மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 செப்டம்பர் 2012

உங்களுக்கு தொப்பை இருக்கா?அப்ப இதை நீங்கள் படித்தே ஆக வேண்டும்..!


இன்றய நவீன உலகில் தொப்பை இல்லாத மனிதன்  அரை மனிதன் என்பது இப்ப புது மொழி...

ஆனால் அந்த தொப்பையினால்  ஏற்படும் ஆபத்துகள் என்ன?

நான் படித்த தகவல்களை பகிர்ந்துகொள்கிறேன்....

வயிறும், இடுப்பும் சுற்றளவு அதிகமாக, அதிகமாக மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் நிபுணர்கள். எனவேதான் உடல் எடையை குறைக்க காட்டும் அக்கறையை தொப்பையை குறைக்கவும் காட்டுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
வயிறு கொழுப்பு அதிகமாவதால் இன்சுலின் சுரப்பு குறைபாடு ஏற்படுகிறது. இதனால் நீரிழிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு புரோஜெஸ்ட்ரோன் சுரப்பின் அளவு குறைகிறது. பெண்மைத் தன்மைக்கான ஹார்மோன் சுரப்பு குறைவதால் முகத்தில் முடி முளைக்கிறது. மலட்டுத்தன்மை, பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்சினை ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தொப்பை அதிகம் உள்ளவர்களுக்கு திடீர் மரணங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்குக் காரணம் கெட்ட கொழுப்புகள் அதிகமாக படிவதே காரணம் என்பது நிபுணர்களின் கருத்து. இது குறித்து National Health and Nutrition Examination Survey (NHANES III) ஆய்வாளர்கள் 12 ஆயிரத்து 785 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வின் படி ஆண்,பெண்களில் பி.எம்.ஐ ரிப்போர்ட்படி தொப்பை இருந்த 2,562 பேருக்கு திடீர் மரணங்கள் ஏற்பட்டது தெரியவந்தது. அதேபோல் 1,138 பேருக்கு இதயம் தொடர்பான நோய் ஏற்பட்டதும் கண்டறியப்பட்டது. சராசரி எடையோடு இருப்பவர்களைக் காட்டிலும் வயிற்றில் கொழுப்பு அதிகம் சேர்ந்தால் 2.75 சதவிகிதம் அளவிற்கு ஆபத்து அதிகம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
எனவே உடல்பருமனை குறைக்கும் அதே நேரத்தில் வயிற்றில் தொப்பையை குறைக்கவும் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.


நன்றி: தட்ஸ்தமிழ்...

ஓகே  இப்ப தொப்பை குறைய ஒரு எளிய உடற்பயிற்சியை பற்றி தெரிந்துகொள்வோம்...




தரையில் முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும் .இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில் வைக்கவும். .தலை,கைகள்,கால்கள் மற்றும் உடல் முழுவதும் மிகவும் தளர்ச்சியான நிலையில் வைக்க வேண்டும்.
 
பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே தலையை தூக்காமல் கைகளைக் கொண்டு தரையை அழுத்தாமல் கால் கட்டை விரல்களை சேர்த்து வைத்து மேலே தூக்கவும் ரொம்பவும் மேலே தூக்கி விட கூடாது.
 
திருப்பி கால்களை கீழே இறக்கும் போது மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மெதுவாக இறக்கவும் குதிங்கால்களை எக்காரணத்தைக் கொண்டும் தரையை தொடக் கூடாது. அப்படி தொட்டு விட்டால் பயிற்சி முடிந்துவிடும்.
 
இப்படி ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால் போதும்.
 
பலன்கள்:
 
இந்த பயிற்சி முழுக்க முழுக்க வயிற்றுக்காகவே உள்ள பயிற்சி இப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் தொப்பை குறைவது உறுதி. பெருங்குடல், சிறுகுடல் அனைத்தும் தூண்டப்பட்டு நன்கு வேலை செய்வதால் வயிறு மந்தமான நிலையில் பசியெடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும். இடுப்பு தேவையில்லாத சுற்று சதை குறைந்து வலிமை பெறும் முதுகெலும்பும் வலிமை பெறும் தொடை பகுதியும் வலிமை பெறும்.
 
நன்றி : பத்திரிக்கை செய்தி...
 

