02 நவம்பர் 2012

ஏன் உருவானது திமுக?!



 தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகள் என்றால் அது திமுகவும்,அதிமுகவும்தான்....ஆனால் இந்த இரண்டுமே தானாக தோன்றிய கட்சிகள் அல்ல...இன்னொரு கட்சியிலிருந்து  உருவானவை ..அதிமுக தோன்றியது பற்றி ஏற்கனவே நான் பதிவிட்டு இருந்தேன்..இப்ப திமுக எப்படி உருவானது  என கொஞ்சம் பிளாஷ்பேக்...எல்லாருக்கும் தெரிந்து இருந்தாலும் வரலாற்றை திரும்பி பார்ப்பது சுவாரஸ்யமான ஒன்றுதானே....!

அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்தில் பெரியாருக்கு அடுத்த நிலையில் இருந்து  வந்தார்.... இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க ஆங்கிலய அரசு முடிவு எடுத்து இருந்த நேரம் அது....அந்த சமயத்தில் பெரியார் "1947 ஆகஸ்ட் 15 துக்க நாள்" என்று அறிக்கை விட்டார்....


கட்சியின் மற்ற தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் அவர் வெளியிட்ட அறிக்கை, கழகத்தினருக்கு அதிர்ச்சியை அளித்தது. குறிப்பாக, திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த அண்ணா பெரிதும் வேதனை அடைந்தார். பெரியாரின் அறிக்கை பற்றி, மற்ற தலைவர்களுடனும், பிரமுகர்களுடனும் அண்ணா கலந்து ஆலோசித்தார்.


முடிவில் "சுதந்திர தினம் துக்க நாள் அல்ல. இன்ப நாள்" என்று அறிக்கை விடுத்தார்.  இந்த அறிக்கை, தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. பெரியாருக்கும், அண்ணாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது பகிரங்கமாகியது. அண்ணா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, பெரியாரின் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.


"என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும் என் கருத்துக்களை அஞ்சாமல் கூறுவேன்" என்றார் அண்ணா."பெரியாரும், அண்ணாவும் பிரிந்துவிட்டார்கள். இனி ஒன்று சேர வழியே இல்லை" என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு அதிசயம் நடந்தது.


ஈரோட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பெரியாரும், அண்ணாவும் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், மாநாட்டுத் தலைவரான அண்ணாவை அலங்கார வண்டியில் அமரச்செய்துவிட்டு, நடந்தே வந்தார் பெரியார். மாநாட்டில் பெரியார் பேசும்போது "பெட்டிச்சாவியை நானே வைத்துக்கொண்டு எத்தனைக்காலம் அலைந்து திரிவது? அதனால் சாவியை அண்ணாதுரையிடம் கொடுத்துவிட முடிவு செய்துவிட்டேன்" என்று அறிவித்தார்.


மாநாட்டில் எழுந்த கைதட்டல் அடங்க, வெகுநேரம் பிடித்தது. பெரியாருக்கும், அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமை தீர்ந்துவிட்டதாக அனைவரும் எண்ணினார்கள். 1949 ம் ஆண்டு மே மாதம் 14 ந்தேதி, அன்றைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி திருவண்ணாமலைக்கு வந்திருந்தார்.
அவரைப் பெரியார் சந்தித்தார். இருவரும் ஒரு மணி நேரம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தனர். இருவரும் கொள்கையில் இரு துருவங்களாக இருந்த போதிலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாக விளங்கினார்கள். இருவரும் சந்தித்து நீண்ட நேரம் பேசியது, திராவிடக் கழகத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.


இந்த சமயத்தில், கோவையில் "முத்தமிழ் மாநாடு" நடந்தது. அதில் பெரியாரும், அண்ணாவும் கலந்து கொண்டனர். அண்ணா பேசும்போது, "திருவண்ணாமலையில் ராஜாஜியுடன் பெரியார் பேசியது என்ன என்பதை அறிய நாடு ஆவலாக இருக்கிறது. அதனை இந்த மாநாட்டில் பெரியார் விளக்கிட வேண்டும்" என்று கூறினார்.


"அது முற்றிலும் என் சொந்த விஷயம். மாநாட்டில் வெளியிட முடியாது" என்று பெரியார் கனல் கக்க பதிலளித்தார். பின்னர் பெரியார் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், தனக்கொரு வாரிசு ஏற்படுத்திக்கொள்வது பற்றி ராஜாஜியுடன் பேசியதாகக் குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து இன்னொரு அறிக்கையை வெளியிட்டார்.


