17 டிசம்பர் 2010

சொத்து கணக்கை வெளியிட்டார் ஜெயலலிதா.....


கருணாநிதி சொத்து கணக்கை வெளியிட்டதை தொடர்ந்து முன்னால் முதல்வர் ஜெயலலிதாவும் சொத்துகணக்கை வெளியுட்டுள்ளார்.....


அந்த அறிக்கை விபரம்வருமாறு......


ஜெயலலிதாவாகிய எனக்கு உள்ள சொத்துக்கள் பற்றிய விபரங்களை தமிழக மக்களுக்கு தெரியபடுத்த வேண்டியது எனது தலையாய கடமையாகும்.....


போயஸ் கார்டனில் உள்ள நான் வசிக்கும் இல்லம் எனது உடன்பிறவா சகோதரி சசிகலாவுக்கு சொந்தமானது ஆகும்......அதில் நான் வாடகை கொடுத்துதான் குடியிருக்கிறேன்....


கோடநாட்டில் உள்ள எஸ்டேட்டை அப்பகுதியில் உள்ள ஏழை மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து வசூல் பண்ணி ஓய்வு இல்லாமல் உழைக்கும் எனக்கு பரிசாக அளித்தனர் ..ஆனால் அதையும் நான் ஏற்றுகொள்ளாமல் ஏழை மக்களுக்கு எழுதி வைத்துள்ளேன்..... எனக்கு பின் அது ஏழை மக்களுக்கே சேரும்.........


நான் முதல் அமைச்சராக இருக்கும்போது ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியதை அனைவரும் அறிவீர்கள்.....அந்த வகையில் எனது வங்கி கணக்கில் ஒன்பது ஆயிரத்து ஒன்பது ரூபாய் உள்ளது.....


எனக்கு என்று சொந்தமாக ஒரு ஸ்கூட்டி பெப் கூட இல்லை.....நான் அணிந்து கொள்ள ஐந்து செட் உடைகள் மட்டுமே உள்ளன.....


சொந்தமாக செருப்புகூட இல்லாமல் சசிகலாவிடமிருந்துதான் வாங்கி போட்டு கொள்வேன்.....

எனக்கு என்று தனியாக செல்போன் இல்லை...

ஜெயா டிவி கூட ஜெயமாலினி என்பவருக்கு சொந்தமானது....அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.....


இப்போது எனது கையில் இருக்கும் பணம் தொள்ளாயிரத்து தொண்ணுற்றி ஒன்பது ரூபாய் மட்டுமே.....


இதுதான் எனது சொத்து கணக்கு.....இது எல்லா வற்றையும் விட தமிழக மக்களின் அன்பே எனக்கு மிகப்பெரிய சொத்தாகும்....


அண்ணா நாமம் வாழ்க.....புரட்சி தலைவர் நாமம் வாழ்க....


நன்றி வணக்கம்.....


சத்தியமா இது உண்மைதானுங்கோ.....

7 கருத்துகள்:

  1. அண்ணா நாமம் வாழ்க.....புரட்சி தலைவர் நாமம் வாழ்க....என்றால் ஜெயலலிதா அகராதியில் என்ன அர்த்தம் தெரியுமா?
    அண்ணாவுக்கு நாமம் போட்டு வாழ்(கிறேன்), புரட்சி தலைவருக்கு நாமம் போட்டு வாழ்(கிறேன்) என்று அர்த்தம்.

    பதிலளிநீக்கு
  2. //சத்தியமா இது உண்மைதானுங்கோ.....//

    :)))

    பாவம் அந்தம்மாவ எங்க வீட்டுபக்கம் வர சொல்லுங்க!!!

    பதிலளிநீக்கு
  3. பகிர்வுக்கு நன்றி

    ஆனா அவங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு!?

    பதிலளிநீக்கு
  4. அம்மா! சொல்(கி)றது உண்மையா'' தானுங்க இருக்கும் ! ஏன்னா? அவங்க எல்லாமே சசிக்கலாவை பினாமி வைச்சிருக்காங்க ! பிள்ளையாக் குட்டியா இருக்க வரைக்கும் சசிக்கலாகிட்ட வாங்கி எஞ்சாய் பண்ணலாம் நமக்கு அப்புறம் ! யாரு என்ன பண்ணா என்ன> விட்டுடாங்க போல?

    சிபியை ரைடு( தமிழில(ல்) என்ன(என்று)நு தெரிய(வில்)லை ) வந்தா சசிக்கலாத் தானே மாட்டுகிவாங்க ! அய்யோ நாம எஸ்கேப்

    பதிலளிநீக்கு
  5. மைசூர் மகாராசாவும்,என் காலில் விழுந்து வணங்கிய வீரத்தமிழர்களின் கணக்கிலடங்கா அன்பளிப்புக்களும் என் சொத்து எவ்வளவென்று எனக்கும் தெரியாது,என் ஆடிட்டருக்கும் தெரியாது.சசிக்குத் தெரியும் ஆனால் சொல்ல மாட்டார்.ஏர் கண்டிசனில் நான் சிந்தும் வியர்வை எனது தொண்டர்களுக்காக நான் உழைக்கும் உழைப்பின் முத்துக்கள்.அவர்களே என் சொத்தைகள்.

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....