விஸ்வரூப பிரச்சினையில் இஸ்லாமியர்கள் நடந்து கொள்ளும் விதத்தால் அவர்கள் மீது ஒரு வித வெறுப்பு,இவர்கள் இப்படிதான் என்ற பிம்பம் அவர்களாலே உருவாக்கப்பட்டு விட்டது....இப்படி ஒரு வாதம் பதிவுலகிலும்,வெளியிலும் பரப்பப்பட்டு வருகிறது...நேற்று கூட ஒரு பதிவர் இது மாதிரி எழுதி இருந்தார்...முதலில் இதற்கு ஒரு விளக்கம்...
அப்படி என்ன இஸ்லாமியர்கள் தவறாக நடந்து கொண்டு விட்டார்கள்?
ரஜினியின் பாபா பட விவகாரத்தில் பா.ம.க நடந்து கொண்டதை போல பட பெட்டியை தூக்கி கொண்டு ஓடினார்களா?
இதே கமலின் "சண்டியர்" என்ற படத்தின் பெயரால் பிரச்சினைகள் வரும் என மிரட்டி அந்த படத்தின் பெயரை மாற்றிய பிறகும் படபிடிப்பை நடத்த விடாமல் ஓட விட்டாரே டாக்டர் கிருஸ்ணசாமி அது போல செய்தார்களா?
விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்யவிருக்கும் தியேட்டரை அடித்து நொறுக்கினார்களா ?
எதுவும் இல்லை....நம்மை ஆளும் அரசாங்கத்திடம் தடை கேட்டு மனு கொடுத்து இருக்கிறார்கள்....
ஜனநாயக நாட்டில் ஒரு அரசாங்கத்திடம் மனு கொடுப்பது ,தடை கேட்பது என்ன அவ்வளவு பெரிய தவறா?இல்லை இதற்கு முன்பு எந்த ஒரு படத்திற்கும் சென்சார் அனுமதித்த பிறகும் தமிழக அரசு தடை விதிக்கவில்லையா?உதாரணம் இருக்கிறதே டேம் 999 என்ற படம்...
இதனால் சகோதர பாசத்தோடு பழகி வரும் மாற்று மத சகோதரர்கள் இஸ்லாமியரகளிடம் இனி அது போல பழக முடியுமா என கேள்வி கேட்பது எப்படி சரியாகும்?நாளை தங்களோடு பழகும் மாற்று மத சகோதரர்களுக்கு ஒரு பிரச்சினை ,அதற்காக போராட வேண்டும் என்றாலும் இதே இஸ்லாமிய நண்பரகள் அந்த போராட்டத்திற்கு வருவார்கள்....(உதாரணம் தருமபுரி சம்பவம்)
உன் மதத்திற்காக நீ போராடினால் அது நம் நட்பை கெடுத்துவிடும் என்று சொல்வது நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் என நீதிமன்றத்தில் கொடுப்பார்களே அது போலதான்...எந்தவித நிபந்தனையும் இல்லாததே நட்பு
..நிபந்தனையுடன் கூடியது நட்பல்ல.....எனவே மாற்று மத நண்பர்கள் இந்த படத்திற்கு இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டங்களினால் நட்பு கெட்டுவிடும் என்று கூறுவது ஏற்புடையதல்ல...
அடுத்து கருத்து சுதந்திரம்....சினிமா என்பது ஒரு தொழில்...பல கோடி ரூபாய் புழங்கும் ஒரு வியாபாரம் ...சினிமாவில் கருத்து சொல்லும் படம்,வெறும் பொழுதுபோக்கு படம் என சினிமா காரர்களே இரண்டு விதமாய் பிரித்து வைத்து இருக்கிறார்கள்.....
இதை செய்,அதை செய்யாதே என படங்களில் சமூகத்துக்கு நல்லது,கெட்டது சொல்வது கருத்து .சொல்லும் படமாம்....இது எதுவும் இல்லாமல் நாலு பாட்டு,5 சண்டை என எடுத்தால் அது பொழுது போக்கு (comersial film) படமாம்...இதை அவர்களே சொல்லி இருக்கிறார்கள்....
மாற்று மத சகோதரர்கள் முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவு....
இந்த பதிவு T N TJ தலைவர் PJ அவர்கள்
இது சம்பந்தமாக பேசிய உரையை கருத்தில் கொண்டு ,எனது எண்ணங்களையும் கலந்து எழுதிய பதிவு....
நன்றி: P .J
அப்படி என்ன இஸ்லாமியர்கள் தவறாக நடந்து கொண்டு விட்டார்கள்?
ரஜினியின் பாபா பட விவகாரத்தில் பா.ம.க நடந்து கொண்டதை போல பட பெட்டியை தூக்கி கொண்டு ஓடினார்களா?
இதே கமலின் "சண்டியர்" என்ற படத்தின் பெயரால் பிரச்சினைகள் வரும் என மிரட்டி அந்த படத்தின் பெயரை மாற்றிய பிறகும் படபிடிப்பை நடத்த விடாமல் ஓட விட்டாரே டாக்டர் கிருஸ்ணசாமி அது போல செய்தார்களா?
விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்யவிருக்கும் தியேட்டரை அடித்து நொறுக்கினார்களா ?
எதுவும் இல்லை....நம்மை ஆளும் அரசாங்கத்திடம் தடை கேட்டு மனு கொடுத்து இருக்கிறார்கள்....
ஜனநாயக நாட்டில் ஒரு அரசாங்கத்திடம் மனு கொடுப்பது ,தடை கேட்பது என்ன அவ்வளவு பெரிய தவறா?இல்லை இதற்கு முன்பு எந்த ஒரு படத்திற்கும் சென்சார் அனுமதித்த பிறகும் தமிழக அரசு தடை விதிக்கவில்லையா?உதாரணம் இருக்கிறதே டேம் 999 என்ற படம்...
இதனால் சகோதர பாசத்தோடு பழகி வரும் மாற்று மத சகோதரர்கள் இஸ்லாமியரகளிடம் இனி அது போல பழக முடியுமா என கேள்வி கேட்பது எப்படி சரியாகும்?நாளை தங்களோடு பழகும் மாற்று மத சகோதரர்களுக்கு ஒரு பிரச்சினை ,அதற்காக போராட வேண்டும் என்றாலும் இதே இஸ்லாமிய நண்பரகள் அந்த போராட்டத்திற்கு வருவார்கள்....(உதாரணம் தருமபுரி சம்பவம்)
உன் மதத்திற்காக நீ போராடினால் அது நம் நட்பை கெடுத்துவிடும் என்று சொல்வது நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் என நீதிமன்றத்தில் கொடுப்பார்களே அது போலதான்...எந்தவித நிபந்தனையும் இல்லாததே நட்பு
..நிபந்தனையுடன் கூடியது நட்பல்ல.....எனவே மாற்று மத நண்பர்கள் இந்த படத்திற்கு இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டங்களினால் நட்பு கெட்டுவிடும் என்று கூறுவது ஏற்புடையதல்ல...
அடுத்து கருத்து சுதந்திரம்....சினிமா என்பது ஒரு தொழில்...பல கோடி ரூபாய் புழங்கும் ஒரு வியாபாரம் ...சினிமாவில் கருத்து சொல்லும் படம்,வெறும் பொழுதுபோக்கு படம் என சினிமா காரர்களே இரண்டு விதமாய் பிரித்து வைத்து இருக்கிறார்கள்.....
இதை செய்,அதை செய்யாதே என படங்களில் சமூகத்துக்கு நல்லது,கெட்டது சொல்வது கருத்து .சொல்லும் படமாம்....இது எதுவும் இல்லாமல் நாலு பாட்டு,5 சண்டை என எடுத்தால் அது பொழுது போக்கு (comersial film) படமாம்...இதை அவர்களே சொல்லி இருக்கிறார்கள்....
இதே கமல் இந்த படம் சம்பந்தமாக சில நாட்களுக்கு முன்பு நடந்த பிரச்சினையில் என்ன சொல்லி இருக்கிறார்...."விஸ்வரூபம் எனது பொருள்..அதை எங்கே எப்படி விற்பது என்ற உரிமை எனக்குதான் உள்ளது என்று !அதாவது விஸ்வரூபத்தில் அவர் கருத்து எதுவும் சொல்லவில்லை...ஒரு பொழுது போக்கு படமாக எடுத்து இருக்கிறேன் என சொல்லி இருக்கிறார்....இப்போதும் அப்படித்தான் சொல்கிறார்....
கமல் வாயாலே ஒப்புக்கொண்டுவிட்டார் நான் இப்படத்தில் கருத்துக்கள் எதுவும் சொல்லவில்லை நான் வியாபாரம்தான் செய்கிறேன் என்று!
இப்போது சந்தையில் விற்பனைக்கு வரும் ஒரு பொருளால் நுகர்வோர் யாரேனும் பாதிக்கப்பட்டாலோ ,அல்லது அந்த பொருளால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டாலோ அந்த பொருளை தடை செய்ய கோரும் உரிமை நுகர்வோருக்கு உள்ளது அல்லவா?
அதே உரிமைதான் இப்போது விஸ்வரூபம் பிரச்சினையிலும் ..கமலால் பொழுது போக்கும் பொருளாக வியாபாரம் செய்யப்பட்ட விஸ்வரூபம் படத்தினால் நுகர்வோருக்கு பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் அந்த பொருளை தடை செய்ய சொல்லி கேட்பது எப்படி தவறாகும்?
மாற்று மத சகோதரர்கள் முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவு....
இந்த பதிவு T N TJ தலைவர் PJ அவர்கள்
இது சம்பந்தமாக பேசிய உரையை கருத்தில் கொண்டு ,எனது எண்ணங்களையும் கலந்து எழுதிய பதிவு....
நன்றி: P .J
| Tweet |
