24 மே 2011

ஒண்டிக்கு ஒண்டி வாரியா ? மல்லுகட்டும் முதலமைச்சரும் ,கவர்னரும்


கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கும் ஆளுநர் பரத்வாஜுக்கும் நடக்கும் குடுமிபிடி சண்டைதான் இப்ப இந்தியாவின் ஹாட் காமெடி....

கடந்த ஆண்டு 11 பா ஜ க எம் எல் ஏக்களும் ,5 சுயேச்சை எம் எல் ஏக்களும் கர்நாடக அரசுக்கு ஆதரவை விலக்கிகொண்டனர்...அப்போதிலிருந்தே அங்கு காமெடி கும்பமேலாதான்...சட்டசபையில் பெரும்பான்மையை அரசு நிரூபிக்க வேண்டிய நேரத்தில் சபாநாயகர் போப்பையா 16 பேரையும் பதவிகளில் இருந்து தூக்கி ஆப்படித்தார்...அதனால் எடியூரப்பா எந்த இடையூறும் இல்லாமல் தப்பித்தார்...

அந்த 16 பேரையும் பதவி நீக்கம் செய்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது..இதனால் திரும்பவும் எடியூரப்பாவுக்கு சிக்கல் வந்தது...ஆனால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 16 பேரும் எடியூரப்பாவை ஆதரிப்பதாக கூறி அந்தர் பல்டி அடித்தனர்...

இந்த நிலையில் கடுப்பான கவர்னர் கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த பரிந்துரை செய்தார்...ஆனால் வித்தியாசமாக இந்தியாவில் முதல்முறையாக தனக்கு ஆதரவான எம் எல் ஏக்களை டெல்லிக்கு கூட்டி சென்று ஜனாதிபதி முன்பே பெரும்பான்மையை நிருபித்து கவர்னருக்கும் ,எதிர்கட்சிகளுக்கும் கன்னாபின்னாவென அதிர்ச்சியை ஏற்படுத்தி அதே வேலையில் மக்களுக்கு சிரிப்பையும் ஏற்படுத்தினார் எடியூரப்பா....

இதோட எல்லா சனியனும் முடிந்துவிட்டது என்று பார்த்தால் ஒரு அரசு விழாவில் எடியூரப்பாவை புகழ்ந்து தள்ளினார் ஆளுநர்...இப்போது என்னடான்னா சட்டபேரவை கூட்டத்துக்கு அனுமதி கொடுக்காமல் ஜாலியோ ஜிம்கானா பாடி எடியூரப்பாவை கடுமையாக கடுப்பேற்றி கொண்டு இருக்கிறார்...


சும்மாவா சொன்னார் அண்ணா ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவை இல்லாத ஒன்று என...

இன்னும் என்ன என்ன கூத்துக்கள் ஜனநாயகத்தின் பெயரால் கர்நாடகாவில் அரங்கேற போகிறதோ?

13 கருத்துகள்:

  1. அப்போ தமிழக அரசியல் பரபரப்பு ஒஞ்சிருச்சா??

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா11:39 AM, மே 24, 2011

    எல்லாம் ஒண்ணு சேர்ந்திட்டாய்ங்களாம்

    பதிலளிநீக்கு
  3. கர்னாடக அரசியல் பதிவிட்ட தலைவர் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. அங்கே என்னதான் நடக்குதுன்னு தெருஞ்சுக்க ஆசைப்பட்டேன் ...உங்க மூலமா தெரிந்து கொண்டேன் . நன்றி

    பதிலளிநீக்கு
  5. #மைந்தன் சிவா சொன்னது…

    அப்போ தமிழக அரசியல் பரபரப்பு ஒஞ்சிருச்சா??#


    ஹி ஹி..இது சும்மா ஒரு மாற்றத்துக்கு...

    பதிலளிநீக்கு
  6. #மைந்தன் சிவா சொன்னது…

    கர்னாடக அரசியல் பதிவிட்ட தலைவர் வாழ்க..#


    ஹைய்யா நானும் தலைவர் ஆகிட்டேன்...

    பதிலளிநீக்கு
  7. ஓயாத ஒழுக்கா இருக்கு இவர்கள் சண்டை, செத்து செத்து விளையாடுராயிங்க...!!!

    பதிலளிநீக்கு
  8. எப்படியோ ஆட்சி தப்பித்து விட்டது..

    பதிலளிநீக்கு
  9. சும்மாவா சொன்னார் அண்ணா ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவை இல்லாத ஒன்று என...

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் பாஸ்! பாத்து நாளாச்சு! :-)

    பதிலளிநீக்கு
  11. தமிழ்மணம் மக்கர் பண்ணுது!

    பதிலளிநீக்கு
  12. ஸலாம் சகோ.ஹாஜா,
    செம ஜாலியான கலக்கல் தொகுப்புரை பதிவு.

    இப்படியா அடிச்சிக்கிறது..?
    அங்கே இரண்டு ஆளுங்கட்சியா..?
    எதிர்க்கட்சியே இல்லையா..?
    சுத்த கர்நாடகமா இருக்காங்களே இவங்க..!

    //சும்மாவா சொன்னார் அண்ணா ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவை இல்லாத ஒன்று என...//--அடடே..! அண்ணாவுக்கு ஆத்திரமூட்டிய அந்த ஆளுநர் யாரென அறிய ஆவல்..!

    பதிலளிநீக்கு
  13. மாப்ள அது மட்டுமா சொன்னாரு.......மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டுன்னும் சொன்னருய்யா ஹிஹி!

    7th vote mine!

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....