06 நவம்பர் 2010

பிரபாகரன் தாயாரின் தற்போதைய நிலை.....



விடுதலைபுலிகளின் தலைவராக மட்டுமல்லாமல் ஒடுக்கபட்ட உலகத்தமிழர்களின் தலைவராக தமிழர்கள் அனைவரின் மனதிலும் வாழ்ந்துகொண்டிருப்பவர் பிரபாகரன்........


இங்குள்ள அரசியல்வாதிகளை போல சுயநலம் கருதாமல் தனது குடும்பத்திற்கு கோடிகணக்கில் சொத்துக்கள் சேர்க்காமல் பொதுநலம் கருதி தனது வாழ்நாள் முழுதும் வாழ்ந்தவர் பிரபாகரன்........


அப்படிப்பட்டவரின் தாயார் இன்று பக்கத்தில் இருந்து கவனித்துக்கொள்ள சொந்த பந்தங்கள் இல்லாமல் மருத்துவமனையில் தனது இறுதிக்காலத்தை கழித்து கொண்டிருக்கிறார்.... பக்கவாதம் மற்றும் நினைவு சரியாக இல்லாத நிலையிலும் தனது பிள்ளைகள் தன்னை வந்து பார்ப்பார்களா என எதிர்ப்பார்த்து நாட்களை எண்ணி கொண்டிருக்கிறார்........ஆனால் இதுவரை
பிரபாகரனின் சகோதரியோ,சகோதரோனோ, தனது தாயாரை வந்து பார்க்கவில்லை
இனி எப்போது வந்து பாக்க போகிறார்கள்......அவர்கள் இருவரும் வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்துக்கொண்டிரிப்பவர்கள்.......தங்களது தாயாரை தங்களுடன் அழைத்துக்கொண்டுபோக என்ன தயக்கம்.....ஏன் இந்த காலதாமதம்?

இனியும் தாமதிக்காமல் உலகதமிழர்களின் ஒப்பற்ற தலைவரின் தாயாரை தங்களுடன் அழைத்துக்கொண்டுபோய் கவனித்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.......செய்வார்களா பிரபாகரனின் கூட பிறந்தவர்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....