07 டிசம்பர் 2012

கருணாநிதி ஆந்திராகாரருங்கோ!!ஆதாரங்களோடு அன்புமணி!.......





நான் கேட்குற ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க (சொன்னால் ஒரு குச்சிமிட்டாய் தருவாருங்கோ!)ஒரு தமிழன் கேரளாவிலோ ,ஆந்திராவிலோ ,கர்நாடகாவிலோ போய்  முதல்வர் ஆக  முடியுமா ?ஆனா இங்க பாருங்க ஜெயலலிதா எந்த ஊர்னு நான் சொல்லவேண்டியது இல்லை..(சொன்னால் உள்ளே போய்விடுவோம்னு தெரியும் சாருக்கு!)விஜயகாந்த் தமிழர் கிடையாது....தமிழின தலைவர்னு மூச்சுக்கு 300 தடவை சொல்லிக்கிட்டு இருக்கும் (அவர்  மூச்சு விடும்போது இவர்தான் எண்ணி பார்த்தாரு போல!)கருணாநிதியே தமிழர் அல்ல!(கொஞ்சம் விட்டா தமிழ்நாட்ல நாங்கதான் தமிழர்கள்ன்னு சொல்லிவிடுவார்!)கருணாநிதியோட  பூர்வீகம் ஆந்திராதான்!(ஆனா நம்ம டாக்டரு அய்யாவின்  வகையிரா   தமிழ் மொழி தோன்றும்போதே  தோன்றியது என்றால் பார்த்துகொள்ளுங்கள்!)

கருணாநிதியோட பூர்வீகம் ஆந்திராதான் என்பதற்கான ஆதாரங்கள் சீக்கிரம் வெளிவரும் (இப்ப சென்சார் போர்டுல அனுமதி வாங்க இருக்கு போல!)....அதனால தமிழ்நாட்டை தமிழர்கள் ஆள  வாய்ப்பு கொடுங்கள் என மக்களிடம் கேட்க போகிறோம்(அது நியாயம்தான்...ஆனா அந்த தமிழனே நான்தான் என நீங்களே சொல்லிகொண்டால்  எப்படி?)

எந்த நம்பிக்கையிலே ஆட்சியை பிடிப்போம் என ஆனந்த விகடன் பேட்டியில் அன்புமணி ராமதாஸ் சொன்ன பதில்தான் இது...மேலும் சில கேள்விகளையும் அவரோட பதிலையும் என்னோட கவுண்டரோடு படியுங்கள்...

கேள்வி: ராமதாஸும் ,அன்புமணியும் பெரும் குடிகாரர்கள் என வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி .என் .ராமமூர்த்தி பேசி இருக்கிறாரே?

அன்புமணி:  அவர் யாருன்னே எனக்கு தெரியாதுங்க (தெரியாட்டி என்ன ?கேட்ட கேள்விக்கு பதில் என்ன சாரே?!)

கேள்வி:திராவிட கட்சிகளை தவிர்த்து ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வேறு யாருடன் கூட்டணி வைக்கப்போகிறீர்கள்?

இவங்க கூட்டணியே எங்களுக்கு தேவை இல்லை...தமிழ்நாட்டு மக்கள் இருக்காங்க...அவங்க எங்களுக்கு ஒட்டு போட போறாங்க (2011ல மட்டும் என்ன ஆந்திர மக்களா இங்கு வந்து ஒட்டு போட்டாங்க?!)

கேள்வி:வன்னிய சமூகத்துக்கு பெண்களை வேறு சாதியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்தால் கையை வெட்டுங்கள் என பேசி பிரச்சினையை ஆரம்பித்ததே காடுவெட்டி குருதானே ?

குரு சொன்னா எல்லாரும் அப்படியே கேட்டுருவாங்களா?(அட இந்த காட்டுமிராண்டி தனமான பேச்சை எல்லாரும் வேற கேட்கணுமா?பா.ம.க.வுக்கு ஒட்டு போடுங்கன்னு குரு சொல்லி எல்லாரும் எங்களுக்கு ஒட்டு போட்டாங்களா (அப்பாடா இப்பவாச்சும் யாருமே எங்களுக்கு ஒட்டு போடலன்னு ஒத்து கிட்டாரே !)நானோ, அய்யாவோ ,குருவோ காதலுக்கு எதிரானவங்க இல்ல...உண்மையான காதல்னா உயிரை கொடுத்தாவது (யார் உயிரை?!காதலர்களின் உயிரையா !)சேர்த்து வைக்க தயாரா இருக்கிறோம்...

பேட்டி பினிஷ் ..

ஓகே...நான் தெரியாமதான் கேட்கிறேன்..இதுவரை தமிழர்களை  தமிழன் ஆளவே இல்லை என நீங்களும்,உங்கள் அப்பாவும் சொல்கிறீர்களே காமராஜர்,அண்ணா இவர்களெல்லாம் என்ன  ஐரோப்பியாவிலிருந்தா வந்தார்கள்?


2 கருத்துகள்:

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....