"எனக்கும், என் பொருளுக்கும் சட்டப்படியான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமும், அவசரமும் ஆகும். ஆகையால் நான் ஐந்தாறு வருடங்களாகப் பழகி நம்பிக்கை கொண்டதும், என் நலத்திலும், இயக்கத்தின் நலத்திலும் உண்மையான பற்றும் கவலையும் கொண்டு நடந்து கொண்டிருக்கிறவருமான மணியம்மையை எப்படியாவது வாரிசுரிமை ஆக்கிக் கொண்டு, ஒரு டிரஸ்ட் பத்திரம் எழுதி வைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்" என்பதே அந்த அறிக்கை.
பெட்டிச் சாவியை அண்ணாவிடம் கொடுக்கப்போவதாக அறிவித்தவர், இப்போது திடீரென்று வாரிசு நியமிக்கப் போவதாக அறிவித்தது, திராவிட கழகத்தினருக்கு அதிர்ச்சியை அளித்தது. இதற்கிடையே, மணியம்மையை பெரியார் பதிவுத் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், அதற்காகத் திருமணப் பதிவாளரிடம் அவர் மனு செய்திருப்பதாகவும், சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.
அதைப் படித்த அண்ணாவும், மற்ற தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பெரியாரின் வயது 70, மணியம்மைக்கு வயது 30. மணியம்மை பெரியாருடனேயே இருந்து பணி விடைகள் செய்து வந்தார். "வேண்டாம் இந்த பொருந்தாத் திருமணம்" என்று பெரியாருக்கு தந்திகளும், கடிதங்களும் குவிந்தன.

ஆனால் திட்டமிட்டபடி 9.7.1949 ல் திராவிடக் கழக பிரமுகர் சி.பி.நாயகத்தின் இல்லத்தில், திருமணப் பதிவாளர் முன்னிலையில் பெரியார் மணியம்மை திருமணம் நடந்தேறியது...

இதனை தொடர்ந்து திராவிடர் கலக்கம் உடைந்தது..அண்ணா அவர்களால் திமுக செப்டம்பர் 18 அன்று உருவாக்கப்பட்டது.....செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு ராயபுரம் ராபின்சன் பார்கில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, தி. மு. க. வின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.

செய்தி சேகரிப்புக்கு நன்றி :காலச்சுவடுகள் 


ஆனால் இதெல்லாம் அண்ணாவுக்கு திராவிடர் கழகத்தில்  இருந்து விலக  தேவைப்பட்ட காரணங்கள்..உண்மையில் அண்ணாவுக்கு தேர்தல் அரசியலில் ஈடுபட ஆசை இருந்தது...அதற்கு திராவிடர் கழகம்  சரியாக வராது,பெரியார் ஒப்பு கொள்ள மாட்டார்  என்பதால் தக்க தருணம் பார்த்துகொண்டு இருந்த அண்ணாவுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது பெரியாரின் திருமணம்...!

10 கருத்துகள்:

  1. >> தாஜ்மஹால் மும்தாஜின் சமாதியா சிவன் கோவிலா << என்ற பதிவுக்கு

    பின்னூட்டகருத்து

    மீட்போம்! மீட்போம்! மீட்போம்!

    சிவபெருமானின் உறைவிடமான‌ பூலோக சொர்க்கமான திரிக்கைலாய மலையை, வத்திகனை, மக்கா, மதீனாவை, தாஜ்மஹாலை????


    தாஜ்மஹால் என்ன? கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை பீடமான இத்தாலியில் உள்ள வத்திகன் நகரமும்

    அரேபியாவிலுள்ள இஸ்லாமியர்களின் புனித தளங்களான மக்கா மதீனா கூட இந்துக்களுடையது தானாம். இந்துக்களின் கோயிலாக இருந்ததுதானாம்.

    Purushottam Nagesh Oak (March 2, 1917 – December 4, 2007), commonly referred to as P. N. Oak, was an Indian writer, notable for his Hinducentric brand of historical revisionism.

    Oak's "Institute for Rewriting Indian History" issued a quarterly periodical called Itihas Patrika in the 1980s.

    Oak's claims, e.g. that Christianity and Islam are both derivatives of Hinduism,

    or that the Catholic Vatican,

    Kaaba and the Taj Mahal were once Hindu temples to Shiva,[1]

    and their reception in Indian popular culture have been noted by observers of contemporary Indian society,

    who variously characterized Oak as a "mythistorian"[2] or more directly as a "crackpot".[3]

    In addition to this Oak again asserted that the Vatican was allegedly originally a Vedic creation called Vatika and that the Papacy was also originally a Vedic Priesthood.

