24 பிப்ரவரி 2012

மதகலவரம் புதிதல்ல :நரேந்திர கேடி,அமெரிக்காதான் பிரச்சினை ..பிரதமர் (நொறுக்கு தீனி)


மதகலவரம் ஒன்றும் குஜராத்திற்கு புதிதில்லை என திருவாய் மலர்ந்துள்ளார் நரேந்திர கேடி...

குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார் கேடி...இந்த அறிக்கையின் விவரங்கள், அதாவது மோடி அளித்த வாக்குமூலம் குறித்தத் தகவல்கள் கசிந்துள்ளன.அந்த கேடியின் வாக்குமூலம் இதோ...

குஜராத்தில் 2002-ம் ஆண்டில் மட்டுமே மதக்கலவரம் நடக்கவில்லை. குஜராத்துக்கு மதக்கலவரம் புதிதும் அல்ல.{ஆமாம் ...இந்த கேடிக்கு வேணும்னா அது ரத்தத்தில் ஊறிப்போன விசயமாக இருக்கலாம்..) நான் பிறப்பதற்கு முன்பே, குஜராத்தில் பல முறை மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன.(ஓஹோ ..அதனால்தான் இந்த கேடி பிறந்ததற்கு பிறகு கலவரங்களை நடத்தி இன்பம் கண்டு இருக்கிறார் போலும் !) கி.பி. 1714-ம் வருடத்தில் இருந்து வரலாற்றை புரட்டிப் பார்த்தால், குஜராத்தில் ஆயிரக்கணக்கான மதக்கலவரங்கள் நடந்திருப்பது பதிவாகி இருக்கும் ..(அந்த வரலாற்றோடு இந்த கேடியின் பெயரும் இடம் பெற வேண்டும் என துடித்து இருக்கிறார் .)


ஓகே ..இப்ப அந்த அயோக்கியனே செய்த தவறை ஒப்புகொண்டதுபோல குஜராத்தில் மத கலவரம் ஒன்றும் புதிதில்லை....அதனால்தான் நானும் கலவரத்தை நடத்தி இன்பம் கண்டேன் என வாக்குமூலம் கொடுத்துவிட்டார்...ஆனால் தண்டனைதான் கிடைக்காது ........


.............................. ....................................... .....................................................

பிசியாக தூங்கி கொண்டு இருந்த நமது பிரதமரை சோனியாவின் பேரன் எழுப்பிவிட்டான் போலும்...



"அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் சில அரசு சாரா அமைப்புகள், கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படுவதற்கு இடையூறு ஏற்படுத்துகின்றன' என, அதிர்ச்சி !! தரும் தகவலை கூறியுள்ளார் மன்மோகன் சிங் ....அப்புறம் ஏன்யா அமெரிக்காவுக்கு கொடி பிடிக்கிறீர்கள் எல்லா விசயத்திலும்?


................................. ..................................... .............................................


இந்தியாவில் ஓரின சேர்க்கையை அனுமதிக்க முடியாது என உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் அபிடவுட் தாக்கல் செய்துள்ளது...நல்ல விஷயம்...

ஆணுக்கு பெண் ,பெண்ணுக்கு ஆண் என் இறைவன் படைத்துள்ள நிலையில் (,நாத்திகர்களுக்கு அவர்கள் பாணியில் இயற்கை அளித்துள்ள !)ஏன் இந்த கருமம் பிடித்த ஜோடி மாற்றம்? இதற்கு ஒரு வழக்கு வேறு?!அதுவும் உயர்நீதிமன்றத்தில் ஓரின சேர்க்கை செல்லாது என தீர்ப்பளித்த பிறகும் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்கள்...வெட்கம் கெட்டவர்கள்...

.............................. .......................................... .....................................................


குடிபோதையில் வாகனம் ஓட்டி, மரணம் விளைவிக்கும் நபர் மீது, 10 ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய, போலீசாருக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அப்ப இறந்து போனவர்கள் கதி?


அட போங்கப்பா....குடி போதையில் வாகனம் ஓட்டுவதற்கே ஒரு ஐந்து வருடம் தண்டனைன்னு சொன்னாலாவது குடித்துவிட்டு வண்டி ஓட்ட சிறிதாவது பயம் வரும்...விபத்துகள் குறையும்...விபத்து நடந்ததற்கு பிறகு பத்து வருடம் தண்டனை கொடுத்து என்ன பயன்?

34 கருத்துகள்:

  1. நல்லதொரு அலசல்..! ஒவ்வொரு செய்தியையும் விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் என்ன செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனத் தீர்வையும் தந்திருப்பது பாராட்டத்தக்கது.!

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. அண்ணே நீங்க சீரியசாதான் சொல்றிங்களா?அதன் பெயரிலே ஓரினம் என இருக்கிறதே..!இங்கு இருப்பது இரண்டு இனம் அல்லவா?

