27 அக்டோபர் 2010

மனதை உலுக்கிய நோய்....


உலகத்தில் எவ்வளவோ நோய்கள் இருக்கின்றன.... நமக்கோ அல்லது நமது உறவினர்களுக்கு அந்நோய்கள் ஏற்பட்டால்தான் அது நம்மை உலுக்கும்.....

சமிபத்தில் மஸ்குலர் டிஷ்ட்ரோபி என்னும் நோயினால் பாதிக்கப்பட்ட இரு சகோதரிகளைப்பற்றி விகடனில் படித்தேன்......மனதை உலுக்கி விட்டது.....

நம் ஒவ்வொருவரின் உடலில் இருக்கும் செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும்.....ஆனால் இந்நோயினால் பாதிக்கப்பட்டவரின் உடலில் இருக்கும் செல்கள் அழியும்...புதிய செல்கள் உருவாகாது....உடம்பில் உள்ள தசைகள் மெல்ல மெல்ல தனது செயல்பாட்டை நிறுத்தி இறுதியில் மரணம் ஏற்படும்....இந்த தசை சிதைவுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கபடவில்லை.....

தனது கண் முன்னாலே தசைகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கபடும் மரணத்தை விட கொடுமையான சித்ரவதைகளை இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கிறார்கள்.......
இந்நோய் ஜீன்களில் ஏற்படும் மாற்றத்தின் பாதிப்பால் ஏற்படும்....அதற்க்கு சுற்று புற சீர்கேடும் ஒரு காரணமாம்......

இந்நோயினால் பாதிக்கப்பட்ட அந்த சகோதரிகள் சோர்ந்து விடாமல் அஞ்சல் வழியில் பட்ட படிப்பை முடித்துள்ளனர்......மேலும் சுற்று புற சீர்கேடு பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்....அவர்களுக்கு நடக்க முடியாது....அடுத்தவர்கள் உதவி இல்லாமல் போன் கூட பேசமுடியாது.....ஏறக்குறைய எல்லா தசைகளும் அவர்களுக்கு செயல் இழந்துவிட்டன.....அவர்கள் மரணத்தை கண்டு அஞ்சவில்லை.....அது எப்படி வரும் என்று எதிர்பாத்து காத்து இருக்கிறார்கள்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....