அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 செப்டம்பர் 2012

இந்தி தெரியாதவன் இந்தியனாக முடியுமா?


இந்தியாவில்  1652 க்கும்  மேற்பட்ட  மொழிகள்  பேச்சு வழக்கில் உள்ளன .....

ஆனால் இந்தியாவின்  அலுவல் மொழி     இந்திதான்....இந்தியுடன் சேர்த்து  அங்கீகரிக்கப்பட்ட  அலுவல் மொழிகள் 22..இதில் தமிழ் மொழியும் ஒன்று ...

 ஆனால் இதில்  இந்திதான் பெரும்பாலான  இடங்களில்  அலுவல் மொழியாக  பயன்படுத்தப்பட்டு  வருகிறது....உடன்பாடு இருந்தாலும் இல்லை என்றாலும்  இதை ஏற்றுதான் ஆக வேண்டும்....

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அலுவல்  மொழியை அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நிச்சயம் பேசுவான்....அறிந்து இருப்பான்...

நான் வேலை பார்க்கும் மலேசியாவின்  அலுவல் மொழி மலாய் மொழி....மலேசியாவில் சீனர்கள், இந்தோனோசியர்கள் என பல தரப்பட்ட  மக்கள் வாழ்ந்தாலும் அனைவரும் மலாய் மொழி  பேசுபவர்களாகத்தான்  இருப்பார்கள்....

நேற்று  வேலை முடிந்து  ஒரு டேக்ஸியில்  வீடு திரும்பி கொண்டு இருந்தேன்...டிரைவர்  ஒரு  மலாய்காரர்...நான்  இந்தியன் என்றவுடன் என்னுடன் சரளமாக  பேசி கொண்டு வந்தவர் உங்களுக்கு   இந்தி தெரியும்தானே  என்றார்....நான் தெரியாது என்றேன்....இந்தியாவின் மொழி இந்திதானே..அப்புறம் எப்படி தெரியாது என்கிறீர்கள் ? என்றார்....

நான் தமிழ்நாட்டுக்காரன்  அதனால்  என் மொழி தமிழ்தான் என்றேன்...அப்ப  தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா  என கேட்டார் ?நான்  முழிக்க  ஆரம்பித்தேன் ...அவர் மேலும் விடாமல் நீங்கள் வேலை  பார்க்க வந்த  நாட்டின் மொழியான  மலாய்  மொழியை அறிந்து பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் நாட்டின்  மொழியான  இந்தியை தெரியாது என்கிறீர்கள்...ஏன் இந்த முரண்பாடு என்றார்..... பொட்டில் அறைந்தது போல இருந்தது...என்னால் பதில் சொல்ல முடியவில்லை....வீடு வரும்வரை  மவுனத்தையே  அவருக்கு பதிலாக கொடுத்தேன் ...

நாம்  இனத்தால் தமிழன்  ஆனாலும்  ஒரு குடிமகனாக  மற்ற நாட்டினரால் அடையாளப்படுத்தப்படுவது  இந்தியனாகத்தான் ...... அப்படி இருக்க இந்தியாவின் தேசிய மொழியான  இந்தியை தமிழர்களான  நம்மில் எவ்வளவு பேருக்கு சரளமாக எழுத படிக்க பேச தெரியும்?

ஒரு இந்திய குடிமகனாக  வெட்கப்பட்டு கொள்ளக்கூடிய  விசயம்  அல்லவா ?

ஆரம்ப பள்ளிகளில் இந்தியை கற்று  தராமல்  போனதற்கு நம் சுயநல அரசியல்வாதிகள்தானே காரணம்?தமிழ் ,தமிழ்நாடு என சொல்லி ஒட்டு பிச்சைக்காக  அரசியல் நடத்திய  அயோக்கிய  அரசியல்வாதிகள்தானே  இதற்கு காரணம்...?

இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தை நான்  குறை கூறவில்லை ....ஆனால் ஒரு மொழியாக ஆங்கிலத்தை நமக்கு பள்ளிகளில்  கற்று  தந்ததை போல இந்தியை  ஏன் கற்று தரவில்லை?இந்தி திணிப்பை  எதிர்த்து இருக்கலாம்...இந்தி தெரிந்து கொள்வதையுமா  எதிர்ப்பது?

உலகின் பன்மையான மொழியான தமிழை பேசுவதால் பெருமை அடையும் அதே வேளையில்   நம் நாட்டின் தேசிய  மொழியான இந்தியை  தெரியாததால்  நிச்சயம்  கவலையும்  அடைய வேண்டும்....