    In his book, Some Missing Chapters of World History, Oak claimed that the first civilization was developed in India from which all world civilizations grew.
    He wrote books in three languages.

    சொடுக்கி.
    >>
    மெக்காவையும் , மதீனாவையும் தங்களுடையது என பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.
    << காணுங்கள்.

    திருக்கைலயங்கிரி என்ற தமிழ் இலக்கியம் போற்றும் திரிக்கைலாய மலை உள்ள பிரதேசம்தான் பூலோக சொர்க்கம்.

    இது திபெத் பகுதியில் உள்ளது.

    சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட எல்லைப் பிராந்தியம்;

    `கைலாஸ் மானஸரோவர் எனும் இப்பிரதேசம்.

    பாரதத்தின் கலை - கலாசார ஆன்மீகத்துறைகளுக்கு ஆதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது இந்தப் பூலோக சொர்க்கம்.

    இதற்கு பாரதத்தில், வழங்கிய புராதனப் பெயர் `த்ரிவிஷ்டபம் (திப்பெத்).

    சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத்தில் தான் ஏற்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது.

    பூமியில் பேரதிர்வு ஏற்பட்டு, இமயமலை எழுந்ததும், கடல்கள் உருவானதும் இப் பகுதியிலிருந்துதான்.

    ரிக் வேதத்தில் இத்தகவலைத் தரும் பல சூக்தங்கள் இருக்கின்றன.

    ``மூன்று தைவ சக்திகள் - அக்னி இடி மின்னல், சூரியன் இங்கு ஒன்று சேர்ந்து இயங்கியதால் ஜீவராசியின் சிருஷ்டி தொடங்கியது. இதுதான் சொர்க்க லோகம்;

    இப்பகுதியை `த்ரவிஷ்டபம் (மூன்று தைவ சக்திகள் ஒருமித்த சொர்க்கம்) என்று அழைக்கிறோம்.

    மகாபாரதத்தில் வியாச முனிவர் இந்த திப்பெத் பிரதேசத்தை `த்ரதவிஷ்டபம் என்றே குறிப்பிட்டு, ஆர்ய வர்த்தத்தின் நடுப்பகுதி, மிகப் புனிதமான புண்ய பூமி என்று கூறியிருக்கிறார்.

    கிம் புருஷவர்ஷம். கின்னரதேசம், கந்தர்வ லோகம் என்றெல்லாம் வர்ணிக்கிறார்.

    கைலாஸ பர்வதத்தை ``ஹேம கூடம் என்று மகாபாரதமும் `கிரௌஞ்ச பர்வதம் என்று வால்மீகி ராமாயணமும் குறிப்பிடுகின்றன.


    ஏழாம் நூற்றாண்டிலிருந்து 1954-ல் சீனா இந்நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்கு முன்பு வரையில் பாரதத்தின் பகுதி போல இங்கு இந்திய யாத்திரிகள் போய் வந்து கொண்டிருந்தார்கள்

    கைலாஸ் - மானஸரோவர் பகுதியிலுள்ள மகன்ஸர் கிராமத்திலிருந்து பாரதம் 1948-க்கு முன்பு வரைக்கும் கிஸ்தி வசூல் செய்து கொண்டிருந்தது.

    1950 வாக்கில் இப்பகுதியுடன் கிட்டத்தட்ட எண்பதாயிரம் சதுர மைல் பரப்புள்ள இந்தியப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதால் 1962-ல் ஏற்பட்ட சீனப் படையெடுப்பிற்குப் பின் கைலாஸ் மானஸ ரோவர் புனித யாத்திரை தடைப்பட்டு விட்டது.

    -திரு. சௌரி எழுதிய `இந்தியாவின் கலையும் கலாசாரமும் என்ற நூல் - பக்கம் 145, 146

    பூலோக சொர்க்கம் என்று போற்றப்படுகின்ற இடம்!

    சிவபெருமான் உறைவதாகக் கூறப்படுகின்ற இடம்!

    இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நிய சீனாக்காரன் எப்படி ஆக்கிரமித்தான்? -

    சொடுக்கி >>>
    சீனாக்காரன் கையில் சிக்கிய சிவபெருமானும் ! சொர்க்க லோகமும் !! எப்போது எப்படி மீட்பது ?
    <<< படியுங்கள்

    .

