ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியதை அனைவரும் அறிவீர்கள்.....அந்த வகையில் எனது வங்கி கணக்கில் ஒன்பது ஆயிரத்து ஒன்பது ரூபாய் உள்ளது.....இப்போது சம்பளமே வாங்குவதில்லை....

எனக்கு என்று சொந்தமாக ஒரு ஸ்கூட்டி பெப் கூட இல்லை.....நான் அணிந்து கொள்ள ஐந்து செட் உடைகள் மட்டுமே உள்ளன.....


சொந்தமாக செருப்புகூட இல்லாமல் சசிகலாவிடமிருந்துதான் வாங்கி போட்டு கொள்வேன்.....


எனக்கு என்று தனியாக செல்போன் இல்லை...


ஜெயா டிவி கூட ஜெயமாலினி என்பவருக்கு சொந்தமானது....அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.....


இப்போது எனது கையில் இருக்கும் பணம் தொள்ளாயிரத்து தொண்ணுற்றி ஒன்பது ரூபாய் மட்டுமே.....


இதுதான் எனது சொத்து கணக்கு.....இது எல்லா வற்றையும் விட தமிழக மக்களின் அன்பே எனக்கு மிகப்பெரிய சொத்தாகும்....
இவ்வாறு இருக்கும் நிலையில் என் மீது சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருவது உண்மைக்கு புறம்பானது ..எனவே அவ்வழக்கை தள்ளுபடி செய்ய வண்டும் என உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்...
நாமம் வாழ்க.....புரட்சி தலைவர் நாமம் வாழ்க....


நன்றி வணக்கம்.....


சத்தியமா இது உண்மைதானுங்கோ.....

8 கருத்துகள்:

  1. முடியலீங்க. என்னால...


    பாருங்க இம்புட்டு ஏழையை போய் அதிக சொத்து செர்த்துட்டாங்க ஜனங்களும் எதிர்கட்சியும் சொல்லிகிட்டு இருக்கு....


    பதிவர்கள் சார்பில் அம்மாவுக்கு ஏதாவது செய்யனுங்க...

    பதிலளிநீக்கு
  2. ஹி ஹி...கண்டிப்பா செஞ்சே ஆகணும்...நன்றி

    பதிலளிநீக்கு
  3. அம்மாவுக்கு எப்படிக் கட்டுப் படியாகுது? மாச செலவெல்லாம்?

    பதிலளிநீக்கு
  4. அது சரி. நடிகையாய் சம்பாதித்ததையெல்லாம் யார் உருவிக் கொண்டார்கள்?

    பதிலளிநீக்கு
  5. சொல்வதை கேட்டுக் கொள்ளவேண்டியதுதான்
    வேற வழி ?
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....