தமிழ் தெரியாதவன் எப்படி தமிழன்  ஆக முடியாதோ  அது போல இந்தி தெரியாதவன்  இந்தியனாக இருக்க முடியுமா?பதில்தான் தெரியவில்லை....





16 ஆகஸ்ட் 2012

ஆண்களே ...பிரசவத்தை நேரில் பாருங்கள்...தாய்மையின் மகத்துவத்தை உணருங்கள்...!


பிரசவம் என்றால் அது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி என்று சொல்வார்கள்....அது எவ்வளவு உண்மை என்று தெரிந்துகொள்ள வேண்டுமா?

நம் தாய் நம்மை எவ்வளவு வலி வேதனைகளை பொறுத்துக்கொண்டு பெற்றெடுத்தாள் என புரிந்து கொள்ள வேண்டுமா?

நம் மனைவி நமது வாரிசை பெற்றெடுக்க எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கிறாள் என அறிந்து கொள்ள வேண்டுமா?

இவற்றை எல்லாம் வெறும் வார்த்தைகளினால் சொன்னால் புரியாது....நம்மை பெற்றெடுத்த தாயின் அருமையை, நம் வாரிசை பெற்றெடுத்த மனைவியின் அருமையை வெறும் வார்த்தைகளினால் அளவிடுவதும் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை முழுதாக எண்ணுவதும் ஒன்றுதான்..!


நமது நாட்டில் பிரசவம் என்றால் அது சுக பிரசவம் என்றாலும் சரி,சிசேரியன் ஆனாலும் சரி நாம் யாரும் பிரசவம் நடக்கும் அறையினுல் எட்டி கூட பார்க்க முடியாது...சும்மா வெறுமனே கையை கட்டிக்கொண்டு வெளியே நிற்போம்...சிறிது நேரம் கழித்து ஒரு நர்ஸ் வந்து உங்களுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது என்று சொல்வார்...நாம் ஆனந்தம் அடைவோம்..அதோடு சரி...

ஆனால் மலேசியாவில் சுகபிரசவம் என்றாலும்,சிசேரியன் என்றாலும் அந்த பெண்ணின் கணவன் உடன் இருப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது...கிட்டத்தட்ட கட்டாயம் என்று கூட சொல்லலாம்...அப்போது அப்பெண் படும் வேதனையை கண்ணால் கண்ட அவள் கணவன் பின் எப்போது அவளை மறக்கவோ,வெறுக்கவோ முடியும்....

பிரசவத்தின் பொது ஒரு பெண் அடையும் வேதனையை உடனிருந்து பார்க்கும் ஒருவன் பின் எப்படி தன் தாயை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட முடியும்?

அதனால்தான் மலேசியாவில் பிரசவத்தின்போது கணவன் கூட இருப்பது கட்டாயம்...அது போல நம் நாட்டில் அனுமதித்தால் நிச்சயம் விவாகரத்துகளும், முதியோர் இல்லங்களும் குறையும்...

சென்ற வாரம் என் மனைவிக்கு மலேசியாவில் உள்ள ஒரு ஹாஸ்பிட்டலில் சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது....அப்போது என் மனைவியுடன் நான் உடனிருந்தேன்...என் குழந்தையை டாக்டர் வெளியே எடுக்கும்போது நான் பார்த்த அந்த உணர்வை விவரிக்க வார்த்தை இல்லை...


நம் நாட்டில் இதுபோன்ற ஒரு சூழ்நிலைகளை மருத்துவமனைகள் உருவாக்க வேண்டும்....ஆனால் அது சாத்தியமா ?!

தெரியவில்லை..................நமது பணத்தில் பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் நம்மை வெளியே நிற்க சொல்வது முரண்பாடாக இல்லை...!

பிரசவத்தை நேரில் பார்க்கும் எந்த ஆணுக்கும் நிச்சயம் தன் தாயின் மீதும்,மனைவியின் மீதும் மதிப்பும் பரிவும் கூடுவது ஆயிரம் சதவீதம் உண்மை என்றால் அது மிகையல்ல....


26 ஜூன் 2012

ஜெயலலிதா போலீஸ் ...கருணாநிதி போலீஸ்...மொத்தத்தில் தமிழக போலீஸ் ஒஸ்திதான்!



இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல நம் நாட்டில் இருந்து கொண்டு எதற்கெடுத்தாலும் வெளிநாட்டை உதாரணம் சொல்வது அல்வா சாப்பிடுவது மாதிரிதான் எல்லாருக்கும்.....

