
நாம் தமிழர் இயக்கத் தலைவர் இயக்குநர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகாரை சுமத்தியுள்ளார்.
சென்னையில் தனது குடும்பத்தோடு வசித்து வரும் விஜயலட்சுமி நேற்று மாலை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதியை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார்.
அதில், இயக்குநர் சீமான் 3 ஆண்டுகளாக என்னைக் காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கிப் பழகினார். இருப்பினும் தற்போது என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இதுகுறித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயலட்சுமி கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்தும்படி வளசரவாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்திற்கு தென் சென்னை இணை ஆணையர் சண்முகராஜேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
பொதுவாக பிரபலமானவர்களை பற்றி இதுமாதிரி புகார்கள் வருவது சகஜம்தான்....ஆனால் புகார் அளித்தவரும் ஓரளவு அறியப்பட்ட நடிகை ஆவார்...இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என இனிதான் பக்கம் பக்கமாக பத்திரிக்கைகள் எழுதும்....சீமான் இன்னும் இதுபற்றி வாய் திறக்கவில்லை....
ஆனால் சீமானின் புகழை கெடுக்கும் வகையில் செயல்பட்ட நடிகை விஜயலட்சுமி மீது ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாக அவரது வழக்கறிஞர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்...சீமான் திமுகவை எதிர்த்தவர்....அதிமுக ஆட்சி அமைய விரும்பியவர்........ ஒருவேளை இது வேண்டுமென்றே சொல்லப்படும் குற்றச்சாட்டாக இருந்தால் சீமான் கடுமையாக எதிர்த்த திமுக ஆட்சியில் அல்லவா இது நடந்திருக்க வேண்டும்?
பார்ப்போம் சீமான் மீதான இவ்வழக்கு சீறி பாய போகிறதா? அல்லது புஸ்வானமாக போகிறதா என்று....
ஆனால் மீடியாக்களுக்கு இனி நல்ல தீனிதான்...பதிவுலகுக்கும்தான்....
| Tweet |