30 அக்டோபர் 2010

ஊழல் பெருச்சாளி சவான்.....

கார்கில் போரில் நாட்டுக்காக போராடி உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு கட்டப்பட்ட வீடுகளை தனது உறவினர்களுக்காக லபக்கியது அம்பலமானதால் மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் இன்று ராஜினாமா....

ஒதுக்கபட்ட நூற்றி இரண்டு வீடுகளில் முப்பத்தி ஏழு வீடுகள் மட்டுமே உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டன.....மீதி வீடுகளை தனது மாமியார்,உறவினர்கள்,மற்றும் தனது ஆதரவாளர்களுக்கு ஏதோ தன் அப்பன் வீட்டு சொத்துக்களை குடுப்பது போல வாரி வழங்கி உள்ளார் இந்த ஊழல் பெருச்சாளி......

ஏன்யா உங்களுக்கெல்லாம் மன சாட்சியே இல்லையா??

நாட்டுக்காக உயிரிழந்த அந்த வீரர்களின் தியாகத்துக்கு கிடைத்த வீடுகளிலா கைவைப்பது? உங்களுக்கெல்லாம் வீடு வாசல் இல்லையா? இல்ல பிச்சக்காரன் மாதுரி ரோட்லையா படுத்துகிடந்திங்க?

மக்களின் பணத்தை கொள்ளை அடிச்சது பத்தாதுன்னு இப்ப இறந்த வீரர்களுக்கு
வழங்கப்பட்ட வீட்டயுமா கொள்ளை அடிப்பது?

உன்னை மாதுரி ஊழல் பெருச்சாளிகளை நடூ ரோட்டில் நிப்பாட்டி அடித்தால்தான் திருத்துவீங்க......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....