31 மே 2011

தாஜ்மகாலுக்கு போட்டியாக திஹார் சிறை....! (கதம்பம்)


இப்பெல்லாம் காதலுக்கு சின்னமாக யாரும் தாஜ்மகாலை சொல்வதில்லை......திஹார் சிறையைதான் சொல்கிறார்கள்......காரணம் நான் சொல்லியா உங்களுக்கு தெரியவேண்டும்..?ஊருக்கே தெரிந்ததுதானே.....இருந்தாலும் சொல்றேன்.....உண்மையான காதல் எங்கிருந்தாலும் ஒன்று சேர்ந்துவிடுமாம்......இந்த மாதிரி எஸ் எம் எஸ் தான் இப்ப ரொம்ப ஹாட்.....( குறிப்பு....இது எஸ் எம் எஸ் மட்டும்தான்...ஹி ஹி...)

ஸ்பெக்ட்ரம் ராசா சிறையிலிருந்து வெளியே வரும்போது நிச்சயம் ஒரு சிறந்த பேட்மிண்டன் வீரராக வர வாய்ப்பு இருக்கிறது....சிறையில் பேட்மிண்டன் நன்றாக விளையாடுகிறாராம்....இதுதான் தீமையிலும் நன்மை என்பதோ...?

அநேகமாக கூடிய சீக்கிரம் சபாநாயகர் ஜெயகுமார் மாற்றப்படலாம்....பின்னே ஸ்டாலினுடன் ஜெயகுமார் கைகுலுக்கும் காட்சி தினகரனில் பெரியபடமாக வெளியாகி உள்ளதை பார்த்தால் சும்மா இருப்பாரா அம்மா?

நடிகை வனிதாவின் அலப்பறை எப்ப முடிவுக்கு வரும் என தெரியவில்லை....படத்தில் நடித்ததைவிட சிறப்பாகவே கண்ணீர் விட்டு மீடியாக்கள் முன்பு நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.....அட அவரது மகனை அவரிடம் கொடுத்து தொலைத்தால் தான் என்ன? இதை ஒரு இன்டர்நேஷனல் அளவில் சிறப்பு செய்தியாக தினமும் வெளியிடும் கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகள் வாழ்க......வாழ்க..

இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள்....புகைப்பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் தினமும் 2465 பேர் வீதம், ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோயால் இறக்கின்றனர்.ஆக இதனால் தெரிவிப்பது என்னவென்றால் புகை நமக்கு பகையாகும்....புகை பிடிக்கும் நண்பர்கள் அதை விட்டுவிட்டால் அவர்களுக்கும்,அவர்களின் குடும்பத்தினருக்கும் நல்லது......

30 மே 2011

சிக்கியது லாரி.... விபத்தா ... கொலையா ...?


சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் வைத்து பிடிபட்டுள்ளது. தூத்துக்குடியிலிருந்து அந்த லாரி ஜிப்சம் ஏற்றி வந்தபோதுதான் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது ஒரு கண்டெய்னர் லாரியாகும். அந்த லாரியை போலீஸார் தமிழகத்திற்குக் கொண்டு வருகின்றனர். டிரைவரும் பிடிபட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் மரியம் பிச்சை. பதவியேற்று ஒரு வாரம் கூட ஆகியிராத நிலையில், மே 23ம் தேதி காலையில் பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தார்.

அவரது மரணம் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிப்பார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.


விபத்தை ஏற்படுத்திய லாரி எங்கே போனது என்பது பெரும் குழப்பமாக இருந்து வந்தது. நாகர்கோவில், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் தனிப்படை போலீஸார் சல்லடை போட்டு தேடினர்....ஒருவேளை சல்லடை சிறிதாக இருந்ததால் இவ்வளவு நாள் லாரி சிக்கவில்லையோ என்னவோ?

இந்த நிலையில்,சம்பந்தப்பட்ட லாரி எது என்பது தற்போது தெரிந்து விட்டது. அது ஒரு கண்டெய்னர் லாரியாகும். தூத்துக்குடியிலிருந்து சம்பவ தினத்தன்று ஜிப்சம் ஏற்றிக் கொண்டு அந்த லாரி மேற்கு வங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போதுதான் பாடாலூரில் வைத்து அமைச்சரின் கார் விபத்துக்குள்ளாக காரணமாகியது. தற்போது இந்த லாரியை போலீஸார் மேற்கு வங்கத்தில் வைத்துப் பிடித்துள்ளனர். டிரைவரும் பிடிபட்டுள்ளார். லாரியையும், டிரைவரையும் தற்போது தமிழகத்திற்குக் கொண்டு வந்து கொண்டுள்ளனர்.

இந்த லாரியின் உரிமையாளர் ஆந்திராவைச் சேர்ந்தவராவார். அவரையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்து வரவுள்ளனர்.

அப்போது தெரிந்து விடும் ..இது கொலையா விபத்தா என்று....இந்த லாரியை பிடிக்கவே நம்ம போலீஸ் ஒருவாரம் எடுத்து கொண்டது காவல்துறையின் வெளிப்படையான தோல்வி என நான் எண்ணுகின்றேன்.....நீங்கள்?

நாட்டைவிட நோட்டே பெரிது...!


மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் சச்சின்,டோனி போன்ற மூத்த வீரர்கள் விருப்ப ஒய்வு பெற்றுள்ளனர்....

இவர்களுக்கெல்லாம் நாட்டுக்காக விளையாடுவது மட்டும் கசக்கும்....உடல் ஒத்துழைக்காது...

தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றதால் இவர்களுக்கு ஒய்வு வேண்டுமாம்....உங்களை யார் தொடர்ந்து ஐ பி எல் போட்டிகளில் விளையாட சொன்னது? உலக கோப்பை முடிந்தவுடன் ஒரு வார ஒய்வு கூட எடுக்காமல் துள்ளி குதித்து கோடிகளில் கொழிக்கும் ஐ பி எல் போட்டிகளில் விளையாட ஓடிவந்த இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு நாட்டுக்காக விளையாடும்போது மட்டும் ஒய்வு அவசியமாம்...என்ன கொடுமை சார் இது?

ஒய்வு எடுப்பது வீரர்களின் சொந்த விருப்பம்தான்....ஆனால் நாட்டுக்காக விளையாடும் போட்டிகளை உதாசின படுத்திவிட்டு நோட்டுக்காக விளையாடுவதிலே ஆர்வமாக இருப்பது தப்பில்லையா?

அதற்கு பதிலாக ஐ பி எல் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து விட்டு தற்போது இந்திய அணிக்காக விளையாடி இருக்கலாமே?

இந்த வீரர்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்த மட்டும் இந்திய அணியின் பெயர் வேண்டுமாம்....

இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக லட்சகணக்கான பேர் தவமிருக்கும் நிலையில் இவர்கள் அணியிலிருந்து விருப்ப ஒய்வு பெற்றுள்ளது எவ்வளவு பெரிய முரண்பாடு? இவர்கள் இல்லாத நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்டு சிறப்பாக விளையாடும் இளம் வீரர்கள் திரும்ப மூத்த வீரர்கள் அணிக்கு திரும்பும்போது பலிகடாக்கள் ஆகி அணியை விட்டு வெளியேற்ற படுகின்றனர்....

எனது பார்வையில் இந்த வீரர்கள் ஐ பி எல் போட்டிகளில் பங்கேற்றுவிட்டு தற்போது நாட்டுக்காக விளையாடுவதை புறக்கணிப்பது இந்திய அணிக்கு செய்யும் துரோகம்...உங்கள் பார்வையில் என்ன நண்பர்களே?

29 மே 2011

ஆங்கிலத்தில் பொளந்து கட்டிய கேப்டன்...


நம்ம கேப்டன் தமிழ்ல பொளந்து ! கட்டிதான் பெரும்பாலும் நாம் பார்த்து இருப்போம்....ஆனால் அவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் படித்தவர் என்பது பலரும் அறியாதது....


அவரின் ஆங்கில புலமைக்கு ஒரு சான்றுதான் இது....

28 மே 2011

ஹெல்மெட்....நல்லதா?...கெட்டதா?


இன்று முதல் சென்னையில் இருச்சர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.வரவேற்க படவேண்டிய விசயம்தான்...

இம்மாதிரி உத்தரவுகளுக்கு ஏன் பொதுமக்கள் ஆதரவு அளிப்பதில்லை என எனக்கு வியப்பாக இருக்கிறது....

ஏனென்றால் சென்ற ஆட்சியிலே இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. வாகன ஓட்டி தவிர, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அப்போதைய தமிழக அரசு அதிரடி உத்தரவுபோட்டது.

இந்த உத்தரவு வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. நம்ம ஆளுகளுக்குத்தான் நல்லது சொன்னால் பிடிக்காதே.... நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்ததையடுத்து, கட்டாய ஹெல்மெட் உத்தரவிலிருந்து அரசு பின்வாங்கியது. மேலும், ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை என்றும் அறிவித்தது.

தற்போது மீண்டும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது...

இரு சக்கர வாகன விபத்துகளில் தலையில் அடிபடுவதால்தான் மரணம் ஏற்படுகிறது....ஹெல்மெட் அணிவதால் அத்தகைய வாய்ப்புகள் வெகுவாக குறையும்....

ஆனால் நம்ம மக்கள் பைக்கை ஓட்டுபவர் மட்டும் ஹெல்மெட் போட்டால் போதுமா? பின்னால் உட்காருபவர் அணிய வேண்டுமா? என்று தேவை இல்லாத சர்ச்சைகளை கிளப்பாமல் இதை பின்பற்றினால் நல்லது...ஹெல்மெட் அனைவரும் அணிவதே பாதுகாப்பானது....

மலேசியா ,சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் எல்லாம் பைக்கில் செல்லும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.....அங்கு எல்லாம் மக்கள் இது போன்ற கேள்விகளை கேட்பதற்கே வேலை இல்லை....