16 ஆகஸ்ட் 2012

ஆண்களே ...பிரசவத்தை நேரில் பாருங்கள்...தாய்மையின் மகத்துவத்தை உணருங்கள்...!


பிரசவம் என்றால் அது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி என்று சொல்வார்கள்....அது எவ்வளவு உண்மை என்று தெரிந்துகொள்ள வேண்டுமா?

நம் தாய் நம்மை எவ்வளவு வலி வேதனைகளை பொறுத்துக்கொண்டு பெற்றெடுத்தாள் என புரிந்து கொள்ள வேண்டுமா?

நம் மனைவி நமது வாரிசை பெற்றெடுக்க எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கிறாள் என அறிந்து கொள்ள வேண்டுமா?

இவற்றை எல்லாம் வெறும் வார்த்தைகளினால் சொன்னால் புரியாது....நம்மை பெற்றெடுத்த தாயின் அருமையை, நம் வாரிசை பெற்றெடுத்த மனைவியின் அருமையை வெறும் வார்த்தைகளினால் அளவிடுவதும் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை முழுதாக எண்ணுவதும் ஒன்றுதான்..!


நமது நாட்டில் பிரசவம் என்றால் அது சுக பிரசவம் என்றாலும் சரி,சிசேரியன் ஆனாலும் சரி நாம் யாரும் பிரசவம் நடக்கும் அறையினுல் எட்டி கூட பார்க்க முடியாது...சும்மா வெறுமனே கையை கட்டிக்கொண்டு வெளியே நிற்போம்...சிறிது நேரம் கழித்து ஒரு நர்ஸ் வந்து உங்களுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது என்று சொல்வார்...நாம் ஆனந்தம் அடைவோம்..அதோடு சரி...

ஆனால் மலேசியாவில் சுகபிரசவம் என்றாலும்,சிசேரியன் என்றாலும் அந்த பெண்ணின் கணவன் உடன் இருப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது...கிட்டத்தட்ட கட்டாயம் என்று கூட சொல்லலாம்...அப்போது அப்பெண் படும் வேதனையை கண்ணால் கண்ட அவள் கணவன் பின் எப்போது அவளை மறக்கவோ,வெறுக்கவோ முடியும்....

பிரசவத்தின் பொது ஒரு பெண் அடையும் வேதனையை உடனிருந்து பார்க்கும் ஒருவன் பின் எப்படி தன் தாயை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட முடியும்?

அதனால்தான் மலேசியாவில் பிரசவத்தின்போது கணவன் கூட இருப்பது கட்டாயம்...அது போல நம் நாட்டில் அனுமதித்தால் நிச்சயம் விவாகரத்துகளும், முதியோர் இல்லங்களும் குறையும்...

சென்ற வாரம் என் மனைவிக்கு மலேசியாவில் உள்ள ஒரு ஹாஸ்பிட்டலில் சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது....அப்போது என் மனைவியுடன் நான் உடனிருந்தேன்...என் குழந்தையை டாக்டர் வெளியே எடுக்கும்போது நான் பார்த்த அந்த உணர்வை விவரிக்க வார்த்தை இல்லை...


நம் நாட்டில் இதுபோன்ற ஒரு சூழ்நிலைகளை மருத்துவமனைகள் உருவாக்க வேண்டும்....ஆனால் அது சாத்தியமா ?!

தெரியவில்லை..................நமது பணத்தில் பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் நம்மை வெளியே நிற்க சொல்வது முரண்பாடாக இல்லை...!

பிரசவத்தை நேரில் பார்க்கும் எந்த ஆணுக்கும் நிச்சயம் தன் தாயின் மீதும்,மனைவியின் மீதும் மதிப்பும் பரிவும் கூடுவது ஆயிரம் சதவீதம் உண்மை என்றால் அது மிகையல்ல....


16 மார்ச் 2012

அடிக்கடி பாராசிட்டமால் சாப்பிடுறீங்களா? அப்படின்னா கண்டிப்பா இதை நீங்கள் படித்தே ஆகவேண்டும்..!

தலைவலியா ?ஒரு டோலோபார் எடுத்துக்க...காய்ச்சலா கால்பால் போட்டா சரியாகிடும் என நமக்கு நாமே டாக்டர் திட்டத்தை நம்மில் பெரும்பாலோர் செயல்படுத்தி வருகிறோம்....

