07 நவம்பர் 2010

தமிழ் பெயர் மட்டும் போதுமா?

தமிழில் பெயர் வைத்தால் வரிசலுகை என அரசு அறிவித்ததால் என்ன என்ன கூத்து நடக்கிறது.....ஒரு எழுத்தை மட்டும் தமிழில் வைத்துக்கொண்டு அதற்கு கீழ என்ன என்னமோ எழுதிக்கொண்டு வரிசலுகை பெற்று கொள்கிறார்கள்?இதனால் அரசுக்கு என்ன பயன்?

எதற்காக கொடுக்க வேண்டும் வரிச்சலுகை? சினிமா தொழில் என்ன நலிந்து போன தொழிலா? இல்ல படம் எடுப்பவர்கள் அரசுக்கு வரி கட்ட முடியாதவர்களா?இதனால் மக்களுக்கு என்ன பயன்? தமிழில் பெயர் வைத்தால் மட்டும் தமிழ் வளர்ந்து விடுமா என்ன?

தமிழில் பெயர் வைத்துக்கொண்டு வன்முறை,ஆபாசம் ,கொலை, கொள்ளை போன்ற இளைய சமுதாயத்தினரை வழிகெடுக்கும் காட்சிகள் எல்லா படங்களிலும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.......அதை தடுப்பதற்கு அல்லது அக்காட்சிகள் குறைவாக இருப்பதற்கு ஏதாவது செய்தால் என்ன?

நிச்சயமாக சினிமாவில் வரும் வன்முறை,ஆபாசம் போன்றவற்றால் இளைய சமுதாயம் சீரழிந்துதான் போகிறது....படத்தில் வருவது போல ஹெல்மெட் போட்டுக்கொண்டு கொலை செய்கிறார்கள்.....குழந்தைகளை கிட்னாப் செய்கிறார்கள்..இதற்கெல்லாம் சினிமாதான் காரணமா ? என்று கேட்கலாம்...ஆனால் சினிமாவும் ஒரு காரணம்தான்........

வன்முறை,ஆபாசம் இல்லாமல் வரும் படத்திற்கு வரிசலுகை அறிவித்தால் என்ன? அல்லது இக்காட்சிகள் குறைவாக இடம்பெறும் படத்திற்கு வரிசலுகை அறிவிக்கலாமே?செய்யுமா அரசு?

2 கருத்துகள்:

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....