ஹெல்மெட் அணியாமல் செல்வதை காட்டிலும் அணிவது நல்லதா?கெட்டதா?

நல்லது என்றால் அணியத்தானே வேண்டும்....!

நம் உயிரை நாம்தானே காக்க வேண்டும்...?

27 மே 2011

ஜெயலலிதாவின் அடுத்த சறுக்கல்......காரணம் கருணாநிதியின் பாடலா?


சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த கல்வி ஆண்டில் ரத்து செய்தும் .பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கும் குழுவுக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை எனவும் கூறி வெற்றிகரமாக தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது சறுக்கலை ஆரம்பித்துள்ளார் ஜெயலலிதா....

தனியார் பள்ளிகளுக்கு வயிற்றில் நெருப்பை வார்த்த சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன?200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை நிறுத்திவிட்டு இப்போது புதிதாக புத்தகங்களை அச்சடிக்க போகிறார்களா? எல்லாம் யாருடைய பணம்?

அனைத்து மாணவர்களுக்கும் ஒரே விதமான பாடத்திட்டங்கள் மூலம் ஒரே விதமான கல்வி கிடைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமே சமச்சீர் கல்வித்திட்டம்...அதை நிறுத்தியதன் மூலம் சாதாரண மாணவர்களின் கல்வி திறன் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்விதிறனோடு சமமாக கூடாது என்ற உயரிய கோட்பாட்டை செயல்படுத்தி உள்ளார் ஜெயலலிதா....


கருணாநிதியின் செம்மொழி பாடலும்,கனிமொழியின் கவிதையும் அந்த புத்தகங்களில் இடம் பெற்று இருப்பதும் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு ஒரு காரணம்...இல்லை இல்லை அதுதான் ஒரே காரணமாகவும் இருக்கலாம்...

தனியார் பள்ளிகள் அடிக்கும் கல்வி கொள்ளைகளுக்கு ஒரு அளவே இல்லை..

சாதாரண L K G வகுப்புக்கே வருட கட்டணமாக 60000 ரூபாய்க்கு மேல்தான் வாங்குகிறார்கள்....

தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளைகளை தடுப்பதற்கே திமுக அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டது.....இப்போது அதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என கூறுவது ஒரு நல்ல அரசுக்கு அழகா?

இனி அந்த குழுவால் எந்த நன்மையும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக ஆகிவிட்டது.....தனியார் பள்ளிகள் நிர்ணயிப்பதே கட்டணம் என்ற பகல் கொள்ளைகளுக்கு இனி விடிவு காலமே இல்லாமல் போக போகிறது...

பதவி ஏற்று பதினைத்து நாட்களிலே சில தவறான முடிவுகளால் தனக்கு ஒட்டு போட்ட மக்களை முகம் சுளிக்க வைத்துவிட்டார் ஜெயலலிதா....

இது நன்மைக்கு அல்ல......

26 மே 2011

ஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்?


ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் அஜால் குஜால் சாமியாரான நித்யானந்தாவுக்கும் ஏக போக சந்தோசம்.........

தான் எந்த தவறும் செய்யவில்லையாம்..சென்ற முறை ஆட்சியில் இருந்தவர்கள் தான் அனைத்துக்கும் காரணமாம்....என்ன கொடுமை சார்? நீங்கள் அஜாக்கிரதையாக ஆபாச வீடியோவில் சிக்கியதற்கு அவர்கள் எப்படி காரணமாவார்கள்?பாவம் அவர்களே தோற்றுவிட்டு பரிதாபமாக இருக்கிறார்கள்...நீங்கள் கையும் களவுமாக பிடிபட்ட அந்த வீடியோ காட்சியே பெங்களூரில் உள்ள உங்கள் ஆசிரமத்தில் எடுக்க பட்டதுதானே?

சென்ற முறை திருவண்ணாமலைக்கு வந்தவருக்கு பொதுமக்களும் மற்ற பிற அமைப்புகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து ஆர்பாட்டங்கள் நடத்தின...

ஆட்சி மாற்றம் நடந்த பிறகு எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் திருவண்ணாமலைக்கு வந்தவர் தான் எவ்வித தப்பும் செய்யாத மாதிரி பேட்டி கொடுத்துள்ளார்....

ஏதோ அந்த ஆபாசமான அருவெறுப்பான வீடியோ காட்சிகள் சந்துக்கு சந்து சிரித்ததற்கு திமுகவே காரணம் என்பதுபோல பேசியிருக்கிறார்...எல்லா லேப்களிலும் அந்த சி டி பரிசோதனை செய்யப்பட்டு உண்மை என நிரூபிக்க பட்டுள்ளதை ஏற்றுகொள்ளாமல் அது பொய்யான சி டி என இன்னும் இவர் சொல்கிறார் என்றால் தன்னை இந்த மக்கள் இன்னும் நம்புகிறார்கள் ,நம்புவார்கள் என்ற அழுத்தமான நம்பிக்கையே காரணம்....

தனக்கு எதிராக சாட்சி சொல்ல ரஞ்சிதாவுக்கு 20 கோடி பணமும் ,எம் எல் ஏ சீட்டும் தருவதாக ஒரு கட்சி ( திமுகவைத்தான் ) ஆசை காட்டியதாம்...என்னங்கடா இது கூத்தா இருக்கு? நீங்க அடிச்ச மன்மத லீலைகளுக்கு ஆதாரமாகத்தான் நீங்களே அந்த வீடியோவில் இருக்குறீர்களே?அப்புறம் எதற்கு சாட்சி?

அதுமட்டுமில்லாமல் ஒருவேளை தான் தவறு செய்தே இருந்தாலும் அதை தனது மத அமைப்புகளும், மத பெரியவர்களும்தான் கேட்கவேண்டுமாம்..மீடியாக்கள் கேட்க கூடாதாம்.......சாமியார் என்ற பெயரில் அசிங்கம் செய்துவிட்டு அதை மறைக்க மத சாயம் பூசுகிறார்..

நீங்கள் ரஞ்சிதா மட்டுமல்ல யாருடன் வேண்டுமானாலும் சந்தோசமாக இருங்கள்...ஆனால் அதற்காக மக்களின் நம்பிக்கையை சாமியார் என்ற பெயரில் சிதைக்காதீர்கள்....

நண்பர்களே ஆன்மீகத்தின் பெயரால் அசிங்கத்தை செய்யும் தனிப்பட்ட நித்யானந்தாவுக்காக மட்டுமே இதை நான் எழுதியுள்ளேன்....

25 மே 2011

ராஜீவ் காந்தியை கொன்றோம்.....ஜெயலலிதாவை கொல்லதிட்டமிட்டோம்....கே பி


புலிகளின் முக்கிய நிதிப் பிரிவுத் தலைவர்களில் ஒருவராக இருந்தவரும் இப்போது கொலைகாரன் ராஜபக்சேவின் சிறப்பு விருந்தினருமான கே.பி. இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி....

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மனும்தான் திட்டமிட்டு கொன்றனர். அது பிரபாகரனால் நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்திய மக்களுக்கும், குறிப்பாக ராஜிவ் காந்தி குடும்பத்தினருக்கும் நான் கூற விரும்புவது என்னவென்றால் பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

தந்தையை இழந்த ராஜீவின் குழந்தைகளின் வலி எங்களுக்குப் புரிகிறது. தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். எங்கள் மக்கள் இப்போது சிக்கலில் உள்ளனர். மனிதர்களாக வாழ எங்களுக்கு உதவி செய்யுங்கள். போரில் நிறைய இழந்துவிட்டோம், இனி நாங்கள் இழப்பதற்கு எதுமில்லை.

எப்போதுமே விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலை கொண்டவர் ஜெயலலிதா. இதனால் வாய்ப்பு கிடைத்தால் அவரையும் புலிகள் கொலை செய்திருப்பர். அதற்காக அவர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால் சில சமயம் அவர்களால் வெற்றி பெற முடிந்ததில்லை என்று கூறியுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளும், தமிழக அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களை வன்முறைப் பாதைக்குள் தள்ளினார்களா? என்ற கேள்விக்கு கே.பி. பதிலளிக்கையில்,

திராவிட நாடு வேண்டும் என பெரியார் விரும்பினார். அதாவது வடக்கில் இருந்து தமிழகம், கேரளா, ஆந்திராவை பிரிக்க வேண்டும் என்றார். இந்த கொள்கையுடன் அவர் அமைப்பைத் தொடங்கினார். அந்த வழியில் வந்தவர்கள் தான் அண்ணாதுரையும், கருணாநிதியும். ஆனால், திராவிட நாடு கோரிக்கை தோல்வி அடைந்தது.

திராவிட இயக்கம் ஆரம்பித்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அதன் கொள்கைகள், பிராமண எதிர்ப்பு சிந்தனைகள் போன்றவை பிரபாகரன் போன்றவர்களுக்கு தலைமுறைகள் கடந்து போய்ச் சேர்ந்து கொண்டு தான் உள்ளன. அந்த வகையில் பிராமண எதிர்ப்பு என்ற நிலையில் தான் தனது கொள்கைகளை வகுத்து செயல்பட்டார் பிரபாகரன்.

இதை வைத்து பிரபாகரனை மாபெரும் ஹீரோவாக்கினர் தமிழக அரசியல்வாதிகள். அவரை பண்டைய பேரரசர்களுடன் ஒப்பிட்டனர். இதனால் தான் பிரபாகரன் தவறுகள் செய்தார். ராஜிவ் காந்தி கொலையும் அது போல நடந்த ஒரு மாபெரும் தவறு தான்...

வைகோ முன்பு திமுகவில் இருந்தார். அவரும் திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலரும் எங்களுடன் நெருக்கமாக இருந்தனர். ஆனால், கருணாநிதி விடுதலைப் புலிகளை தனது நலனுக்காக அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டார் என்று கூறியுள்ளார் கே.பி.

