17 டிசம்பர் 2012

கருணாநிதியின் கொள்ளு பேரனும், கரீனா கபூரும் (கூட்டுப்பொறியல்)



அட பாவி மக்களா !மக்களின் வரிப்பணத்தை இப்படி எல்லாமா ஆனந்தமாக செலவு செய்வது?

சோற்றுக்கு தினம் தினம் கஷ்டப்படும் மக்கள் வாழும் ஒரு மாநிலம்,இந்தியாவிலே வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் அதிகமுள்ள மாநிலம் என பெயர்பெற்ற சத்தீஸ்கர் மாநிலத்தில் 1.40 கோடியை அலேக்காக தூக்கி ஒரு சினிமா நடிகைக்கு கொடுத்துள்ளனர் அம்மாநிலத்தை ஆளுபவர்கள்!(பி ஜே பி)

 ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ம்  தேதி சத்தீஸ்கர் மாநிலம் உருவான நாள் அம்மாநில அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது..இதில் ஆடத்தான் கரீனா கபூரை 1.40 கோடி அரசு கஜானாவிலிருந்து  எடுத்து கொடுத்து கூட்டி  வந்து கும்மாளம் போட்டுள்ளனர்...

இந்தியா நல்ல முறையில் முன்னேறி கொண்டு இருக்கிறது!வேற என்னத்த சொல்ல..

.............................. .................................. ..........................................................

அண்ணா ஆரம்பித்த திராவிட முன்னேற்ற கழகம் திருவாரூர் முன்னேற்ற கழகமாக  (உபயம் :ஆனந்த விகடன்)மாறி விட்டது என்பது அனைவரும் அறிந்த சேதிதான்...

ஆனால் அதற்காக கருணாநிதியின் கொள்ளு பேரனின் படத்தையுமா போட்டு போஸ்டர் வைப்பார்கள் ?!

கரூரில் கட்சி விழாவில் பங்கேற்க வந்த ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டில் ஸ்டாலின்,அவர் மகன் உதய நிதி,அவரின் மகன் இன்ப நிதி ஆகியோரின் படங்களோடு கருணாநிதியின் படத்தையும் ஓரத்தில் போட்டு திமுகவில்  நாலாவது தலைமுறை தலைவரை உருவாக்க ஆரம்பித்துள்ளனர் உடன் பிறப்புகள்...இதை எல்லாம் கண்டிக்க வேண்டாமா கட்சி தலைமை?

இதை எல்லாம் பார்த்துவிட்டு குடும்ப அரசியல் என்று சொல்லாமல் வேறு என்ன வென்று  சொல்வதாம் ?கருணாநிதிக்கே வெளிச்சம்!

................................... ................................. ................................................................
                                                        பொறியல் 

காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது :குலாம் நபி ஆசாத் #

அவங்க கட்சியே தடுத்து கொள்ளும்னு சொல்ல வாராரு!

.......................... .............................. ......................................................................

ஐந்து பேர் குடும்பத்துக்கு மாதம் 600 போதும்:டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் 


ஒருவேளை ஆடு மாடுகளுக்கு தீவனம் வாங்குவதை சொல்கிறாரோ!?

.................................... ......................................... ...............................................

மின்வெட்டு பிரச்சினையில் வெள்ளை அறிக்கை வேண்டும் :கருணாநிதி 


அப்படியே வெளிச்சத்தில் வைத்து படிப்பதற்கு ஒரு டார்ச்லைட்டும் கேளுங்க தலைவா!


............................... ............................................ ........................................................

அன்று கூட்டத்தை ஆதரித்தேன் ,இன்று தோட்டத்தை ஆதரிக்கிறேன் :நாஞ்சில் சம்பத் 

புது கார்,பதவி எல்லாம் கொடுத்து "தோட்டம்"தானே உங்களை ஆதரிக்கிறது !(அம்மாவிடம் போட்டு கொடுப்பவர்கள் கவனத்திற்கு)

............................. ........................................ ....................................................................

ஜெயலலிதாவை பிரதமராகவிட்டால் இந்தியாவே இருண்டு போய்விடும் :  ஸ்டாலின் 

 அட ஏன் தல "அமைச்சர்கள்தான் "அம்மா"பிரதமர் என பூச்சாண்டி காட்டுகிறார்கள் "என்றால் நீங்களுமா ?!

................................. ..................................... .................................................
எங்கள்  திட்டத்தை திருடிவிட்டார் ராகுல்காந்தி :சந்திரபாபு நாயுடுவின் மகன் #

புரியுது ...ஆந்திராவில் இருந்தாலும் அரசியலில் உங்கள் வழிகாட்டி எங்களின் "தலைவர்கள்" என்று!


....................................... ...................................... ..............................................................


1 கருத்து:

  1. அன்று கூட்டத்தை ஆதரித்தேன் ,இன்று தோட்டத்தை ஆதரிக்கிறேன் :நாஞ்சில் // ada...

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....