06 ஜனவரி 2011

அஜித்தும் விஜய்யும் எதிரிகள் அல்ல.....!!!

சினிமா என்பது ஒரு வியாபாரம்......சினிமாவை பார்க்கும் ரசிகன் அதை ஒரு பொழுது போக்காக மட்டுமே நினைக்க வேண்டும்.....நடிகர்களுக்காக மன்றம் அமைத்து அவர்களுக்காக பிரிந்து சண்டை போட்டு கொண்டு இருப்பதினால் யாருக்கு நஷ்டம்? நடிகர்களுக்கா? நடிகர்கள் தங்களின் வெற்றிக்கு மட்டுமே ரசிகர்களை பயன் படுத்தி கொள்கின்றனர்.....

வெளியில் அஜீத் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் முறைத்துக் கொண்டு திரிகிறார்கள்.

ஆனால் அவர்களின் தலயும் தளபதியும் பண்டிகை - விசேஷங்களுக்கு கூடிக் குலவி நட்பு பாராட்டுகின்றனர்.

இரு நடிகர்களின் இப்போதைய மார்க்கெட் நிலவரமும் ஒன்றும் ஆரோக்கியமாக இல்லை. அரசியல் பற்றி இருவருமே பரபரப்பாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். இப்போது அதிமுக அனுதாபிகள் வேறு.

அதே நேரம் இருவருக்குமே ஒரு வெற்றி கட்டாயம் தேவை. அதற்காக மங்காத்தாவில் அஜீத் படுபிஸி. விஜய்யோ காவலனை முடித்து விட்டு, வேலாயுதத்தின் இறுதி ஷெட்யூலில் இருக்கிறார்.

இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் இப்போது சென்னை பின்னி மில்ஸில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு இடைவேளையில் திடீரென்று அஜீத்தும் விஜய்யும் நேற்று சந்தித்துக் கொண்டனர்.

இருவரும் அவரவர் படம் குறித்து விசாரித்துக் கொண்டனர். அப்போது மங்காத்தா பட இயக்குநர் வெங்கட் பிரபு உடனிருந்தார்.
ஆகவே ரசிக பெருமக்களே அவர்களுக்காக நீங்கள் சண்டை போட்டு கொள்ளாதீர்கள்.....

5 கருத்துகள்:

  1. எல்லோரும் நல்லவராக, நண்பர்களாகவே இருக்க விரும்புவோம்..

    பதிலளிநீக்கு
  2. பெரும்பாலான ரசிகர்களுக்கு இது தெரியும். கிரிக்கெட்டையே எடுத்துக்கொள்ளுங்கள். நாம் எந்த அணியுடன் ஆடினாலும் அவர்களை எதிரியை போல நினைப்போம். ஆட்டம் முடிந்தவுடன் இருவரும் சிரித்து பேசிக்கொண்டே வருவார்கள். எல்லாம் ஒரு சுவாரசியத்துக்குத்தான்.

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....