எல்லாம் சரிதான்?இந்த கே பி இப்பொது யார்? உயிருக்கு பயந்து ராஜபக்சேவின் கைக்கூலியாக மாறி கோழையாக வாழ்வது மட்டுமல்லாமல் புலிகளுக்கும், ஈழ தமிழர்களுக்கும் பச்சை துரோகத்தை செய்தவர்....செய்து கொண்டு இருப்பவர்தான்....

24 மே 2011

ஒண்டிக்கு ஒண்டி வாரியா ? மல்லுகட்டும் முதலமைச்சரும் ,கவர்னரும்


கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கும் ஆளுநர் பரத்வாஜுக்கும் நடக்கும் குடுமிபிடி சண்டைதான் இப்ப இந்தியாவின் ஹாட் காமெடி....

கடந்த ஆண்டு 11 பா ஜ க எம் எல் ஏக்களும் ,5 சுயேச்சை எம் எல் ஏக்களும் கர்நாடக அரசுக்கு ஆதரவை விலக்கிகொண்டனர்...அப்போதிலிருந்தே அங்கு காமெடி கும்பமேலாதான்...சட்டசபையில் பெரும்பான்மையை அரசு நிரூபிக்க வேண்டிய நேரத்தில் சபாநாயகர் போப்பையா 16 பேரையும் பதவிகளில் இருந்து தூக்கி ஆப்படித்தார்...அதனால் எடியூரப்பா எந்த இடையூறும் இல்லாமல் தப்பித்தார்...

அந்த 16 பேரையும் பதவி நீக்கம் செய்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது..இதனால் திரும்பவும் எடியூரப்பாவுக்கு சிக்கல் வந்தது...ஆனால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 16 பேரும் எடியூரப்பாவை ஆதரிப்பதாக கூறி அந்தர் பல்டி அடித்தனர்...

இந்த நிலையில் கடுப்பான கவர்னர் கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த பரிந்துரை செய்தார்...ஆனால் வித்தியாசமாக இந்தியாவில் முதல்முறையாக தனக்கு ஆதரவான எம் எல் ஏக்களை டெல்லிக்கு கூட்டி சென்று ஜனாதிபதி முன்பே பெரும்பான்மையை நிருபித்து கவர்னருக்கும் ,எதிர்கட்சிகளுக்கும் கன்னாபின்னாவென அதிர்ச்சியை ஏற்படுத்தி அதே வேலையில் மக்களுக்கு சிரிப்பையும் ஏற்படுத்தினார் எடியூரப்பா....

இதோட எல்லா சனியனும் முடிந்துவிட்டது என்று பார்த்தால் ஒரு அரசு விழாவில் எடியூரப்பாவை புகழ்ந்து தள்ளினார் ஆளுநர்...இப்போது என்னடான்னா சட்டபேரவை கூட்டத்துக்கு அனுமதி கொடுக்காமல் ஜாலியோ ஜிம்கானா பாடி எடியூரப்பாவை கடுமையாக கடுப்பேற்றி கொண்டு இருக்கிறார்...


சும்மாவா சொன்னார் அண்ணா ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவை இல்லாத ஒன்று என...

இன்னும் என்ன என்ன கூத்துக்கள் ஜனநாயகத்தின் பெயரால் கர்நாடகாவில் அரங்கேற போகிறதோ?

23 மே 2011

ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி கருணாநிதி டெல்லி பயணம்...


இலங்கையில் இனபடுகொலையை அரங்கேற்றிய அசுரன் ராஜபக்சேவை போற்குற்றத்தின் கீழ் கைது செய்து ஐநா சபை விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதற்காக கருணாநிதி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்....

இது சம்பந்தமாக பிரதமர் மன்மோகன் சிங் ,சோனியா காந்தி ஆகியோரை சந்தித்த கருணாநிதி இலங்கைக்கு இந்தியா பொருளாதார அடிப்படையில் எந்த உதவியும் செய்யகூடாது என்றும், தமிழக மீனவர்களை சுட்டு கொள்ளும் இலங்கை கடற்படையினர் மீது பதிலுக்கு பதில் இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்த மத்திய அரசு உத்தரவு இடவேண்டும் எனவும் வலியுறித்தினார் ......

மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிடில் டெல்லியிலே உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்துள்ளார்...


அட போங்க சார்....இது உண்மையா இருக்குமோன்னு அதிர்ச்சி அடைந்து விட்டீர்களா?


இதெல்லாம் கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு.......நம்ம தாத்தா ஜென்டில்மேன்....அதெல்லாம் செய்யமாட்டார்... நம்ம கருணாநிதி தாத்தாவுக்கு ஒரு தவறும் செய்யாமல் சி பி ஐ பொழுதுபோக்குக்காக கைது செய்த தனது செல்ல மகள் கனிமொழியை சந்திக்கவும், அகில உலக அப்பாவி ஆண்டிமுத்து ராசாவை சந்திக்கவுமே நேரம் பத்தலையாம்....

பாவம் வயதான காலத்துல மகளுக்காக டெல்லி சென்ற கருணாநிதிக்கு பாவப்பட்டதமிழ் மக்களை நினைக்கவா நேரம் இருக்க போகிறது?

22 மே 2011

மஞ்சள் துண்டின் மனசாட்சி பேசுகிறது.....


தியாகி( !!) கனிமொழியின் கைதை பற்றியும், தேர்தல் தோல்வி பற்றியும் மஞ்சள் துண்டு மகாராஜா தொண்டர்களுக்கு எழுதியுள்ள குப்பை ....


தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் காலகட்டம் இது. இதற்கு என்ன காரணம்?( அட கண்றாவியே...இன்னுமா உங்களுக்கு தெரியவில்லை )

இணைந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையா? அல்லது அவர்கள் வலியுறுத்தி வாங்கிக் கொண்ட தொகுதிகளின் கணக்கா? தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா என்ற கேள்விகளுக்குள் போக விரும்பவில்லை.( கனிமொழியா, பேரன்களா, அல்லது நீங்கள் திரைக்கதை வசனம் எழுதியா படங்களா ? இதை யார் சேர்ப்பார் ?)

இந்தியாவில் அல்லது தமிழகத்தில் அதிகாரச் செல்வாக்கைப் பெருக்கி ஏராளமாகப் பணம் சம்பாதித்துள்ளது கருணாநிதியின் குடும்பம் என்று தேர்தலில் பிரசாரம் செய்தவர்கள் இப்போதும் அதே பிரசாரத்தைத் தொடர்கிறார்கள்.( உண்மையை சொல்லாமல் இருந்தாதானே தப்பு !)

அவற்றில் உண்மை ஏதும் இல்லை என்பதைத் தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.( மனசாட்சி இல்லாமல் பேசுவது என்றால் இதுதானோ?)

சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து தயாளு அம்மாள் பிரிந்தபோது கிடைத்த ரூ.100 கோடியில் வருமான வரி போக மீதி ரூ.77.5 கோடி கிடைத்தது. அதைப் பகிர்ந்து கொண்டபோது, கனிமொழிக்கு ரூ.2 கோடி கிடைத்தது. அதை பங்குத் தொகையாகச் செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாரராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்...(இரண்டு கோடிக்கு இருபது சதவீதமா?)

கனிமொழி அதை விரும்பாவிட்டாலும், அப்பா சொல்கிறாரே என அதற்கு ஒப்புதல் அளித்த குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் அவர் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாப, நட்டத்தில் பங்குதாரராவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொரு நாள் நடவடிக்கைக்கும் அனைத்துப் பங்குதாரர்களும் பொறுப்பாக ஆவதில்லை.(அப்படினா யார்தான் பொறுப்பு ஆவார்கள் ? கலைஞர் தொலைகாட்சியை பார்ப்பவர்களா?)

தில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜேட்மலானி, இதைத் தெளிவாக சுட்டிக்காட்டியும், கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரையும், கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.( அம்மாடி! ஊழல் செஞ்சா சிறைக்கு அனுப்பாம சிம்லாவுக்கா அனுப்புவாங்க !!?)

என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி - வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.( இது எந்த படத்தில் வரும் அல்லது வரபோகும் வசனம்?)

அப்போதும் அத்துடன் நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், கட்சிக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என தவம் கிடப்பது எனக்குத் தெரியாமல் இல்லை.(இந்த வாய் ( பேச்சு ) மட்டும் இல்லாவிடில் கருணாநிதி என்றோ கரைந்து போயிருப்பார் )

இறுதிப் போரில் வெல்வோம்:( என்ன மகாபாரத போரா.....அட பாவிகளா ! குற்றம் செஞ்சது நீங்க ....தண்டனை அனுபவிப்பது நீங்க ...போருன்னு ஏன் எல்லாரையும் கூப்பிட்டு அக்கப்போர் பண்றீங்க? )இந்த விவரங்களைத் தொண்டர்கள் படித்து புரிந்துகொண்டு செயல்படுத்தினால், அறப்போர்க் கணைகளை பல ஆயிரம் இளைஞர்கள் வடிவில் நடமாட விடுவார்கள் என்பது என் எண்ணம். அந்த அறப்போர் இறுதிப் போராகி நாம் வெல்வது நிச்சயம்(பாவம் திமுக தொண்டர்கள்....இன்னும் எத்தனை நாளைக்கு இந்த மாதிரி எழுத்துக்களை சகித்து கொள்ள போகிறார்களோ ?) என்று கருணாநிதி கூறியுள்ளார்...

21 மே 2011

பயோடேட்டா : கனிமொழி


பெயர் : கனிமொழி

அடைமொழி : கவிஞர் தியாகி ( சிறைக்கு சென்றதால் ) கனிமொழி

சமிபத்திய அடைமொழி : சிறைக்கு சென்ற செல்ல மகள்..