காய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி இப்படி எல்லா வலிகளுக்கும் கொடுக்கப்படும் மாத்திரைதான் பாராசிட்டமால்.ஆனால் அதற்கும் ஒரு அளவு இருக்கிறது அல்லவா?

எதற்கு ஐந்து வருடம் படித்து நட்களி வீணாக்குவது எனவும்,ஏன் இதற்கெல்லாம் போய் டாக்டரிடம் காண்பிப்பது எனவும் சிந்தித்தே நம்மில் பல பேர் தலைவலி முதல் கால் வலி வரை சர்வ சாதாரணமாக இந்த பாராசிட்டமால் மாத்திரிகளை ஏதோ ஜெம்ஸ் மிட்டாய் சாப்பிடுவதுபோல சாப்பிடுகிறோம்...

முதலில் இந்த மாதிரி செல்ஃப் மெடிசின் எடுப்பதே தவறு....அதுவும் பாராசிட்டமால் எடுப்பது அதைவிட தவறு.....பாராசிட்டமால் அதிகமாக எடுத்தால் அது லிவரை பாதிக்கும் என்பது எல்லாரும் அறிந்ததே....

ஆனால் தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி திடீர் உயிரிழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

நோயாளிகள் உட்கொள்ளும் பாராசிட்டமல் அளவில் ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதைவிட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது.

ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் அதனால் திடீரென இறந்தும் போய்விடுகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே மக்களே எதற்கெடுத்தாலும் பாட்டி வைத்தியம் செய்வதாக ,அதிமேதாவியாக நினைத்துகொண்டு செல்ஃப் மெடிசின் எடுப்பதையும், பாரசிட்டமால் அளவுக்கு மீறி எடுப்பதையும் குறைத்து கொள்வீர்களாக....அப்பிடின்னு மருத்துவர்கள் சொல்றாங்க.. ஓகே யா...

04 மார்ச் 2012

நல்லா தண்ணீர் அடிங்க.....முதுமையை விரட்டி இளமையாக இருக்கலாம்...!


நம் உயிர்வாழத் தேவையான பொருட்களில் தண்ணீரின் பங்கு முக்கியமானது. உடலில் உள்ள தசைகள், தோல், முதலியவற்றின் வளர்ச்சியில் 70 சதவிகிதம் தண்ணீரின் பங்காகும். உடலில் நீர் சத்து குறைந்தால் தோல் வறண்டு போவதோடு உடல் சோர்வடைந்து விடுகிறது. இதனால் அகத்தோற்றம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

வயதாவதை முதலில் உணர்த்துவது தோல்தான். முகத்தில் சிறிது சுருக்கம் விழுந்தாலும் கவலை கொள்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். சருமத்தை பாதுகாப்பதற்காக எத்தனையோ கிரீம்களை உபயோகிக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். பளபளப்பாகவும், மிக அழகான தோல் வேண்டும் என்பதற்காகவும், அதனை பாதுகாக்கவும் என்னென்னவோ முயற்சி செய்கின்றனர்.

முகப் பளபளப்பு

அதிக தண்ணீர் குடித்தால் தோல் சுருக்கம் காணாமல் போய்விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தண்ணீர் குடிப்பதன் மூலம் தோலுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. இதன் மூலம் இளமையான தோற்றம் ஏற்படுகிறதாம்.

இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற பெண்களை எட்டு வாரங்களுக்கு தினமும் தொடர்ந்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவு பெண்கள் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர்.

வில்லோ நீர் என்பது இங்கிலாந்தில் அமைந்திருக்கும் லேக் மாவட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் தண்ணீராகும். இந்த தண்ணீரில் இருக்கும் சாலிசின் செரித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. பெரும்பாலான சரும பராமரிப்பு கிரீம்களில் சாலிசிலிக் ஆசிடைத்தான் பயன்படுத்துகின்றனர்.

திரும்பிய இளமை

செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தப்படும் சாலிசிலிக் ஆசிடை தண்ணீர் குடித்து இயற்கையாக நாம் பெறுவதால்தான் தோல் சுருக்கம் மறைந்து போகிறது.

இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களை ஆராய்ச்சிக்கு முன்னரும், பின்னரும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் ஆய்விற்கு பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாக தோன்றியுள்ளனர்.