      நீக்கு
  3. /* அட போங்கப்பா....குடி போதையில் வாகனம் ஓட்டுவதற்கே ஒரு ஐந்து வருடம் தண்டனைன்னு சொன்னாலாவது குடித்துவிட்டு வண்டி ஓட்ட சிறிதாவது பயம் வரும்...விபத்துகள் குறையும்...விபத்து நடந்ததற்கு பிறகு பத்து வருடம் தண்டனை கொடுத்து என்ன பயன்? */

    அதானே... ரொம்ப நியாயமான கேள்வி தான். ஆனால் உண்மை என்னன்னா... குடிய இந்த நாட்டில் ஒழிக்க முடியாது மச்சான். அது தப்புனே யாரும் புரிஞ்சிகல. இதில அறிவு ஜீவிக, நாத்திக நண்பர்கள் மற்றும் அனைவரும் அடக்கம். இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் தான் இது சம்பந்தமா தொடர்ந்து பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. மற்ற எல்லாம் பார்ட்டி, குடி கூத்துன்னு போய்கிட்டு இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மச்சான் அப்படி சொல்லாதிங்க..மருத்துவ " குடி"தாங்கி கோபித்து கொள்வார்....

      நீக்கு
  4. அடேய் கசாலி..கொஞ்சம் ஓடியாந்து இங்க பின்னூட்டங்கள பாருடா. அண்ணன் வெளங்காதவன் இங்கு ஏதோ சொல்லி இருக்காரு. smiley போடல. இன்னக்கி
    கண்டிப்பா மழை இருக்கு.

    பதிலளிநீக்கு
  5. /* #But, I'm opposing your thought about homo sex.....*/

    நீங்க எதை வேணும்னாலும் oppose பண்ணுங்க. அட..நீங்க பேசினதே பெரிய விசயம்கிறேன்.....

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. என்ன புரியல..... நானும் வோட்டு போட்டேன்னு விளம்பரம் செஞ்சிட்டு போறான் அவன். இவனும் இப்ப ஒரு மார்க்கமாத்தான் திரியறான்

      நீக்கு
    2. தமிழ் மணம் 3-ஆவது வோட்டு அவன் வோட்டுன்னு விளம்பரம் செய்றான்.

      நீக்கு
    3. ஓகே ஓகே...tmv அப்பிடின்னு சொன்னா இன்னும் நல்லா புரிந்துவிடும்...

      நீக்கு
  7. பதில்கள்
    1. ஹி..ஹி..ஹி... சில பேர் செய்றாங்கல்ல, அதான் நானும் செஞ்சு பார்த்தேன். உங்க 2 பேரு போஸ்ட் ல மட்டும் தான் இப்படி செய்வேன்.

      நீக்கு
  8. kudichittu oottunaal-
    tandanai!

    kudikka thanni
    vikkiravangalukku...?

    பதிலளிநீக்கு
  9. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

    ///.{ஆமாம் ...இந்த கேடிக்கு வேணும்னா அது ரத்தத்தில் ஊறிப்போன விசயமாக இருக்கலாம்..)///

    ஒருவனின் ஆளுமையை அவனின் சூற்றுசூழல் வடிவமைக்கிறது என்பதை செம சவுக்கடியோடு விமர்சனம் செய்திருக்கிறீர்கள்

    பகிர்வுக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க இன்னும் இந்த ஏரியாவில் தான் சுத்திகிட்டு இருக்கீங்களா ஹைதர் பாய். ம்ம்ஹும்...இது சரிப்படாது. உங்கள் திட்டி பதிவு போற்ற வேண்டியதுதான்.

      நீக்கு
    2. ஹா......ஹா........ஹா.......ஹா.......ஹா.......
      ஹா......ஹா........ஹா.......ஹா.......ஹா.......
      ஹா......ஹா........ஹா.......ஹா.......ஹா.......
      ஹா......ஹா........ஹா.......ஹா.......ஹா.......
      ஹா......ஹா........ஹா.......ஹா.......ஹா.......
      செமை உள்குத்து... என்னால சிரிப்பை அடக்கவே முடியலை...

      நீக்கு
    3. கொஞ்சம் என்னவென்று சொன்னால் நானும் சிரிப்பேன் ...

      நீக்கு
    4. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ சிராஜ்
      //நீங்க இன்னும் இந்த ஏரியாவில் தான் சுத்திகிட்டு இருக்கீங்களா ஹைதர் பாய். ம்ம்ஹும்...இது சரிப்படாது. உங்கள் திட்டி பதிவு போற்ற வேண்டியதுதான்.//

      வேண்டாம் ராசா வேண்டாம் நல்லபிள்ளையில்லே

      நீக்கு
    5. ஆனா இந்த உள்குத்து பதிவோட ஓனர் ஹாஜா மச்சானுக்கு புரியாது சகோ ஆசிக். அவரும் தலைய போட்டு பிச்சிகட்டும்.
      மச்சான், ரொம்ப சிம்பிள். இதில நீங்க சம்பந்தப்படல. சோ, ஒதுங்கி நின்னு ஜாலியா பார்த்துகிட்டு இருங்க. இது போல் இனி அடிக்கடி நடக்கும்..

