24 நவம்பர் 2010

ஒரு வேட்பாளருக்கு ஒரு தொகுதிதான்.....விஜயகாந்த்...


விஜயகாந்த் நடித்த தென்னவன் படம் பார்த்தேன்.....முழுதாக பார்க்கவில்லை.....கொஞ்சம்தான் பார்த்தேன்.....அந்த படம் நன்றாக ஓடவில்லை.....அதில் தேர்தல் கமிசன் அதிகாரியாக நம்ம கேப்டன் டாக்டர் விஜயகாந்த் நடித்து இருப்பார்.....அதில் அவர் அரசியல் கட்சிகளுக்கு விதிக்கும் கட்டுபாடுகள் நன்றாக இருந்தன......



முதலாவதாக ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் ...இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடியாது.....



இடைத்தேர்தல்கள் நடந்தால் முதல் அமைச்சர், அமைச்சர் ,போன்ற பதவியில் இருக்கும் நபர்கள் பிரசாரத்துக்கு போக கூடாது......இது அப்படத்தில் விஜயகாந்த் சொன்னது.....நல்ல விசயம்தான்....



கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது....ஆனால் நடைமுறையில் அரசியல்வாதிகள் இதை செயல் படுத்த விரும்ப மாட்டார்கள்.....



இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெரும் வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றதை ராஜினாமா செய்ய வேண்டும்..மீண்டும் அத்தொகுதியில் தேர்தல் நடக்கும்..மக்கள் வரிப்பணம் மீண்டும் செலவாகும்....இதனால் அரசுக்கு எவ்வளது இழப்பு..?????



இடைதேர்தல்களில் நடக்கும் கூத்தைத்தான் நாம் இப்போது நெறைய பார்க்கிறோமே.........முதல் அமைச்சர் முதற்கொண்டு அணைத்து அமைச்சர்களும் அங்கு பிரசாரத்துக்கு செல்கின்றனர்.....இது தேவையா????



முதல் அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் அம்மாநில மக்கள் அனைவருக்கும் பொதுவானவர்....அவர் எப்படி ஒருவருக்கு ஆதரவாக ஒட்டு கேட்க முடியும்? அது எவ்வளவு முரண்பாடு போன்ற கேள்விகள் என் மனதில் எழுகின்றன.....ஆனால் இதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு ஒரு பொருட்டே அல்ல.....


2 கருத்துகள்:

  1. நண்பரே நேற்று நானும் இந்த படம் பார்த்தேன். நடந்தால் நல்லத்தான் இருக்கும்.இதெல்லாம் கனவில்தான் நடக்கும்.

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....