12 மார்ச் 2012

உலக கோப்பை அரை இறுதி போட்டியில் மேட்ச் பிக்சிங் !?பாலிவுட் நடிகையை வைத்து வீரர்களை கவுத்த புக்கிகள்....

கிரிக்கெட்.....இந்தியர்களின் இரத்தத்தில் கலந்த ஒன்று.....கிரிக்கெட் பார்க்கமாட்டேன் என்று சொல்பவர்களை ஏதோ குற்றவாளியை பார்ப்பதுபோல பார்ப்பவர்களே இங்கு அதிகம்....


நானும் கிரிக்கெட் வெறியன்தான்...சென்ற ஆண்டு இந்தியா உலக கோப்பையை வென்றபோது ஏதோ நாட்டுக்கு இப்போதுதான் சுதந்திரம் கிடைத்ததுபோல நம் நாட்டு மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை....


கடந்த 2010ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோர் "ஸ்பாட்-பிக்சிங்' எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு, ஜெயில் தண்டனை பெற்றனர். அதற்கு முன்னே சூதாட்ட புகார்கள் பல பேர் மீது சொல்லப்பட்டு வந்தாலும் அப்போதுதான் முதல்முறையாக கையும் களவுமாக பிடிபட்டனர்....அப்போதே கிரிக்கெட் மீது வெறுப்பு வந்தது....ஆனாலும் என்னைபோல பலகோடி பேருக்கும் கிரிக்கெட் பார்க்காமல் இருக்க முடியவில்லை...

ஆனால் இப்போது மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை வெடித்துள்ளது. இம்முறை "பாலிவுட்' நடிகை ஒருவருக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் மோதிய போட்டியை வைத்து பெருமளவில் சூதாட்டம் நடந்ததாக பிரிட்டன் பத்திரிகை ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி., விசாரணை நடத்த உள்ளது.



தற்போது, சூதாட்ட பிரச்னை குறித்து பிரிட்டன் பத்திரிகை "சண்டே டைம்ஸ்' ரகசிய புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன் வேண்டுமென்றே மந்தமாக ஆட, அவருக்கு ரூ. 35 லட்சம், பவுலர்கள் ரன்களை வாரி வழங்க, ரூ. 40 லட்சம், போட்டியின் முடிவை உறுதி செய்யும் வீரர் அல்லது நிர்வாகிக்கு ரூ. 6 கோடி வரை சூதாட்ட புக்கிகள் கொடுப்பது தெரிய வந்துள்ளது.


கடந்த ஆண்டு மொகாலியில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை வென்றது. இப்போட்டியிலும் பெருமளவு சூதாட்டம் நடந்துள்ளதாம். சூதாட்டக்காரர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களை தங்களது வலைக்குள் வைத்துள்ளனர். இவர்களை கவர, பாலிவுட் நடிகை ஒருவரை பயன்படுத்திய விஷயத்தையும் "சண்டே டைம்ஸ்' அம்பலப்படுத்தியுள்ளது. இந்த நடிகையை பற்றிய விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.


சூதாட்டம் தொடர்பாக தான் சேகரித்த அனைத்து தகவல்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்(ஐ.சி.சி.,), "சண்டே டைம்ஸ்' பத்திரிகை வழங்கியுள்ளது. இதன் மீது ஐ.சி.சி., விசாரணை நடத்த உள்ளது. இதில், பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளின் முடிவை சூதாட்ட ஏஜன்ட்கள் நிர்ணயிக்கின்றனர் என தெரிந்தேதான் நாம் அனைவரும் அதை ரசித்து பார்த்துகொண்டு இருக்கிறோமா என நினைக்கையில் வேதனை கலந்த ஏமாற்றமும் ,வெட்கமுமே மிஞ்சுகிறது....!

இன்னமும் நேரத்தை வீணாக்கி அந்த பண பொறுக்கிகளின் விளையாட்டை
நாம் ரசிக்கத்தான் வேண்டுமா? பார்க்க கூடாது என மனம் நினைக்கிறது....ஆனால் ஒவ்வொரு முறையும் வெற்றி நமக்கல்ல ..அந்த பண பொறுக்கிகளுக்குத்தான் என்பதில் ஐயமில்லை....

2 கருத்துகள்:

  1. இப்போது நடக்கும் பெரும்பாலான ஆட்டங்களை பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. எல்லா விஷயங்களுக்குமே வீழ்ச்சி என்று ஒன்று உண்டுதானே.... இப்போது அது கிரிக்கெட்டுக்கு போலும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ரசிகர்களுக்குத்தான் வீழ்ச்சி..கிரிக்கெட்டுக்கு அல்ல...நன்றி

      நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....