பலம் : கருணாநிதி

பலவீனம் : கருணாநிதியை தவிர குடும்பத்தினர் அனைவரும்

சாதனை : கருணாநிதி குடும்பத்திலிருந்து சிறைக்கு சென்ற முதல் பெண்மணி

வேதனை : சிறைக்கு வழியனுப்ப யாரும் வராதது

ஸ்பெக்ட்ரம் : ஆப்பு வைத்த ஆட்டோபாம்

சங்கமம் : இனி சங்கு ஊத படப்போகும் அமைப்பு

அழகிரி : அனலை காட்டும் அண்ணன்

ராசா : நெருங்கிய நண்பர் ....வெளியிலும் சிறையிலும்

ஜெகத் கஸ்பர் : அனேகமாக அடுத்து உள்ளே வரபோகும் நபர்

நண்பர்கள் : நீரா ராடியா ,ரத்தன் டாடா ,

எதிரிகள் : கலைஞர் டிவி ,முரசொலி, நக்கீரன் தவிர அனைத்து மீடியாக்களும்

பிடிக்காத எண் :நம்பர் 6

திகார் : உப்பு தின்றால் தண்ணீர் குடிக்கும் இடம்

ஜாமீன் : கடலிலே இல்லாத மீன்

திமுக : திருடர்கள் முன்னேற்ற கழகம்

தேர்தல் தோல்வி : ஏதோ தன்னால் மக்களுக்கு செய்ய முடிந்த உதவி

20 மே 2011

உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ



டைம்ஸ் பத்திரிக்கை இதழ் வெளியுட்டல்ல முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அவப்பெயர் பெற்ற தலைவர்களில் நம்ம ராசா இரண்டாவது இடம் பெற்று தமிழனின் புகழை உலகறிய செய்துள்ளார்...

இந்தியாவிலே இது மிகப்பெரிய ஊழல் என்றும், இந்த ஊழலால் ராசாவை சேர்ந்த கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது என்றும் டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது....

ராங்கா இருந்தாலும் தமிழனனின் பெருமையை, புகழை உலகுக்கு பறை சாற்றிய ராசா ...வாழ்க வாழ்க...

கருணாநிதியை திட்டி திட்டி போரடித்து விட்டதால் ஒரு மாற்றத்துக்காக பக்கத்துக்கு மாநில முதல்வரான ரங்கசாமியை வசை பாடி அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா....

பதினைந்து சீட் வென்ற ரங்கசாமி ஐந்து சீட் வென்ற அதிமுக வுக்கு மந்திரிசபையில் இடம் குடுக்காமல் முதுகில் குத்தி விட்டதாம்....வழக்கமாக முதுகில் குத்தும் தனக்கே போட்டியா என கொந்தளித்து உள்ளார் ஜெயலலிதா....

அதிமுக ஆதரவால்தான் ரங்கசாமி ஜெயித்தாராம்....இது எப்படி இருக்கிறது என்றால் சரத்குமார் கட்சியால்தான் தமிழகத்தில் அதிமுக ஜெயித்தது என்று சொல்வது போல இருக்கிறது...

தன்னிடம் சொல்லாமல் ரங்கசாமி பதவி ஏற்று கொண்டாராம்...உங்களிடம் சொலிவிட்டு செய்ய அவர் என்ன அதிமுக உறுப்பினரா?

இவரெல்லாம் மக்களுக்கு என்ன செய்ய போகிறார் என்று கேட்டுள்ளார் ஜெ..ஹெலிகாப்டரில் செல்லும் உங்களைவிட சைக்கிளில் சென்று மக்களை சந்திக்கும் ரங்கசாமியின் எளிமை ஒன்றே போதும்...அவர் மக்களுக்கு என்ன செய்வார் என்று சொல்வதற்கு....

இப்ப நீங்க முதலமைச்சர் ...பழைய நினைப்பில் ஒன்றரை பக்கத்துக்கு அறிக்கை விடாமல் ஆகுற வேலையை பார்த்தல் நல்லது...

19 மே 2011

ரஜினியை தொந்தரவு படுத்தும் மீடியாக்கள்....


சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நடிகர் ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை நடந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததால், ரத்தம் சுத்திகரிக்கப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து ரத்த சுத்திகரிப்புக்காக அவருக்கு நேற்று டயாலிசிஸ் சிகிச்சை தரப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ஆனால், நேற்று நள்ளிரவில் மருத்துவனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மூச்சு விடுவதை எளிதாக்குவதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நுரையீரல், சிறுநீரகங்கள், இதயம் உள்பட பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

இது இப்போது நான் படித்த செய்தி....அவரின் உடல்நிலையை பற்றி ஏன் ஒரு நாளைக்கு பத்து செய்திகளை வெளியிடுகிறார்கள்?இது அவரையும் அவரின் குடும்பத்தினரையும் எவ்வளவு தூரம் பாதிக்கும்?

மனிதனுக்கு நோய் வருவது இயல்பு....ரஜினி பிரபலமாக இருப்பதால் அவருக்கு நோய்கள் வரக்கூடாதா என்ன?

இதை மீடியாக்கள் ஏன் பெரிதுபடுத்துகின்றன....?மீடியாக்கள் துரத்தி துரத்தி பேட்டி எடுக்கும்போது அவர் மனைவியின் மனநிலை எப்படி இருந்து இருக்கும்..?

நமக்கோ அல்லது நமது உறவினர்களுக்கோ உடல்நிலை சரில்லாமல் இருக்கும்போது ஒரு யாராவது மைக்கை நீட்டி நம்மை பேச சொன்னால் நமக்கு எப்படிஇருக்கும்?

அவரின் மனைவி லதா பேட்டி கொடுத்த போது அவரின் நிலையை அவரின் முகம் உணர்த்தியது...

அவர் குடும்பத்தினர் அவரை கவனிப்பார்களா? இல்லை அவரை பற்றி வரும் செய்திகளுக்கு பதில் சொல்வார்களா?


ரஜினியை பற்றி வீண் வதந்திகளை தவிர்க்க அவரின் வீடியோ அல்லது புகைப்படங்களை வெளியிட்டால் அவரின் ரசிகர்கள் அமைதி காப்பார்கள்....

மீடியாக்கள் இதை பெரிதுபடுத்தி அவருக்கும்,அவர் குடும்பத்துக்கும் அவஸ்தைகளை கொடுக்க வேண்டாம் என்பதே என் கருத்து....

ரஜினி விரைவில் குணமடைவார் என நம்புவோம்....


18 மே 2011

நாறிப்போன நாதாரி கட்சிகள்....


நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் திமுகவுக்கு மட்டும் பாடம் புகட்டவில்லை...ஜாதியின் பெயரால் அரசியல் செய்யும் சாக்கடை கட்சிகள், ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும் சவுக்கடி கொடுத்துள்ளனர்...


45 சீட் தருபவர்களுடன் தான் கூட்டணி என்று அங்கும் ,இங்கும் மாறி மாறி பேரம் பேசி இன்ப அதிர்ச்சியாக கருணாநிதியிடம் 30 சீட் வாங்கி போட்டியிட்ட ராமதாஸ் அதில் ஒரு பூஜ்யத்தை அழித்துவிட்டு மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்....ஜாதியின் பெயரால் பச்சோந்தி அரசியல் நடத்தும் ராமதாசுக்கு இனி எழுந்து நிற்க முடியாத அளவுக்கு மரண அடி கொடுத்துள்ளனர் மக்கள்...

கொ மு க என்று ஒரு கட்சி.....

எந்த கொள்கை ,கோட்பாடுகளும் இல்லாமல் இரண்டு கட்சிகளிடமும் இறுதி வரை பேரம் பேசி திமுக 7 தொகுதிகளை தந்ததால் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது...போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் மக்கள் கொ மு க வுக்கு கும்மாங்குத்து கொடுத்து நாக் அவுட் செய்துள்ளனர்...

இன்னும் நீங்களெல்லாம் என்ன முடிக்கு ( மயிருக்கு ) கட்சி நடத்துகிறீர்கள்?

தெருவுக்கு தெரு நடக்கும் நாய்ச்சண்டைய போல அடித்துகொள்ளும் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட்ட63 தொகுதிகளில் வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டும் வெற்றியை கொடுத்து மற்ற தொகுதிகளில் ஓட ஓட அடித்து விரட்டி உள்ளனர் மக்கள்..

ஈழத்தமிழர் பிரச்சினைகளில் இரட்டை வேடம் போட்ட திருமாவளவனுக்கு பத்துக்கு பத்து தோல்வியை கொடுத்து மொத்து மொத்துனு மொத்தி விட்டனர் வாக்காளர்கள்...

இந்த மாதிரி சில்லறை கட்சிகளுக்கு சவுக்கடி கொடுத்த மக்களுக்கு நன்றி நன்றி....

17 மே 2011

முதல் நாளிலே ஆயிரம் கோடியை வீணாக்கிய ஜெ...


முதல்வராக பதவி ஏற்ற அன்றே 1000 கோடி ரூபாயை அலேக்காக தூக்கி வீசி இருக்கிறார் ஜெயலலிதா...

கருணாநிதியால் கட்டப்பட்ட(கருணாநிதி என்ன அவர் சொந்த பணத்தை போட்டா கட்டினார்?) தலைமை செயலகத்துக்கு செல்ல மாட்டேன் என்று கூறி பழைய தலைமை செயலகமான கோட்டையில் பதவி ஏற்றுள்ளார் ஜெயலலிதா...

நாளை அந்த தலைமை செயலகத்தை வேற எதற்காக அரசு பயன்படுத்தினாலும் அது கட்டப்பட்ட நோக்கம் வீண் தானே ?

இதற்க்கு பின்னால் இருக்கும் கண்ணாம்பூச்சி விளையாட்டை கொஞ்சம் பாப்போம்...