    பதிலளிநீக்கு
  2. தாஜ்மஹால் என்ன? கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை பீடமான இத்தாலியில் உள்ள வத்திகன் நகரமும்

    அரேபியாவிலுள்ள இஸ்லாமியர்களின் புனித தளங்களான மக்கா மதீனா கூட இந்துக்களுடையது தானாம். இந்துக்களின் கோயிலாக இருந்ததுதானாம்.

    உலகனைத்தும் உள்ள அனைத்துமத வழிபாடு தலங்களும் அனைத்துமத புனித தளங்களும் இந்துமத கோயில்களின் மேல் உருவாக்கப்பட்டவைகள் என்ற இந்துத்வா காவிக‌ளின் ஓல‌த்தை கேட்டு கேட்டு ப‌டித்து ப‌டித்து புளித்துவிட்டது.

    வரலாற்றை திரித்து திரித்து
    பொய்களை திரும்ப திரும்ப கூறி திரும்ப திரும்ப எய்தி எய்தி ஜகதாள புரட்டு செய்வதில் வல்லவர்கள் இந்த‌ இந்துத்வா காவி புழுதிகள் என்று உலக‌றியும்.
    ===============================================
    Purushottam Nagesh Oak (March 2, 1917 – December 4, 2007), commonly referred to as P. N. Oak, was an Indian writer, notable for his Hinducentric brand of historical revisionism.

    Oak's "Institute for Rewriting Indian History" issued a quarterly periodical called Itihas Patrika in the 1980s.

    Oak's claims, e.g. that Christianity and Islam are both derivatives of Hinduism,

    or that the Catholic Vatican,

    Kaaba and the Taj Mahal were once Hindu temples to Shiva,[1]

    and their reception in Indian popular culture have been noted by observers of contemporary Indian society,

    who variously characterized Oak as a "mythistorian"[2] or more directly as a "crackpot".[3]

    In addition to this Oak again asserted that the Vatican was allegedly originally a Vedic creation called Vatika and that the Papacy was also originally a Vedic Priesthood.

    In his book, Some Missing Chapters of World History, Oak claimed that the first civilization was developed in India from which all world civilizations grew.
    He wrote books in three languages.

    ===========================


    இத‌ற்கு ஆய்வு ஒன்றும் தேவையில்லை.

    சீனா கைபற்றிக்கொண்ட சிவனின் உறைவிடத்தை, கைலாஸ பர்வதத்தை, (கைலாஸ் மானஸரோவர்) திருக்கைலாய‌த்தை நோக்கி இந்துத்வாக்க‌ள் எப்பொழுது ர(த்)தயாத்திரை ந‌ட‌த்த‌ப்போகிறார்க‌ள்.?

    முதலில் 1950 வாக்கில் சீனா ஆக்கிரமித்து கொண்ட‌
    தலையாய கடவுளான‌
    சிவபெருமான் உறையும் திருக்கைலாயத்தை சீனாவிடமிருந்து இந்துத்வா காவிகள் மீட்கட்டும்.


    .

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும்,

    //ஆனால் இதெல்லாம் அண்ணாவுக்கு திராவிடர் கழகத்தில் இருந்து விலக தேவைப்பட்ட காரணங்கள்..உண்மையில் அண்ணாவுக்கு தேர்தல் அரசியலில் ஈடுபட ஆசை இருந்தது...அதற்கு திராவிடர் கழகம் சரியாக வராது,பெரியார் ஒப்பு கொள்ள மாட்டார் என்பதால் தக்க தருணம் பார்த்துகொண்டு இருந்த அண்ணாவுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது பெரியாரின் திருமணம்...!//

    இதையே தான் என் தந்தையும் கூறுவார் :-)

    வரலாற்றை திரும்பி பார்க்க வைத்ததற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  4. ஆனால் இதெல்லாம் அண்ணாவுக்கு திராவிடர் கழகத்தில் இருந்து விலக தேவைப்பட்ட காரணங்கள்..உண்மையில் அண்ணாவுக்கு தேர்தல் அரசியலில் ஈடுபட ஆசை இருந்தது...அதற்கு திராவிடர் கழகம் சரியாக வராது,பெரியார் ஒப்பு கொள்ள மாட்டார் என்பதால் தக்க தருணம் பார்த்துகொண்டு இருந்த அண்ணாவுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது பெரியாரின் திருமணம்...!\\ This is the truth!!

    பதிலளிநீக்கு
  5. பழைய செய்திகளை தெரிந்து கொள்ள இந்த இடுகை உதவியது.

    பதிலளிநீக்கு
  6. மறந்து போனதை மீண்டும் அறிந்து கொண்டேன்...

    நன்றி...
    tm6

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....