அதில் பெரும்பாலும் ஊழலில் கொழிக்கும் அரசியல்வாதிகளும், லஞ்சத்தில் செழிக்கும் காவல்துறையும் மீதான விமர்சனங்கள்தான் அடிக்கடி சொல்லப்படும் உதாரணங்கள்....அரசியல்வாதிகளை விடுங்கள்..அதில் நம்மவர்களை அடித்து கொள்ள ஆளில்லை மற்ற நாடுகளிடம்...ஆனால் காவல்துறை?


மலேசியாவை பற்றி பொதுவாக அது ஒரு சுற்றுலா நாடு ,தமிழ் படங்களின் கனவு டூயட் பாடல்கள் நடக்கும் நாடு என்பது நாம் அறிந்த ஒன்று...

ஆனால் மலேசியாவில் கொள்ளையும்,கொலையும் சர்வ சாதாரணமாக நடக்கும் விசயங்கள் என்பது நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்? மலேசியா போலிசும் தொட்டதற்கெல்லாம் லஞ்சம் வாங்குபவர்கள்தான்....

மலேசியாவில் Money changer எனப்படும் பணம் மாற்றம் வர்த்தக தொழில் நம் தமிழ் மக்கள் செய்யும் அதிகமாக செய்யும் தொழில் ஆகும்...ஆனால் இந்த தொழிலுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை..இந்த தொழில் செய்பவர்களின் உயிருக்கும் உத்ரவாதம் இல்லை...

இந்த தொழில் நடக்கும் கடைகளில் சர்வ சாதாரணமாக கொள்ளையர்கள் புகுந்து பணத்தை அள்ளி செல்வதை ஒரு தொழிலாக வைத்துள்ளனர்...இது நடப்பது பெரும்பாலும் பட்ட பகலில்தான்...கடையில் இருக்கும் நபர்கள் வங்கிகளுக்கு பணத்தை கொண்டு செல்லும்போது துப்பாக்கியை காட்டி மிரட்டி அந்த பணத்தை அலேக்காக அள்ளி சென்று விடுவார்கள்....


கொள்ளையர்களிடம் பணம் வைத்திருப்பவர்களோ, கடையில் இருப்பவர்களோ பணத்தை கொடுக்காமல் முரண்டு பிடித்தால் அவர்களை சுட்டு கொன்று விட்டு பணத்தை கொண்டு சென்று விடுவார்கள்...சமிபத்தில் கூட என் நண்பனிடம் கொள்ளைஅடித்து சென்று விட்டார்கள்....என் நண்பன் எதுவும் முரண்டு பிடிக்காமல் பணத்தை கொடுத்ததால் தப்பித்தான்....

இதை போலீசில் சொன்னால் என்ன என்று ஒரு கேள்வி வருமே?ஹி ஹி...நாம் சொல்வதற்கு முன்னாலே கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தில் ஒரு பாதி போலிசுக்கு சென்று விடும்...அப்புறம் என்னத்த புகார் சொல்வது?இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து யாருக்கும் பணம் திரும்ப கிடைத்தது இல்லை....யாரும் கைது செய்யப்பட்டதும் இல்லை....

இதில் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? இந்த கொலை ,கொள்ளைகளில் ஈடுபடுவது மலேசிய தமிழர்கள்தான்..!மலேசிய தமிழர்களில் பெரும்பாலோர் நல்ல வேலையில் இருப்பவர்கள்....நல்லவர்கள்...ஆனால் ஒரு சில ரவுடி கும்பல்கள்தான் கொள்ளை அடிப்பவர்கள் .............. அதாவது மலேசிய தமிழர்கள் அனைவரும் கொள்ளையர்கள் அல்ல...ஆனால் இதுபோன்று தமிழ்நாட்டு தமிழர்களிடம் கொலை ,கொள்ளையில் ஈடுபடுவோர் அனைவரும் மலேசிய தமிழர்களே....!


நம் நாட்டிலாவது நாட்கள் ஆனாலும் கொள்ளையர்களையும் ,கொலையாளிகளையும் போலீஸ் கைது செய்து விடும்..அல்லது என்கவுன்டர்
செய்துவிடும்!ஆனால் மலேசியாவில் அதற்கு எல்லாம் வழியே இல்லை..

ஏதாவது இது மாதிரி கொள்ளை சம்பவங்கள் நடந்து விட்டால் நம்ம நாட்ல இதுமாதிரி நடந்தாலும் போலீஸ் குற்றவாளிகளை பிடித்துவிடும்டா மச்சான் என்று பேசுவது இங்கு உள்ள தமிழர்களுக்கு வாடிக்கை ஆகி விட்டது...

இப்போது சொல்லுங்கள் என்னதான் லஞ்சம் லாவண்யத்தில் ஈடுபட்டாலும் தமிழக போலீஸ் ஒசத்தியா இல்லையா?