      நீக்கு
  10. ஸலாம் சகோ.கஸாலி,
    வழக்கம்போலவே அதிரடி பதிவு. ஆனால், ஒரு அதிரடிக்குள் பல உள்ளதிரடிகள்..!

    @அதிரடி 1
    'நான்தாண்டா எல்லாரையும் கொல்ல சொன்னேன்' என்று அந்த கேடி பிரஸ் மீட் போட்டு சொன்னாலும் கூட... "ஹி...ஹி... அதெல்லாம் இல்லை, நரேன் பாய் ஏதோ மப்புல உலருராறு... சான்ஸே இல்லை"ன்னுதான் சொல்வாங்க... போல... ச்சீ... கேவலமா இல்லையா..? சட்டத்துக்கும் நீதிக்கும் கண்ணும், காதும், சிந்திக்கும் மூளையும் இல்லையா..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வஸ்ஸலாம் சகோ...
      நான் ஹாஜா...ஓகே ஓகே...ஆம் ..நீங்கள் சொல்வது காமெடியாக இருந்தாலும் அதுதான் உண்மை...

      நீக்கு
  11. @ அதிரடி 2
    மேட்டர் என்னனா... ஆர் எஸ் எஸ் க்கு அமெரிக்க டாலர் அனுப்புவது //அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் சில அரசு சாரா அமைப்புகள்//---என்று தெளிவாக இப்போது பிரதமர் அளவுக்கு பேசும் நிலை வந்துவிட்டது..!

    ஆனாலும், கிட்டே நெருங்க/நெருக்க காங்கிரசுக்கு என்ன தயக்கமோ..? பாம்பின் கால் பாம்புதான் அறியும்..!

    பதிலளிநீக்கு
  12. @ அதிரடி 3

    //ஓரின சேர்க்கை//---இதுக்கு காரணமே பசுமைத்தமிழர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தான்..!

    "ஒரு தனி மனிதனின் விருப்பஞ்சார்ந்த உரிமை ஓரினப்புணர்ச்சி" --என்று நம்முடைய மக்கள் நல்வாழ்வுத்துறை மைய அமைச்சர் அன்புமணி மெக்சிகோவிலே போய்த்திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்!

    உடனே இங்கே சிலருக்கு உசுப்பி விட்டது போல ஆச்சு. அதனால், உள்துறையே களத்தில் இறங்க வேண்டியதாயிற்று. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி வைக்க வேண்டிய எய்ட்சு எச்சரிக்கை வாதத்தை, உள்துறை அமைச்சர் நீதிமன்றத்தில் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

    இந்த அமைச்சகத்தில் இவர் இருக்க லாயக்கே இல்லாதவர் ஆகிவிட்டார் இந்த அன்புமணி..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த மாதிரி கருத்துக்களை உதிர்த்தவர் அன்புமணியா....!கிழிஞ்சுடும்...நல்ல வேலை இப்ப எதுவும் இலவச கோட்டாவில் இவருக்க் மந்திரி பதவி கிடைக்கவில்லை

      நீக்கு
  13. @ அதிரடி 4
    கொலையாளிகளே...
    திட்டம் தீட்டி கொலை செய்து விட்டு அதை மறைத்து தப்பிக்க முனைந்து அப்புறம் மாட்டிக்கொள்ளும் ஒரு கொலையாளிக்கு, மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை என்கிறது சட்டம்.

    இனிமேல்...

    இந்த பிளான் பண்ணி மர்டர் பண்ணும் கொலையாளிகள் என்னா செய்யனும்னா...
    கொல்ல வேண்டியவங்களை காரை ஏத்தி கொன்னுட்டு அல்லது கொன்னுட்டு பாடி மேலே காரை ஏத்திட்டு நல்லா தண்ணி அடிச்சிடனும்...
    பத்தே வருஷம் தான்...

    எங்கேயோ இடிக்கிறதே....

    சரி, கொலையை செய்வதும் கொலை செய்ய தூண்டுவதும் குற்றம். இப்படி கொலை செய்ய தூண்டும் டாஸ்மாக் அது நடத்தும் அரசு...???
    சகோ.சீனி கேட்டுட்டார்... பதில் இல்லாத கேள்வி என்ற பதில். ம்ம்ம்... விளங்கிரும்... நாடு..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ்ம்மம்ம்ம்ம்...உண்மைதான்..பதிலே இல்லாத கேள்வி

      நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....