சாதாரண தண்ணீர் குடித்தவர்களுக்கு தோல் சுருக்கம் 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம்.

தண்ணீரின் அவசியம்

உஷ்ணபிரதேசங்களில் தண்ணீரின் தேவை முக்கியமானது. தேவையான அளவிற்கு தண்ணீர் அருந்தாததன் காரணமாக அவர்கள் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்சினைக்கும் ஆளாகின்றனர். எனவே உடல் நலத்திற்கு சராசரியாக மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீரை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நோயாளிகள் 4 முதல் 5 லிட்டர் தண்ணீரும், தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 6 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும் பரிந்துரைக்கின்றனர்.

நான்கு லிட்டர் தண்ணீர்

நான்கு லிட்டர் தண்ணீரையும் ஒரே நேரத்தில் அருந்தக்கூடாது என்று கூறும் மருத்துவர்கள் காலையில் ஒன்றரை லிட்டர் தண்ணீரும், காலை மற்றும் மதிய உணவு இடைவேளைக்கு இடையே ஒரு லிட்டரும் குடிக்கவேண்டுமாம். மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு இடையே ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்,

சாதாரண உடல் நிலை கொண்டவர்கள் குளிர்ந்த நீர் அருந்துவது வயிற்றுக்கு நல்லது. ஒரு சிலர் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவார்கள். எப்போதாவது சுடுநீர் தண்ணீர் அருந்துவது தவறில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: பத்திரிக்கை செய்திகள்

02 மார்ச் 2012

ஆண்களுக்கும் வரும் மார்பகபுற்றுநோய்.....அதிர்ச்சி தகவல்


மார்பகப் புற்றுநோய் இந்தியாவில் பெண்களிடம் கருப்பைப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக அதிகமாக காணப்படும் ஒன்றாகும்.மா‌ர்பக‌ப் பு‌ற்றுநோ‌ய் எ‌ன்றாலே அது பெ‌ண்களு‌க்கு‌த்தா‌ன் வரு‌ம் எ‌ன்று ஆ‌ண்க‌ள் ‌நினை‌க்க வே‌ண்டா‌ம். அவ‌ர்க‌ளிடமு‌ம் மா‌ர்பக‌ப் பு‌ற்று நோயை உருவா‌க்குவத‌ற்கான ஜ‌ீ‌ன்க‌ள் உ‌ள்ளன எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர்.


மா‌ர்பக‌ப் பு‌ற்றுநோயை உருவா‌க்கு‌ம் ஜ‌ீ‌ன்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் ஆ‌ண்க‌ளி‌ன் உட‌லி‌ல் இரு‌ந்துதா‌ன், அவ‌ர்க‌ளி‌ன் பெ‌ண் குழ‌ந்தைகளு‌க்கு‌ப் பரவு‌கிறது


ஆ‌ண்க‌ளி‌ன் உட‌லி‌ல் உ‌ள்ள BRCA-1 அ‌ல்லது BRCA-2 ஆ‌கிய ஜ‌ீ‌ன்க‌ள் மா‌ர்பக‌ப் பு‌ற்று நோ‌ய்‌க்கு‌க் காரணமாக உ‌ள்ளன. இ‌ந்த ஜ‌ீ‌ன்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் பெ‌ண் குழ‌ந்தைகளு‌க்கு அவ‌ர்க‌ளி‌ன் த‌ந்தை‌யிட‌மிரு‌ந்து கட‌த்த‌ப்படு‌கிறது.


இதன் அறிகுறிகள்

மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில் நெரிக்கட்டு ஏற்படுதல்.மார்பக காம்புகளிலிருந்து இரத்தத்துடன் கலந்து கசிவு.

மார்பக காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளுதல், மார்பகத் தோலில் ஏற்படும் மாதரம் என பெண்களுக்கு தென்படும் அறிகுறிகளே ஆண்களின் மார்பக புற்று நோய்க்கும் தென்படும்

தோ‌ல், சுர‌ப்‌பிக‌ள், எழு‌ம்புக‌ள் ஆ‌‌கிவ‌ற்‌றி‌ல் உருவாகு‌ம் பு‌ற்றுநோ‌ய்க‌ள் ம‌ட்டுமே ஆ‌ண்களை அ‌திக‌ம் தா‌க்குவதா‌ல், அவ‌ர்க‌ள் மா‌ர்பக‌ப் பு‌ற்றுநோ‌ய் ப‌ற்‌றி‌க் கவலை‌‌ப்படுவ‌தி‌ல்லை எ‌ன்று‌ம் மரு‌த்துவ‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.

