14 பிப்ரவரி 2012

ஆதலினால் காதல் செய்வீர் நமது உடல் உறுப்புகளை !....!

நமது உடலில் ஏதாவது ஒரு உறுப்பு இல்லாமல் போனால் அல்லது செயல் இழந்து போனால்தான் அதன் அருமை நமக்கு புரியும்......நாம் ஆரோக்யமாக இருக்கிறோம் என நினைத்தாலும் நாட்கள் ஆக ஆக ஒவ்வொரு உறுப்பும் தனது ஆரோக்யத்தை இழக்க ஆரம்பித்துவிடும்...


பளீச் என்று எரியும் பல்பாக இருந்தாலும், பைக்காக இருந்தாலும், வலுவாக இத்தனை மணி நேரம், இத்தனை நாள்தான் இயங்க முடியும். அதுபோலத்தான் நம் உடலும். உடலில் உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித்தனி வயது உண்டு


*மூளை: மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி; நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 40 வயதில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 உயிரணுக்கள் வீதம் சரியும். நினைவாற்றல் உட்பட பல செயல்கள் செயலிழக்க இது தான் காரணம்.


*குடல்: குடலுக்கு 55 வயது வரை தான் முழு ஆரோக்கியம். அப்போது குடல், கல்லீரல், சிறுகுடல், இரைப்பையில் ஜீரணத்துக்கான நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். இதனால், அஜீரணம், வயிற்றுப்பிரச்னை போன்றவை தலைகாட்டும்.


*மார்பகம்: பெண்களுக்கு மார்பகம் 35 வயதில் சுருங்க ஆரம்பிக்கும். அதன் தசைகள், கொழுப்புத்தன்மை குறைய ஆரம்பிக்கும்; அதனால், பருத்த மார்பகம் சுருங்க ஆரம்பிக்கும்.


*சிறுநீர்ப்பை: இது வயசாவது 65 ல் ஆரம்பிக்கிறது. 30 வயதில் 2 கப் சிறுநீர் தேக் வைக்கும் அளவுக்கு கொள்ளளவு இருக்கும்; 65 ல் ஒரு கப் தான் தேங்கும் அளவுக்கு சுருங்கி விடும்.


*நுரையீரல்: 20 வயது வரை தான் முழுவீச்சில் இயங்கும். அதன் பின், இடுப்பு எலும்பு பகுதி நெருக்கிக்கொள்ள, நுரையீரல் சக்தி குறைந்து, மூச்சு , உள்ளிழுத்து வெளியேவிடும் அளவு குறையும். 40 வயசுக்கு மேல், சில அடிதூரம் நடந்தால் மூச்சு வாங்குவதற்கு காரணம் இது தான்.


*குரல்: தொண்டையில் உள்ள லாரினக்ஸ் என்ற மெல்லிய திசுக்கள் நீடிக்கும் வரை தான் குரலில் இனிமை இருக்கும். 65 வயதுக்கு பலவீனமாகி, குரல் ‘கரகர’ தான்.


*கண்: பத்திரிக்கை படிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும் கண்களை இடுக்கி, பாடாய்ப்படுத்தி பார்ப்பர் சிலர்; அடடா, வயது 40 ஆகி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அந்த வயதில் தான் பார்வை வலிமை குறைய ஆரம்பிக்கிறது.


*இருதயம்: ரத்தத்தை உள்வாங்கி, மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தி படைத்தது இருதய பம்ப்; ரத்தத்தை விரைவாக அனுப்பும் நெகிழ்திறன் கொண்ட இந்த பம்ப், 40 வயதில் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. அதனால், மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் பாயும் வேகமும் குறைகிறது.


*கல்லீரல்: இந்த ஒரு உறுப்பு மட்டும் தான் 70 வயது வரை சூப்பர் இயக்கத்துடன் உள்ளது. குவாட்டரை நினைக்காதவரை இதன் பலம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும்.


*சிறுநீரகம்: ரத்தத்தை சுத்தப்படுத்தி பிரிக்கும் வேலையை இதன் ‘நெப்ரான்ஸ்’ என்ற திசுக்கள் செய்கின்றன. 50 வயதில் இது வலுவிழக்க ஆரம்பிக்கிறது.


*எலும்புகள்: 25 வயது வரை தான் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பின் 35 ல் இருந்து பலவீனமடைய ஆரம்பிக்கும்.


*பற்கள்: எச்சில் ஊறும் வரை தான் பற்களுக்கு வலிமை. பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கும். நாற்பது வயதில் எச்சில் ஊறுவது குறைய துவங்கும். அதனால் தான் சிலரிடம் கப்ஸ்.


*தசைகள்: முப்பது வயதில் தசைகள் 0.5 முதில் 2 சதவீதம் வரை ஆண்டுக்கு குறைய ஆரம்பிக்கும். தினசரி பயிற்சி, உடல் உழைப்பு தான் இதில் இருந்து காக்கும்.


*தோல்: தோல்பகுதி, 25 வயதில் இருந்தே பலவீனமடைய ஆரம்பிக்கும்.

*தலைமுடி: முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்; வெள்ளை முடி தோன்றும்

நன்றி: நான் எப்போதோ படித்த பத்திரிக்கை செய்திக்கு....


நம்ம உடலும் இயந்திரம்தான்.......நாம் என்ன செய்தாலும் பழுது அடையத்தான் செய்யும்......அதற்குள் நாம் வாழும் வாழ்கையை அனுபவித்து, இன்பமாக வாழ நம்மை நாம் தயார் படுத்தி கொள்ள வேண்டும்....

ஆதலினால் காதல் செய்வீர் நமது உடல் உறுப்புகளை.....!

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இது அவசியமான பதிவு... நமக்கு நாமே திட்டத்தின் மூலம் நாம் நம் உடலை காதலிப்போம்.... நம் உடல் ஆரோக்கியமாக இருந்தால் நாம் எத்தனை பேரைவேண்டுமானாலும் காதலிக்கலாம் எத்தனை பேரால் வேண்டுமானாலும் காதலிக்கப்படலாம் ஹி...ஹி...

      நீக்கு
    2. கடைசி வரிகள் கலக்கல் பஞ்ச் ...நன்றி...

      நீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

    பொக்கிஷம் உன் உள்ளே இருக்கிறது.
    ஆகவே காதல் செய்வோம் நம் உடல் உறுப்புகளை

    பதிலளிநீக்கு
  3. வஸ்ஸலாம் சகோ...

    சரியாக சொன்னீர்கள்...நன்றி...

    பதிலளிநீக்கு
  4. வித்தியாசமான முறையில் சிந்திக்க வைத்த பதிவு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. ஸலாம் சகோ.ஹாஜா,
    இதுவரை கண்டிராத முற்றிலும் வித்தியாசமான ஆங்கிளில் சிந்தித்து பகிரப்பட்ட காதல் பதிவு இது. நன்றி சகோ.

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....