அரசுக்கு தேவையான முக்கிய அலுவலகங்கள் அனைத்தையும் இந்த கோட்டைக்குள் கொண்டு வரமுடியவில்லை என்பதால் ராணிமேரி கல்லூரி அமைந்துள்ள இடத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட புதிய தலைமை செயலகத்தை கட்ட முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆட்சியில் முடிவு செய்தார்.

ஆனால் அப்போது மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக அதற்கு முட்டுக்கட்டை போட்டது...

இந்த நிலையில் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்னர் ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகத்தை 1000 கோடிக்கும் மேல் செலவு செய்து உருவாக்கினார்...அது எல்லாம் மக்களின் வரிப்பணம்...

இப்போது ஜெயலலிதா கருணாநிதியின் மீது உள்ள வீம்பு, ஈகோ ,நீ கட்டி நான் என்ன ஆளுவது என்ற போட்டி (ஜெயலலிதா பாணியில் சொன்னால் சபதம் ) போன்றவற்றால் 1000 கோடியை வீணாக்கி உள்ளார்...

அது என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா ? நீங்க இரண்டு பேரும் சண்டை போட்டு விளையாட?எல்லாம் வியர்வை சிந்தி உழைக்கும் சாமான்ய மக்களின் வரிப்பணம்...

உங்களுக்குள் உள்ள ஈகோ மற்ற கருமாதிக்காக கருணாநிதி வீட்டுக்கு நான் போகமாட்டேன் என்று சபதம் போட்டால் அது நியாயம்...j

அதைவிட்டு விட்டுவிட்டு அவசர அவசரமாக கோட்டையில் இருந்த நூலகத்தை அகற்றிவிட்டு தலைமை செயலகத்தை மாற்றி அமைப்பது எந்த வகையில் நியாயம்..?

மக்கள் ஜெயலலிதாவிடம் எதிர்பார்ப்பது ஊழலற்ற ,சீரான சட்டம் ஒழுங்கு கொண்ட நல்லாட்சி மட்டுமே...

இது மாதிரி வீண் சபதங்கள் போட்டு மக்கள் வரிபணத்தை வீணடிப்பது அல்ல...

16 மே 2011

அரை பவுன் தங்கம் இலவசம்.....ஜெயலிதாவின் முதல் கையொப்பம்...


கோட்டையில் முதல்வராக பதவி ஏற்ற ஜெயலலிதா தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான தாலிக்கு 4 கிராம் இலவச தங்கத்தை வழங்கும் திட்டத்தில் கையொப்பமிட்டார்....

மேலும் இளநிலை, டிப்ளோமா படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூபாய் 25000 லிருந்து ரூபாய் 50000 க்கு உயர்த்தி ஆணையிட்டார்... மேலும்


ஏழைகளுக்கு மாதம் 20 கிலோ அரிசி இலவசம் ,


பரம ஏழைகளுக்கு ! மாதம் முப்பத்தி ஐந்து கிலோ அரிசி இலவசம்,


முதியோர் உதவி தொகை 500 லிருந்து 1000 மாக உயர்வு,


மீனவர் உதவி தொகை 1000 லிருந்து 2000 மாக உயர்வு ,

மகப்பேறு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் ஆறு மாதம் விடுமுறை போன்ற கோப்புகளிலும் கையொப்பமிட்டார்....


ஆரம்பமெல்லாம் நல்லாத்தான் இருக்கு.....

ஜெ ..ஜே ..ஆவாரா ???


இன்று பதவி ஏற்கிறார் ஜெயலலிதா....அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர்....அதில் 24 பேர் புதுமுகங்கள்....நல்ல முயற்சிதான்.....

பழையவர்களே மீண்டும் மந்திரி ஆனால் ஊழலை கட்டுபடுத்த முடியாது என ஜெயலலிதா நினைத்து இருக்கலாம்...

பதவி ஏற்றவுடன் சட்டம் ஒழுங்கு சீர் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.....நல்ல விசயம்தான்....கொலை, கொள்ளைகள் சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிலையில் இது மிகவும் அவசியமான ஒன்று....ஆனால் வழக்கம்போல தனக்கு வேண்டப்பட்டவர்களை காவல் துறை உயர் பதவிகளில் அமர்த்தாமல் நேர்மையான அதிகாரிகளை அமர்த்தினால் மட்டுமே ஜெ நினைத்ததை சாதிக்க முடியும்...

அடுத்ததாக மின்சார தட்டுபாடு சீர் செய்யப்படும் என்று சொல்லி இருக்கிறார்...இது மிக மிக முக்கியமான ஒரு விஷயம்...திமுக தோல்விக்கே காரணமான ஒரு விஷயம்....ஆனால் தற்போதைக்கு இது சாத்தியமாகுமா என்றால் இயலாத விசயம்தான்...பார்ப்போம் என்ன செய்ய போகிறார் என்று..

அடுத்ததாக தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறி இருக்கிறார்....வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடாமல் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து சொன்னதில் பாதியாவது நிறைவேற்றுவார் என்பதில் ஐயமில்லை....

சென்ற ஜெ ஆட்சியில் மந்திரிகள் நிம்மதியாக தூங்கவில்லை...அவர்கள் பதவியில் இருக்கிறார்களா இல்லையா என்பதை காலையில் செய்தித்தாள்களை படித்துதான் தெரிந்துகொண்டார்கள்....அதுமாதிரி வருடத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மந்திரிகளை மாற்றாமல் அவர்களை சுதந்திரமாக செயல்படவிட்டால் அவர்களும் தங்களுக்கு செய்தது போக மக்களுக்கும் நல்லது செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்...

ஆனால் ஒன்று...

இதே கருணாநிதி வென்று இருந்தால் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் அன்றே அவரை சந்தித்து வாழ்த்து சொல்லி இருப்பார்கள்....அது இன்றி வரை ஜெயலிதாவின் கூட்டணி கட்சிகள் செய்யவில்லை....தலைவர்கள் யாரும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவில்லை....ஒருவேளை ஜெயலலிதா நம்மை மதிக்க மாட்டார் என அவர்கள் எண்ணி இருக்கலாம்...

இதுமாதிரி அடுத்தவர்களை ஜெயலலிதா மதிக்கமாட்டார் என்ற எண்ணம் முதலில் மாற வேண்டும்...அதற்கு அவர் இன்னும் கீழே இறங்கி வர வேண்டும்...

அடுத்ததாக சென்ற முறை செய்ததுபோல சில அதிரடி சட்டங்களை ( எஸ்மா,டெஸ்மா,மத மாற்ற தடை சட்டம், )செய்யாமல் இருந்தாலே ஜெக்கு ஜேதான்.....

செய்வாரா ஜெ ?

15 மே 2011

புதிய அமைச்சர்கள் பட்டியல்.....வெளியிட்டார் ஜெயலலிதா...


இது உண்மையான மந்திரிசபை லிஸ்ட் தான்.....ஆனால் இவர்களில் யார் யார் எவ்வளவு நாள் அமைச்சராக இருப்பார்கள் , எப்போது தூக்கப்படுவார்கள் என்பது கிளி சீட்டு எடுப்பது போல ஜெயலலிதா மாற்றி கொண்டே இருப்பார்....

ஜெயலலிதா : முதலமைச்சர்

ஒ பன்னீர்செல்வம் : நிதித்துறை....

செங்கோட்டையன்: விவசாயம்

கே பி முனுசாமி: உள்ளாட்சி துறை

பி தங்கமணி : வருவாய்துறை

நத்தம் விஸ்வநாதன்: மின்சார துறை

வைத்தியலிங்கம் : வீட்டு வசதி துறை

சி வி சண்முகம்: பள்ளி கல்வி துறை

கே வி ராமலிங்கம்: பொதுப்பணித்துறை

கருப்பசாமி : கால்நடைத்துறை

செந்தில் பாலாஜி : போக்குவரத்துத்துறை

சுப்பையா : சட்டத்துறை

வி எஸ் விஜய் : மக்கள் நலவாழ்வுத்துறை

ஆர் பி உதயகுமார் : தகவல் தொழில்நுட்பம்

செல்லூர் ராஜு: கூட்டுறவுத்துறை

மரியம்பிச்சை : சுற்றுசூழல்துறை

சண்முகவேல்:தொழில்துறை

செல்வி ராமஜெயம்: சமுகநலம்

பச்சைமால் : வனத்துறை

சின்னையா : பிற்படுத்த பட்டோர் நலன்


என் சுப்ரமணியன் : ஆதிதிராவிடர் நலன்

கோகுல இந்திரா : வணிக வரித்துறை

பி வி ரமணா : கைத்தறித்துறை

என் ஆர் சிவபதி : விளையாட்டுத்துறை

அக்ரி கிருஸ்ணமூர்த்தி : உணவுத்துறை

பழனியப்பன் : உயர் கல்வி துறை

எஸ் பி சண்முகநாதன் : அறநிலையத்துறை

எம் சி சம்பத் : ஊரக தொழில்துறை

எஸ் பி வேலுமணி : சிறப்பு திட்ட அமலாக்கம்

ஜி செந்தமிழன் : செய்தித்துறை

ஜெயபால் : மீன்வளத்துறை

செல்லபாண்டியன் : தொழிலாளர் நலன்

புத்தி சந்திரன் : சுற்றுலாத்துறை

எடப்பாடி பழனிசாமி : நெடுஞ்சாலை துறை






வேண்டாம்.....வலிக்குது....அழுதுடுவேன்....அடிவேலுவான வடிவேலு...





திமுகவின் தோல்வி குறித்து நேற்று ரூம் போட்டு யோசித்து வடிவேலு கொடுத்த பேட்டி......

ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பி இருக்கிறார்கள். (ஹி ஹி...இன்னும் எவ்வளவு பேருடா இதே சொல்ல போறீங்க...)அது, நடந்து இருக்கிறது. தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். இந்த நேரத்தில், தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.(வாங்குன காசுக்கு மேலே நல்லா கூவுரதுனா இதுதான்...)