மேலும் பெரு‌ம்பாலான ஆ‌ண்க‌ள் த‌ங்க‌ளிட‌‌ம் மா‌ர்பக‌ப் பு‌ற்று‌க்கான ஜ‌ீ‌ன்க‌ள் உ‌ள்ளனவா எ‌ன்பதை சோதனை மூல‌ம் தெ‌ரி‌‌ந்துகொ‌ள்ள மு‌ன்வருவ‌தி‌ல்லை எ‌ன்று கூறு‌ம் மருத்துவர்கள் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பெ‌ண்க‌ளி‌ன் சகோதர‌ர்க‌ள், கணவ‌ர், த‌ந்தை ஆ‌கியோரை சோதனை செ‌ய்து கொள்ளவேண்டும் எனவும் கூறுகின்றனர்....

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வருடத்துக்கு 2,030 ஆ‌ண்களு‌க்கு‌ மா‌ர்பக‌ப் பு‌ற்றுநோ‌ய் கண்டறியபற்றுள்ளதுஆனா‌ல் இது ஒ‌ட்டுமொ‌த்த பு‌ற்றுநோ‌ய் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டோ‌ர் எ‌‌ண்‌ணி‌க்கை‌யி‌ல் 1 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌ம் குறைவு எ‌ன்பதா‌ல் யாரு‌ம் கவலை‌ப்படுவது இ‌ல்லை. ........ஐரோப்பிய நாடுகளிலும் ஆண்டுதோறும் இந்நோயினால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.....

நன்றி:பத்திரிக்கை செய்தி


ஆகவே முடிந்தவரை விழிப்புடன் இருப்போம்....

26 பிப்ரவரி 2012

மாரடைப்பா இல்லை சாதாரண நெஞ்சுவலியா?எப்படி கண்டுபிடிப்பது..?




சாதாரணமாக நாம் நெஞ்சுவலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று எண்ணும் அளவுக்கே மருத்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறோம்.

வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்ப உரிய மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும்.

அதைவிடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்புதான் ஏற்பட்டு விட்டதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.

உடல் வலி, அழுத்தம், இறுக்கம் போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன.

ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான வலி இருக்கும். ஆனால், நோய் தீவிரம் அதிகம் இருக்கக்கூடும்.

உங்களுக்குத் தோன்றும் அறிகுறிகளை மருத்துவப் பரிசோதனையின்போது மருத்துவரிடம் எடுத்துரைக்க வேண்டும்.

குறிப்பாக உடலின் எந்தப் பாகத்தில் வலி ஏற்படுகிறது? ஓய்வின்போது வலி குறைகிறதா? இரவு பகல் வேளைகளில் எப்போது வலி அதிகமாக உள்ளது? என்பன போன்றவற்றை சொன்னால், அதற்கேற்ப சிகிச்சை முறைகள் உள்ளன.

மாரடைப்பு நோயானது பல்வேறு விதமான அறிகுறிகளை உடையது. இதயத் தசைகள் இறந்து சிதைவுறுவதாலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாததால் ஏற்படும் அறிகுறிகளாவன:

நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது; அதிக வியர்வை; நெஞ்சு இறுக்கம்; மூச்சுத் திணறல்; இடது தோள்பட்டை கைகள், தாடை மற்றும் பற்களில்கூட வலி பரவுதல் போன்றவை.

ஆண்களுக்குப் பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவதுபோல் தோன்றும். பெண்களுக்கு மூச்சுத் திணறல், மேல்வயிறு எரிச்சல் தோன்றி வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றக்கூடும்.

அறிகுறிகளைத் தெரிந்து கொண்ட பிறகு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம். இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.

பரிசோதனைகளைச் செய்து கொள்வதன் மூலம் நோய் தீவிரமாவதைத் தடுக்கலாம்.

எனவே நெஞ்சுவலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ள நிலையில், அதனை மாரடைப்பு என்று தவறாக நினைத்து வருந்தத் தேவையில்லை.








நன்றி: பத்திரிக்கை செய்தி