நித்யானந்தா எந்த ஒரு அமைப்புக்கும் தலைவராகும் தகுதி இல்லாதவர் என நெத்தியடியாக கூறி சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளது தமிழக அரசு....
ஆன்மிகம் என்ற போர்வையில் காம களியாட்டங்களை அரங்கேற்றிவந்த நித்யானந்தாவின் முகமூடி கிழிந்த பின்பு மதுரை ஆதினம் என்ற வேறு ஒரு முகமூடியை மிரட்டியோ உருட்டியோ தனதாக்கிகொண்டார்....
அதை எதிர்த்து மதுரையில் பல்வேறு அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தின...ஆனால் தமிழக அரசு இது சம்பந்தமாக வாயே திறக்கவில்லை....நித்யானந்தாவும் தமிழக அரசு தன்னை ஒன்றும் செய்யாது என்று மலை போல நம்பி வந்தார்...
ஆனால் ரொம்ப லேட்டாகவே இருந்தாலும் ஹாட்டாகவே முடிவெடுத்து நித்தியை மொத்தி உள்ளார் ஜெ
மதுரை ஆதீனத்தின் இளைய வாரிசாக நித்தியானந்தாவை நியமிக்கும் முடிவை எதிர்த்து மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பு சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் "மதுரை ஆதீனத்தின் வாரிசாக இருக்க நித்திக்கு தகுதி இல்லை. ஆதீனம் இறந்த பிறகே வாரிசை நியமிக்க முடியும். ஆதீனத்தின் பக்தர் ஒருவரே வாரிசாக இருக்க தகுதி உள்ளவர். ஏராளமான வழக்குகளைக் கொண்டுள்ள நித்தியானந்தா நடத்தை சரி இல்லாதவர். எந்த அமைப்புக்கும் தலைவராகும் தகுதி நித்தியானந்தாவிற்கு இல்லை. மத அமைப்பு ஒன்றுக்கு தலைவராக இருக்க நித்தியானந்தா துளியும் தகுதி இல்லாதவர்"அவர் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது, என பதில்அளித்துள்ளார்.....மேலும் மதுரை ஆதினம் அருணகிரிநாதரை அப்பதவியில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளார்....அரசு வழக்கறிஞர் சொன்னால் அது அரசே சொன்ன மாதிரிதானே.....அரசு என்றால் அது ஜெயலலிதா தானே!!
பச்சை புள்ள மாறி சிரித்துகொண்டே பெண்களை சீரழித்த நித்யானந்தாவுக்கு நிச்சயம் இது பேரிடியாக இருக்கும்.....கர்நாடகாவில் இருந்து அடித்து துரத்தி விட்ட பிறகு மதுரை ஆதினம் அருணகிரிநாதருக்குஏதோ சொக்குபொடி போட்டு தன்வசப்படுத்தி மதுரை இளைய ஆதினமாக முடி சூட்டிகொண்டார்....
பாவம் அவர் உண்டு அவர் வேலை உண்டு என திரிந்தார் அருணகிரிநாதர்....அந்த காமுகனால் இந்த சிக்ஸ் பேக் சிங்கத்துக்கும் இப்ப ஆபத்து!
பாவம் அவர் உண்டு அவர் வேலை உண்டு என திரிந்தார் அருணகிரிநாதர்....அந்த காமுகனால் இந்த சிக்ஸ் பேக் சிங்கத்துக்கும் இப்ப ஆபத்து!
பல்வேறு எதிர்ப்புகள் வந்தபோதும் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கையுள்ள ஜெயலலிதா தன்னை ஒன்றும் செய்யமாட்டார் என அதித நம்பிக்கையுடன் வலம்வந்த நித்யானந்தா இப்ப எங்கே ஓடி ஒழிய போகிறார்?
இனியாவது இந்த காமுகனை நம்பும் அவரது பக்தர்கள் உண்மையை உணர்ந்து மாற வேண்டும்...ஆனால் அது மட்டும் நடக்கவே மாட்டேங்குது.பொதுமக்களின் பலவீனமான அந்த நம்பிக்கையே இந்த கயவனின் பலம்....!
கர்நாடகா காலை வாரி விட்டது...தமிழ்நாடு தலையில் அடித்துவிட்டது ...ஓடு ராசா ஓடு....
கர்நாடகா காலை வாரி விட்டது...தமிழ்நாடு தலையில் அடித்துவிட்டது ...ஓடு ராசா ஓடு....
தூக்கி உள்ளே வைங்கப்பா அந்த காமுகனை!
Tweet |
காலம் தாழ்ந்தது எனினும்
பதிலளிநீக்குஅரசின் முடிவு சரியானதே
அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
நன்றி சார் வருகைக்கும் கருத்துரைக்கும்....
நீக்குஅம்மாவுக்கு இவ்வளவு தா'மதமாக' புரிஞ்சிருக்கு...!
பதிலளிநீக்குtm3
உங்கள் வார்த்தை விளையாட்டு அருமை ...நன்றி
நீக்குநல்ல முடிவு
பதிலளிநீக்குஎல்லாமே ஒரே தமாசுப்பா
பதிலளிநீக்கு