அதிமுகவை வைத்துத்தான் விஜயகாந்த் ஜெயித்தார்

தி.மு.க.வைப்போல் அ.தி.மு.க.வும் ஒரு பெரிய கட்சி.(கண்டு பிடித்துவிட்டார்யா கொலம்பஸ்...) அந்த கட்சியை வைத்துதான் விஜயகாந்தின் கட்சியும் ஜெயித்து இருக்கிறது. விஜயகாந்தை வைத்து அ.தி.மு.க. ஜெயிக்கவில்லை.(அப்படின்னா பெரிய கட்சியான திமுகவை வைத்துதான் காங்கிரஸ் கட்சியும், பாமகவும் தோல்வி அடைந்ததா?)

ஒரு உண்மையான முதல்வருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தேன். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால், இப்போது ஜெயலலிதா அம்மா முதல்வர் ஆகியிருக்கிறார். (ஜெயலலிதாவின் அம்மா சந்தியாதான் இறந்துவிட்டாரே...!)

இந்த சூழ்நிலையில், விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர்கள் மீண்டும் என் வீட்டின் மீது கல்வீசி தாக்க முயன்று இருக்கிறார்கள். என் வீட்டையே சுற்றி சுற்றி வருகிறார்கள்.(திரும்ப திரும்ப பேசுற நீ ....)

வெளில வாடா, எத்தனை நாளைக்குடா உனக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் என்று பேசுகிறார்கள், மிரட்டுகிறார்கள். நான் என்ன சொல்கிறேன் என்றால் (வேண்டாம் வலிக்குது......அப்புறம் அழுதுடுவேன்...), உனக்கு மக்கள் தீர்ப்பு கொடுத்துட்டாங்க. ஆனால் அது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். என் வீட்டில் புகுந்து அடிப்பதற்கோ, என்னை வெட்டுவதற்கோ, என் வீட்டாரை தாக்குவதற்கோ அவர்கள் தீர்ப்பு கொடுக்கவில்லை. அது தப்பான விஷயம்.

தேர்தலில் ஜெயித்தால், அடுத்து மக்களுக்கு என்ன நன்மைகள் செய்வது? என்று யோசிப்பவர்தான் நல்ல தலைவர். ஜெயித்து விட்டோம் என்பதற்காக, என்னையும், என் குடும்பத்தினரையும் அடிப்பதற்கு அலைவது, எந்தவிதத்தில் நியாயம்?( ஆமாம் ...செத்த பாம்ப அடிக்குறது சின்ன புள்ள தனமாவுள்ள இருக்கு...)

அவருடைய டி.வி. மூலம் மூன்று பேர், என்னை பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். (சிங்கமுத்து இப்ப உனக்கு மூணு பேரா தெரியுறாரா?)விஜயகாந்த் இனிமேலாவது நல்ல தலைவராக நடந்துகொள்ள வேண்டும். என் வீட்டுக்கு ஆள் அனுப்புவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்...

எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு விஜயகாந்த்தான் முழுப் பொறுப்பும்.( விஜயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகளை தவிர யாரையும் சுட மாட்டார்....டோன்ட் வொர்ரி ...பீ ஹேப்பி....)

எனது வீட்டுக்குப் பாதுகாப்பு இல்லை. பாதுகாப்புக்கு இருந்தவர்கள் போய் விட்டார்கள். எனது சென்னை வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து மிரடடியுள்ளனர். எனவே எனக்கும், எனது வீட்டாருக்கும் போலீஸார் உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் வடிவேலு....( பேசாம நா பேசினது எல்லாம் சும்மாச்சுக்கும் விளையாட்டுக்குத்தான் ......அழகிரி சீரியஸா இருந்ததுனால அவரை சிரிக்க வைக்க அது மாதிரி பேசினேன் என்று சொல்லி விஜயகாந்திடம் சரண்டர் ஆக வேண்டியதுதானே....)

14 மே 2011

அமோக வெற்றி அடைந்த அதிமுகவும், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்த திமுகவும்....


சட்டசபை தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 147 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.....திமுக இருபத்தி மூன்று இடங்களை மட்டுமே வென்று படு தோல்வி அடைந்தது...

இதன்மூலம் அதிமுகவுக்கு அடுத்த படியாக அதிக இடங்களை வென்ற தே மு தி திமுகவை பின்னுக்கு தள்ளி எதிர்க்கட்சி அந்தஸ்தை அடைந்துள்ளது...கருணாநிதியை மக்கள் எதிர்க்கட்சி தலைவராக கூட அங்கீகரிக்காமல் அந்த இடத்தை விஜயகாந்துக்கு அளித்துள்ளனர்.....

திமுகவின் குடும்ப ஆதிக்கம், ஸ்பெக்ட்ரம், பவர் கட் போன்றவற்றின் மூலம் தன்னை தானே தோற்கடித்து ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்தி உள்ளார் கருணாநிதி.....

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசாவை காப்பாற்ற முயற்சிக்காமல் கட்சியை விட்டு தூக்கி இருந்தால் ,கடைசி மூன்று மாத காலத்தில் தனது பேரன்களை சினிமா துறையில் இருந்து விலகி இருக்க செய்து இருந்தால், தேர்தலுக்கு ஆறு மாத காலத்துக்கு முன்பாவது மின்சார பற்றாக்குறையை ஏதாவது செய்து சரி செய்ய முயன்று இருந்தால் ( முடியாத விசயம்தான்...),காங்கிரஸ் கட்சியையும், பாமகவையும் அடித்து விரட்டி இருந்தால் நிச்சயம் கருணாநிதி எதிர் கட்சி தலைவராவது ஆகி இருக்கலாம்....

கனிமொழிக்காக ,ராசாவுக்காக ,தனது குடும்பத்தினருக்காக தமிழக மக்களுக்கு செய்த சில நல்ல திட்டங்களின் மகசூலை அறுவடை செய்யாமல் கட்சியை கருகி போக செய்துள்ளார் கருணாநிதி.....

மக்கள் நல்ல முடிவையும்,தனக்கு ஓய்வையும் அளித்து இருப்பதாக சொல்லி இருக்கும் கருணாநிதி அதற்க்கான காரணங்களை என்று களை எடுக்க போகிறார்?

பல நல்ல திட்டங்களை செய்தும் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமல் அதல பாதாளத்துக்கு போனதற்கான காரணங்களை என்று கருணாநிதி களை எடுக்க போகிறார்?

அவருக்கே வெளிச்சம்...

வெற்றி அடைந்த அதிமுக நல்லாட்சி தரவேண்டும்....ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் பல...




12 மே 2011

ஜெயலலிதாவின் மந்திரிசபை லிஸ்ட்.....


அதிமுக ஆட்சி அமைத்தால் யார் யார் மந்திரிகள், யார் யாருக்கு என்ன துறைகள் என்று ஜெயலலிதா ஒரு லிஸ்ட் போட்டு வைத்துள்ளார்.....அந்த லிஸ்டின்படி ...

.பன்னீர் செல்வம்: ஊமையர் சங்க நல வாழ்வு துறை ..


செங்கோட்டையன் : தலையாட்டும் துறை


ஜெயக்குமார்: காலில் விழுவோர் துறை...


பொள்ளாச்சி ஜெயராமன்: கூழை கும்பிடு போடுவோர் நலவாழ்வு துறை


நயினார் நாகேந்திரன்: கை கட்டி நிற்போர் துறை


வளர்மதி: ரவுடிகள் நலவாழ்வு துறை


பழ கருப்பையா : துதி பாடுவோர் துறை....


ராஜ கண்ணப்பன்: சுகன்யா ( சாரி ..தவறா எழுதிட்டேன்...)நடிகர் நடிகைகள் நல வாழ்வு துறை


கு கிருஷ்ணன்: பல்டி அடிப்போர் நல வாழ்வு துறை...


ஜெயலலிதா: இவர்கள் எல்லாரையும் ஆட்டுவிக்கும் ரிங் மாஸ்டர் துறை...தூய தமிழில் சொன்னால் முதலமைச்சர்.....

11 மே 2011

கருணாநிதியா ஜெயலலிதாவா ?ஆளப்போவது யார் ?இறுதி கருத்து கணிப்பு முடிவுகள்.....

ஒரே குழப்பமா இருக்கு.....யாரு ஆட்சியை பிடிப்பார்கள் என்பதை விட இந்த கருத்து கணிப்புகளில் எது உண்மையாக போகிறது என்பதை நினைத்துதான்...முதலில் திமுக வின் இன்னொரு முரசொலியான நக்கீரன்....கருத்துகணிப்பு...ஆனால் ஒன்று நம்ம டி ஆர் தேர்தலை புறக்கணித்த ஒரே காரணத்தினால்தான் மேற்குறிய இருவருக்குமே வாய்ப்பு என்பதில் கடுகளுவும் சந்தேகம் இல்லை!!

திமுக கூட்டணிக்கு 137

நக்கீரன் நடத்திய எக்ஸிட் போல் கணிப்பின்படி திமுக கூட்டணிக்கு 137 இடங்கள் கிடைக்கலாம்.

அதிமுக கூட்டணிக்கு 89

அதிமுக கூட்டணிக்கு 89 இடங்கள் கிடைக்கலாம்.

திமுகவுக்கு மட்டும் இத்தேர்தலில் 84 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸுக்கு 24, பாமக 19, விடுதலைச் சிறுத்தைகள் 6, முஸ்லீம் லீக் 3, மூவேந்தர் முன்னேற்றக் ழகம் 1 என மொத்தம் 137 இடங்களை திமுக பிடிக்கிறது.

அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு மட்டும் 73 இடங்கள் கிடைக்கும். தேமுதிகவுக்கு 7, கொங்கு இளைஞர் பேரவைக்கு 1, சிபிஎம்முக்கு 5, சிபிஐக்கு 2, மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு சீட் என மொத்தம் 89 இடங்கள் கிடைக்கும்.

