07 நவம்பர் 2012

நாளையே நாம் கைது செய்யப்படலாம்!கரைந்து கொண்டுஇருக்கும் சுதந்திரம்!!......



மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து ஊழலின் தாயகமாக இந்தியாவை மாற்றி கொண்டு இருக்கும் அரசியல்வாதிகளை பற்றி இனி எந்த உண்மையை எழுதினாலும் அவர் நாளையே கைது செய்யப்படும் ஆபத்து உள்ளது....

அண்ணல் காந்தி அவர்கள் இந்தியாவுக்கு சுதந்திரத்தோடு  பேச்சுரிமை,எழுத்துரிமை ஆகியவற்றையும் சேர்த்துதானே  வாங்கி கொடுத்தார்?!இதெல்லாம் சேர்ந்ததுதானே சுதந்திரம்?இந்த அடிப்படை உரிமைகள் I-T SECTION 66 A என்ற விதிப்படி இனி அரசியல்வாதிகளுக்கு தலையாட்டி பொம்மையாக செயல்பட போகிறது.....

வாருங்கள் குரல் கொடுப்போம்....நம் உரிமைகளை  பேணி காத்திடுவோம்....இதற்கு முன்பே  பதிவர்களுக்கு என நிச்சயம் ஒரு சங்கம் வேண்டும் என்று சென்னை பதிவர் மாநாடு நடைபெற்ற சமயத்திலே நான் பதிவு எழுதி இருகிறேன்..அதற்கு இப்பொது நேரம் கனிந்து இருக்கிறது..வாருங்கள் ஒன்றுபடுவோம் நண்பர்களே...

 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், ( Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society) கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில்  அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்  இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.

நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.  இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 

நன்றி : தருமி ஐயா 




3 கருத்துகள்:

  1. சலாம் சகோ.NKS.ஹாஜா மைதீன்!

    நமது கண்டனங்களும் உண்டு..!!!

    நன்றி !!!

    பதிலளிநீக்கு
  2. பதிவர்கள் ஒன்றுபடுவது அவசரத் தேவை.

    அறிவுறுத்தியதற்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....