29 பிப்ரவரி 2012

பயோடேட்டா :தமிழ்நாடு போலீஸ்


பெயர் : தமிழக காவல்துறை

தொழில்: மக்களை பாதுகாப்பது !?

கற்பழிப்பு : அதே மக்களிடம் அவ்வப்போது சில காட்டுமிராண்டி அதிகாரிகள் செய்வது

உபதொழில்:லஞ்சம் வாங்குவது

பொது அடையாளம் : தொப்பை

ஆளும்கட்சி: எஜமானர்கள்

எதிர்க்கட்சி:முன்னாள் எஜமானர்கள்

நேர்மை :ஒரு சில அதிகாரிகளிடம் மட்டும் இருப்பது

நல்லபெயர் : அந்த ஒருசில அதிகாரிகளால் கிடைப்பது

கெட்டபெயர்: மீதம் உள்ள மற்ற அதிகாரிகளினால் கிடைப்பது

அடிபணிந்து போவது : அரசியல்வாதிகளிடம்

அலட்சியம்,எரிந்து விழுவது : புகார் கொடுக்க வரும் சாமானியனிடம்

மறந்தது :கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு

மறக்காதது : மாமூல், லஞ்சம்,ஊழல்

கேப்டன் விஜயகாந்த்: பல படங்களில் மானத்தை காப்பாற்றியவர்

பொழுதுபோக்கு: தற்போதைக்கு எதிர்க்கட்சியினரையும்,சசி குருப்பையும் கைது செய்வது


சாதனை : என்ன ஆனாலும் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிடுவது

எதிரிகள்: பலசமயம் மனித உரிமை அமைப்புகள் ,சிலசமயம் வக்கீல்கள்

என்கவுன்டர் : தவறான நபர்களை தண்டிக்க எடுக்கும் சரியான(சர்ச்சையான )நடவடிக்கை

16 கருத்துகள்:

  1. தொப்பை : பொது அடையாளம்

    ஆளும்கட்சி: எஜமானர்கள்

    எதிர்க்கட்சி:முன்னாள் எஜமானர்கள்

    - இந்த மூணு மேட்டரையும் திருப்பி போட்டா நல்லா இருந்திருக்கும்...

    :-)

    பதிலளிநீக்கு
  2. //தொழில்: மக்களை பாதுகாப்பது//

    என்னா...து.

    பதிலளிநீக்கு
  3. //தொப்பை : பொது அடையாளம்//

    :-)

    பதிலளிநீக்கு
  4. நான் படித்த ஜோக்

    சிறந்த போலீஸ் force யார் என்று கண்டறிய நடந்த போட்டியில், இங்கிலாந்து போலீஸ்,ஸ்காட்லாந்து போலீஸ் மற்றும் நம் தமிழ்நாடு போலீஸ் கலந்து கொள்கிறார்கள்...

    விதிமுறை இதுதான், அனைவரையும் கிர் காட்டில் (சிங்கங்கள் நிறைந்த காடு) கொண்டு போய் விட்டு விடுவார்கள்...யார் யார் எவ்வளவு நேரத்தில் சிங்கத்தை கொண்டு வருகிறார்களோ அதை பொருத்து வெற்றி...

    முதலில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் அரை மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை குண்டு கட்டாக கட்டி தூக்கி வந்தனர்...

    அடுத்து இங்கிலாந்து போலீசார் முக்கால் மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை இழுத்து கொண்டு வந்தனர்...

    ஒரு மணி நேரம் ஆகியும் நம்மவர்கள் வராததினால் சந்தேகபட்ட குழுவினர் காட்டுக்குள் நம் போலீசை தேடி போயினர்...

    அங்கே,

    மரத்தில் ஒரு கரடியை கட்டி வைத்து விட்டு நம் போலீசார் அடி பின்னி சொல்லி கொண்டு இருந்தனர்,

    "ஹே ஒழுங்கா ஒத்துக்கோ நீ தானே சிங்கம்"
    "அடி வாங்கியே சாகாத,ஒழுங்கா நீ தான் சிங்கம்னு ஒத்துக்கோ"

    .

    பதிலளிநீக்கு
  5. /கெட்டபெயர்: மீதம் உள்ள மற்ற அதிகாரிகளினால் கிடைப்பது/ தங்களின் சில சொந்த செயல்களாலும் தன் பெயரைத் தாங்களே கெடுத்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். நேர்மையான போலீஸ்னா அது விஜயகாந்த்தான்..... அவர மாதிரி யாரும் வர முடியாது. ஹி..ஹி... சிரிப்பு பதிவு...

    பதிலளிநீக்கு
  6. பிரிச்சி மேஞ்சிட்டேள் போங்கோ!

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....