சிஎன்என் - ஐபிஎன்:

முதல் கட்டமாக சிஎன்என் -ஐபிஎன் - தி வீக் தனது எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட ஆரம்பித்துள்ளது. இரவு 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 132 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 114 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் சொல்கிறது...

கருணாநிதிக்கு ஆதரவு:

யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்விக்கு கருணாநிதிக்கு சாதகமாக 48 சதவீதத்தினரும், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 38 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

யார் மோசமான முதல்வர் என்ற கேள்விக்கு ஜெயலலிதா என 34 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். கருணாநிதி என 33 சதவீதத்தினர் கூறியிருந்தனர்.( அப்பாடா .....ஒரு சதவீதம்தான் வித்தியாசம்)

அதேசமயம், மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்கள் யார் என்பதில் கருணாநிதியை விட ஜெயலலிதாவுக்கு 5 சதவீத ஆதரவு அதிகம் கிடைத்துள்ளது.

யார் ஆட்சியில் குடும்ப ஆதிக்கம் அதிகம் என்ற கேள்விக்கு கருணாநிதி ஆட்சியில் என 47 சதவீதத்தினரும், ஜெயலலிதா ஆட்சியில் என 18 சதவீதத்தினரும் கூறியிருந்தனர்.(குடும்பமே இல்லாமல் இவ்ளோ சதவீதமா?)

ஹெட்லைன்ஸ் டுடே:

திமுக 130 இடங்கள் வரை பெறும் என்கிறது ஹெட்லைன்ஸ் டுடே - ஓஆர்ஜி கணிப்பு. இதுவரை இவர்கள் மூன்று கருத்துக் கணிப்புகளை நடத்திவிட்டனர். அவற்றில் இரண்டில் திமுகவுக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன.

இவர்கள் கணிப்புப் படி, திமுக கூட்டணி - 115 முதல் 130 வரை இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கும். அதிமுக கூட்டணிக்கு 105 முதல் 120 வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆட்சியைப் பிடிப்பதில் திமுக - அதிமுக கூட்டணிகள் இடையே கடும்போட்டி நிலவும் என்றும் ஆனால், திமுகவுக்கு வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ்:

நியூஸ் எக்ஸ் சேனல் முடிவுகளில் அதிமுக கூட்டணிக்கு 176 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 64 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு இந்த கணிப்பு முடிவு வெளியிடுவதை நிறுத்திக் கொண்டது இந்த சேனல். 2 ஜிதான் திமுகவுக்கு பெரும் வீழ்ச்சி என்று கூறியது இந்த சேனல்.

ஸ்டார் நியூஸ் - நீல்சன் கணிப்பு:

ஸ்டார் நியூஸ் மற்றும் நீல்சன் மேற்கொண்ட கணிப்பின்படி திமுக கூட்டணி 124 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 110 தொகுதிகளில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. எப்படியும் மீண்டும் திமுக ஆட்சியே தமிழகத்தில் அமையும் என்கிறது ஸ்டார் நியூஸ் கணிப்பு.


பார்ப்போம் இவற்றில் எது ஓரளவாவது உண்மையாக போகிறது என்பதை....

10 மே 2011

ராசா அப்ரூவர் ஆவாரா?


ராசா தலித் என்பதாலே "பழிவாங்க படுகிறார் (பலியா இல்ல பழியா"கருணாநிதிக்கே வெளிச்சம்) என்று ஸ்பெக்ட்ரம் ஊழலை ஜாதி அரசியலாக்க நினைத்த கருணாநிதி தற்போது மகளுக்காக ராசாவை காவு கொடுக்க தயாராகிவிட்டார் வெளிப்படையாக.....ராசாதான் குற்றவாளி என்பது கனிமொழிக்காக வாதாடிய வக்கீலின் வாதமாக இருந்தாலும் கனிமொழி நிரபராதி ஆக வேண்டும் என்பதற்காக ராசா குற்றவாளி ஆகட்டும் என்பதே கருணாநிதியின் வாதம் என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.....

கனிமொழிக்காக வாதாடிய ராம் ஜெத்மலானி ராசாதான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு எனவும் கனிமொழிக்கும் கலைஞர் டிவிக்காக வாங்கப்பட்ட இறநூறு கோடி ரூபாய் பணத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என முழு கோழியை முட்டைக்குள் அடைக்க முயற்சித்துள்ளார்......

இப்போது கலைஞர் என்ன சொல்வார்? இது வக்கீலின் வாதம் மட்டுமே என்றுதான் சொல்வார்...(இனி சொல்ல போகிறார்)கட்சியை விட ராசாதான் பெரிதாக பட்டார் அப்போது....எல்லாவற்றையும் விட மகள்தான் பெரிதாக படுகிறார் இப்போது....

ராசாதான் குற்றவாளி கனிமொழி இல்லை என்பதே வக்கீலின் வாதம்....அதுவே கருணாநிதியின் எண்ணம், கருத்து ,விருப்பம் .....இப்போது கருணாநிதியின் கவனம் கனிமொழி உள்ளே போகக்கூடாது என்பதில்தானே தவிர ராசா குற்றவாளி இல்லை என்பதில் அல்ல.....

தனக்கு ஆபத்து வந்தால் யாரையும் காவு கொடுக்க கருணாநிதி தயங்க மாட்டார் என்பதை ராசா உணர்ந்து இருப்பார்....இப்போது தன்னை காத்து கொள்ள ராசா அப்ரூவர் ஆகி எல்லா உண்மையையும் வெளியே சொல்வாரா?அப்படி சொன்னால் கனிமொழி, ராசாத்தி , மற்றும் வெளிப்படையாகவும்,மறைமுகமாகவும் ஸ்பெக்ட்ரம் பணத்தில் ஆதாயம் அடைந்த பலரும் கம்பி என்னும் சூழ்நிலை உருவாகும்....


எப்படி சொல்வார்....சாதிக் பாட்சாவுக்கு நிகழ்ந்த இயற்கை மரணத்தை !!? போல இனி இவ்வழக்கில் யாரும் இயற்கை மரணம் அடைய வாய்ப்புகள் உள்ளது என அவர் அறியமாட்டாரா என்ன?

09 மே 2011

டோனியால் இந்த நாடே குடிக்கிறதா?


மதுபான விளம்பரத்தில் நடித்ததற்காக தோனி தங்கியிருந்த ஹோட்டலின் முன்பு பசுமை தாயகம் மற்றும் பா ம க வினர் (இரண்டும் ஒன்றுதான்) ஆர்ப்பாட்டம் நடத்தி மதுவை ஒழித்தே விட்டனர்!! என்ன ஒரு போராட்டம்!!

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் எத்தனை பேர் குடிகாரர்கள் இல்லை என சொல்ல முடியுமா அவர்களால்?தமிழ்நாட்டில் அரசே மதுபானத்தை விற்று பொது சேவை செய்து வருகிறதே!!அதை தடுத்து நிறுத்த முடியுமா உங்களால்?அதை எதிர்த்து தலைமை செயலகம் முன்பு போராட்டம் நடத்த வேண்டியது தானே?.....அல்லது ஒவ்வொரு டாஸ்மாக் முன்னாடி நின்று மது விற்காதே என ஆர்ப்பாட்டம் நடத்த முடியுமா உங்களால்?

டாஸ்மாக்குக்கு வரும் குடிமகன்களிடம் மது குடிக்காதே என அறிவுரைதான் சொல்ல முடியுமா உங்களால்?உங்கள் கட்சியில் யாருமே குடிகாரர்கள் இல்லை என அறிக்கையாவது வெளியிட முடியுமா ?முடியாது...

சாக்கடையை ஒழிக்காமல் கொசுக்களை ஒழித்து என்ன பயன்? மதுபானத்தை ஒழிக்காமல் மதுபான விளம்பரத்தில் நடிப்பவரை திட்டி என்ன பயன்? டோனி நடிக்காட்டி வேறொருவர் நடிக்கத்தானே போகிறார்?இல்லை டோனி நடிக்காமல் இருந்தால் யாரும் குடிக்காமல் இருக்க போகிறார்களா?டோனி நடிப்பதால் இதுவரை மது அருந்தாமல் இருக்கும் நல்லவர்கள் புதிதாக மது அருந்த போகிறார்களா?யாரும் யாரையும் திருத்த முடியாது...அவர்களால் திருந்தினால்தான் உண்டு...

மது நாட்டையும், வீட்டையும் சீரழிக்கிறது ....அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை...மதுவிலக்கை நம் அரசு அமுல்படுத்துமா?

டோனி விளம்பரத்தில் நடிப்பது அவரின் தனிப்பட்ட உரிமை....அதில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

சும்மா விளம்பரத்துக்காகவும் ,பரபரப்புக்காகவும் இது போன்ற வீண் போராட்டங்களில் ஈடுபடுவதை பா ம க வினர் எப்போது விட போகிறார்கள்?

08 மே 2011

திமுகவே ஜெயிக்கும்...சூப்பர் சுவாமி அடித்த பல்டி...


தேர்தல் முடிவு வெளியாகட்டும். (நீங்களாவது உங்கள் கட்சி வேட்பாளருக்கு ஒட்டு போட்டீர்களா?) பின்னர் அதிமுக உடைந்து போய் விடுவதை தமிழக மக்கள் காண்பார்கள் என்று ஜனதாக் கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.அவர் அடித்த காமெடி கும்மிகளை பார்ப்போம்.....


