04 ஆகஸ்ட் 2012

1


ஒரு சந்தேகம் .............

எங்களை யாரும் எதிர்கட்சியாக மதிப்பதில்லை # விஜயகாந்த்

நீங்களாவது உங்களை எதிர்கட்சியாக மதிக்கிறீர்களா இல்லையா கேப்டன்..!?



ஒரு கேள்வி ....

எதற்குமே பதில் சொல்லாமலும் ,பேசாமலும் இருப்பதற்கு பெயர் ஊமையா இல்லை மன்மோகன் சிங்கா ?



ஒரு வித்தியாசம் ..........

கோபாலபுரத்தில் இருந்து அறிக்கையோ ,அரசாணையோ வந்தால் அது கலைஞர் ஆட்சி !

கொடநாட்டில் இருந்து அறிக்கையோ ,பல அரசாணைகளோ வந்தால் அது ஜெயலலிதா ஆட்சி !!




ஒரு புதுமொழி ............

குடி குடியை கெடுக்கும்...........

தமிழ்நாடு அரசோ குடிக்க சொல்லி கொடுக்கும்....




ஒரு முரண் ..........

சாலை ஓரங்களில் படுத்து உறங்கினால் அவர் பிச்சைக்காரர்


340 அறைகள் கொண்ட வீட்டில் படுத்து உறங்கினால் அவர் ஜனாதிபதி !

7 கருத்துகள்:

  1. கேள்வியும், பதிலும் - அசத்தல்...

    (த.ம. 3)

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....