ஜெயலலிதாவால் ஒரு வேட்பாளர் பட்டியலைக் கூட சுயமாக தயாரிக்க முடியாத நிலை.(அதற்காகத்தான் ஒன்றுக்கு இரண்டு வேட்பாளர் பட்டியல் வெளியிட்டாரோ?) அதையும் கூட சசிகலாவைக் கேட்டுத்தான் அவர் செய்தார். (கேட்டு செய்வதற்கு அது என்ன சமையல் குறிப்பா?)சசிகலாவிடமே பட்டியல் தயாரி்ப்புப் பணியையும் கொடுத்தார். இப்படிப்பட்டவரால் அரசியலுக்கு எந்த லாபமும் இல்லை.(அரசியலுக்கு யாராலுமே லாபம் இல்லை...அரசியலால் அரசியல்வாதிகளான உங்களுக்குதனே லாபம் சூப்பர் சுவாமி ) அவர் விலக வேண்டும்.(விலகுவதற்கு இது என்ன அரசாங்க வேலையா? இல்ல ஜெயலலிதா கிரிக்கெட் விளையாடுகிறாரா ?) அப்போதுதான் அரசியல் உருப்படும். அதிமுக உருப்படும்.(முதலில் உங்கள் கட்சியை உருப்பேற்ற வழியை பாருங்கள்)

சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுக உடைந்து போய் விடும். கூட்டணி குலைந்து போய் விடும். விஜயகாந்த் முதல் ஆளாக வெளியேறி விடுவார்.(ஏன் டாஸ்மாக்குக்கு தாமதமாகிவிடுமா?)

என்னைப் பொறுத்தவரை மீண்டும் திமுக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும், ஆட்சி அமைக்கும் என்றார் சாமி..(இதாண்டா அந்தர் பல்டி....)

07 மே 2011

ஒசாமாவுக்காக தொழுகை....கண்டனத்துக்குரிய செயல்....


ஒசாமாவுக்காக நேற்று சென்னையில் ஜனாசா( இறுதி சடங்கு)தொழுகை நடந்துள்ளது...தமிழ்நாட்டில் மாற்று மதத்தினரும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நேரத்தில இந்த சம்பவம் முஸ்லிம்களிடையே ஒருவித தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது ......

ஒசாமா ஒரு தீவிரவாதி,உலகமே பயந்த பயங்கரவாதி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.....
நமது உறவினர்களில், நமது நண்பர்களில் யாரேனும் ஒசாமா நடத்திய குண்டு வெடிப்பு, இரட்டை கோபுர தாக்குதல்களில் உயிர் இழந்து இருந்தால் இழப்பின் வலி நமக்கு தெரிந்து இருக்கும்....

ஒசாமாவுக்கு எதிரி அமெரிக்கா என்றால் உயிர் இழந்த மக்கள் அமெரிக்காவில் பிறந்ததுதான் அவர்களின் தவறா?இஸ்லாம் ஒருபோதும் அடுத்த மதத்தினர் மீது தாக்குதல் நடத்த சொன்னதில்லை...அப்பாவி மக்களை கொள்வதை இஸ்லாம் ஒருபோதும் ஏற்று கொள்வதில்லை.....அப்படி இருக்கையில் ஆயிர கணக்கான உயிர்களை பலிகொண்ட ஒசாமா அமெரிக்காவை எதிர்த்ததால் மட்டும் நல்லவராகிவிட முடியுமா?

ஒசாமாவின் அமெரிக்க எதிர்ப்பை நானும் ஆதரிக்கிறேன்....ஆனால் அப்பாவி மக்களை கொன்ற ஒசாமாவை எதிர்க்கிறேன்....அவரின் உடலை இறுதி தொழுகை நடத்தாமல் கடலில் வீசிய அமெரிக்காவின் செயல் கண்டனத்துக்கு உரியதே ....ஆனால் அதற்காக எல்லா மதத்தினரும் சகிப்புத்தன்மையோடும், ஒற்றுமையோடும் வாழும் தமிழ்நாட்டில் ஒசாமாவுக்காக நடத்தப்பட்ட தொழுகை தேவையற்ற ஒன்றே .....தவிர்க்க பட வேண்டிய ஒன்றே.....கண்டனத்துக்கு உரிய ஒன்றே....

06 மே 2011

அடுத்தவாரம்.....இதே நாள்....பலதலைகள் உருளும்...


அடுத்த வாரம் இதே நாள் இதே நேரத்தில் பல தலைகள் அருவாள் ,கத்திபோன்ற ஆயுதங்கள் இல்லாமல் வெறும் விரல்களினால் விழ போகின்றன......

நாம் ஒட்டு போட்ட விரல்களினால்.......

ஓய்வில் இருந்த ஜெயலலிதா மக்களுக்காக உழைக்க !!! வரலாம்....

மக்களுக்காக உழைத்த கருணாநிதி !!!!ஓய்வெடுக்க போகலாம்!

பல கிரிமினல்கள் சட்ட மன்ற உறுப்பினர்களாக பரிணாம வளர்ச்சி பெறலாம்!

சில ஊழல்வாதிகள் கம்பி எண்ணுவதற்கு தயாராகலாம்....

உன்னால் நான் தோற்றேன்,என்னால் நீ வென்றாய் என கூட்டணி கட்சிகள் காலை வாருவதற்க்கு கடுப்பில் நிற்கலாம் .....

ரிசல்ட் சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் ரபி பெர்னார்ட் எந்தவித சலனமும் இல்லாமல் அதிமுக முன்னணியில் இருப்பதாக ஜெயா டிவி யில் பேசிக்கொண்டு இருக்கலாம்.....

சன் டிவி ,கலைஞர் டிவி வகையறாக்கள் தங்கள் பட விளம்பரங்களை கொஞ்ச நேரம் ஒத்தி வைத்துவிட்டு நக்கீரன் கோபால்,வடிவேலு,வீரமணி போன்றவர்களுடன் தேர்தல் சிறப்பு நிகழ்சிகளை வழங்கலாம்....

வெற்றி பெற்ற கட்சியினரும், தோல்வியுற்ற கட்சியினரும் ஒரு விசயத்தில் ஒற்றுமையாக இருக்கலாம்....வேறு என்ன ...?தண்ணியில் மிதப்பதுதான்....

05 மே 2011

என்னை குறி வைத்து வீழ்த்த முடியாது....கனிமொழி


என்னை சுலபமாக வீழ்த்தி விடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம்( ஆமாம் ஆமாம் ...ஊழல் கரை படியாத உன்னத பெண் அல்லவா நீங்கள்!) என்று திமுக ராஜ்யசபா எம்.பியும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக குற்றம் சாட்டப்பட்டுள்ளவருமான கனிமொழி கூறியுள்ளார்.


என்னை சிபிஐ கைது செய்தால் அதையும் எதிர்கொள்ள நான் தயார் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.

(கைது செய்தால் உங்கள் எதிரில் நின்றுதானே கைது செய்ய முடியும் ?)


ஏற்கனவே ராசா கைதால் திமுக வட்டாரம் சலசலப்படைந்தது. இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்பட்டிருப்பதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து திமுகவின் முக்கியத் தலைவர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர். டி.ஆர்.பாலு, மு.க.அழகிரி ஆகியோரது தலைமையில் பல்வேறு வகையான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கனிமொழியும் தனது கணவர் அரவிந்தன் மற்றும் மகனுடன் டெல்லி வந்துள்ளார்.


இந்த நிலையில், தன்னை யாரும் அவ்வளவு சுலமாபக வீழ்த்தி விட முடியாது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், சிபிஐ என்னைக் கைது செய்தால் அதை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன், அதை எதிர்த்துப் போராடுவேன். அதற்காக முன்கூட்டியே முன்ஜாமீன் வாங்கும் எண்ணமெல்லாம் இல்லை.

இந்த வழக்கு குறித்து ஆரம்பத்திலிருந்தே நான் பலமுறை விளக்கி வருகிறேன். ஊகத்தின் அடிப்படையில் யாரையும் குற்றம் சாட்ட முடியாது. இந்த வழக்கில் கோர்ட் என்ன முடிவெடுக்கிறது என்பதை நாளை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போதே கோர்ட் என்ன முடிவெடுக்கும் என்பது குறித்து நான் எதுவும் கூற முடியாது.

என்னைக் கைது செய்ய சிபிஐ விரும்பினால், பார்க்கலாம்(மக்களே விரும்புகிறார்களே!!). சட்டப்பூர்வமாக எதையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். எதையும் சட்ட ரீதியாகவே நான் சந்திப்பேன். ( ஆமாம் கேஸ் இருந்தா சட்ட ரீதியாத்தான் சந்திக்க வேண்டும்...இதில் என்ன சந்தேகம்?)

என் மீதான குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது, நானும் சீரியஸாகவே இதை எதிர்கொண்டுள்ளேன்.(மக்களும் சீரியசாதான் பார்த்து கொண்டு இருக்கின்றினர்) இந்த குற்றச்சாட்டிலிருந்து நான் நிச்சயம் வெளி வருவேன்.

நான் இந்த வழக்கில் குறி வைத்து வேண்டும் என்றே சேர்க்கப்பட்டிருக்கிறேனா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் குற்றப்பத்திரிக்கையில் ஏன் இத்தனை பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன என்பதுதான் எனக்குப் புரியவில்லை. அத்தனை பேர் இருந்தும் கூட என் மீது மட்டும் அதிக வெளிச்சம் பாய்வதும் ஏன் என்று புரியவில்லை.( கோடி கோடியா கொள்ளை அடிச்சா அப்படிதான்!)

ஆனால் என்னை மட்டும் குறி வைத்து வீழ்த்தி விடலாம் என்று யாராவது நினைத்தால் அது நிச்சயம் தவறாகவே முடியும்.( ஆமாம் குறி வைத்து வீழ்த்த நீங்கள் என்ன குருவியா?)

எனது குடும்பத்தினர் முழுமையாக எனக்கு ஆதரவாக உள்ளனர்.(அப்ப அழகிரி யார் குடும்பம் ?) எனது தந்தை டெல்லிக்கு வருவதாக கூறி்னார்.( எதற்காக ஜெயிலுக்கு வழி அனுப்பவா? )நான்தான் மறுத்து விட்டேன் என்றார் கனிமொழி.(