11 ஜனவரி 2011

அதிமுகவிற்கு ஆதரவு....சீமான்




ஈழத்தில் போர் முடிவடைந்த கால கட்டத்தில் தமிழக அரசியல் களத்தில் குதித்தவர் சீமான். முதலில் நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கி ஈழத் தமிழர் ஆதரவு பிரசாரத்தை வேகமாக முன்னெடுத்தார். அவரது அனல் வேகப் பேச்சால் பலரையும் ஈர்த்தார். இதன் விளைவாக 2 முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையும் சென்றார். சமீபத்தில் அவர் விடுதலையானார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை தன் பக்கம் இழுத்துள்ளது அதிமுக. சீமானை அதிமுக கூட்டணிக்கு இழுப்பதற்கான முயற்சிகளை வைகோவிடம் ஒப்படைத்தார் ஜெயலலிதா.

இதன் விளைவாக இன்று மதிமுக தலைமைக் கழக அலுவலகம் சென்று வைகோவை சந்தித்துப் பேசினார் சீமான்.

ஒன்றரை மணிநேரம் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,

நான் சிறையில் இருந்த போது விடுதலையாக வேண்டும் என்று மனப்பூர்வமாக வைகோ அறிக்கை வெளியிட்டார். அதைப்போல நான் விடுதலை செய்யப்பட்டேன் அவரது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டவன். வருகிற தேர்தலில் காங்கிரசையும், அதன் கூட்டணி கட்சியையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற லட்சிய வெறியோடு பணியாற்றுவோம்.

வைகோ தேசிய அரசியலில் பல வருடங்கள் இருந்து விட்டார். மாநில அரசியலுக்கு அவர் வர வேண்டும். எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் செல்ல வேண்டும். அங்கு தமிழர்கள் ஆதரவு குரல் ஒலிக்க வேண்டும் என்று நான் அவரை வலியுறுத்தினேன். யோசிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். யோசிப்பதற்கு எதுவும் இல்லை. இந்த முறை எப்படியாவது அவர் எம்.எல்.ஏ. தொகுதியில் போட்டியிட வேண்டும்.

கடந்த தேர்தலில் இரட்டை இலைக்கு ஆதரவாக ஓட்டு போடச் சொன்னீர்கள். இந்த தேர்தலிலும் அவ்வாறு கேட்பீர்களா என்ற கேள்விக்கு சீமான் பதிலளிக்கையில்,

இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கடந்த தேர்தலில் சொன்னேன். காங்கிரசுக்கு எதிராக களத்தில் நிற்கும் பெரிய கட்சி அ.தி.மு.க. காங்கிரசை வீழ்த்த இரட்டை இலைக்கு ஆதரவு அளியுங்கள் என்றேன். இப்போதும் அப்படித்தான் சொல்வேன். இதை கூட சொல்வதற்கு தைரியும் இல்லை என்றால் நான் எப்படி போராளியாக முடியும். யாருக்கு வேண்டு மானாலும் ஓட்டு போடுங்கள் என்று குடு குடுப்பக்காரன் போல் நான் ஜோசியம் சொல்ல மாட்டேன். யார் வர வேண்டும் என்பதல்ல. யார் வரக்கூடாது என்பதுதான் எங்கள் குறி என்றார் அவர்.

முதல்வர் கருணாநிதி யை எதிர்த்துப் போட்டியிட்டு உங்களால் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

காமராஜரை சீனிவாசன் தோற்கடிக்க வில்லையா? அதே போல் சீமானால் தோற்கடிக்க முடியாதா? அது வரலாற்றில் தவறு. தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அப்போது பார்ப்போம் என்றார் சீமான்.

ஹலோ சீமான் ....விடுதலைப்புலிகளை கூண்டோடு அளிக்க வேண்டும் என்று கூறியவர் , போர் என்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கூறியவர் ..இப்போது உங்களுக்கு இனிப்பதன் மர்மம் என்ன?

வலுவான வஜ்ராயுதமாக சீமான் இருப்பார்-வைகோ



தமிழ் ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழ விடுதலைக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடும் போராளி சீமான் மீது இரண்டு முறை தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டது. சிறைச் சாலைகளில் அடக்குமுறை. லட்சிய தாகம் கொண்டவர்களை ஒடுக்க முடியாது. சீமான் கைது செய்யப்பட்டதும் முதல் கண்டன அறிக்கை ம.தி.மு.க. கொடுத்தது.

சீமான் பேசிய அதே பேச்சை நான் தமிழ்நாடு முழுவதும் கூட்டங்களில் பேசினேன். அவர் பேச்சில் எந்த தவறும் இல்லை. வேலூர் சிறையில் நானும், நெடுமாறனும் சீமானை சந்தித்தோம். அப்போது எந்த தவறும் செய்யாமல் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ஒரு கொலைக்காக 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் தம்பிகளையும் பார்த்தேன். சீமானை கைது செய்தது சட்டவிரோதம் என்று கோர்ட்டு விடுவித்துள்ளது.

விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவது எங்கள் உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை பிடித்ததற்கு 1200 கோடி ரூபாய் செலவு செய்தும் கூட 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. வருகிற சட்டசபை தேர்தல் தமிழர்களின் தன்மானத்திற்கு விடும் அறை கூவல். தமிழ்நாட்டில்

பள்ளி குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. சுதந்திரமாக தொழில் செய்ய பாதுகாப்பு இல்லை. வரப்போகும் தேர்தலில் விலைவாசி உயர்வு, மணல் திருட்டு, வாழ்வாதார சீரழிவு பற்றி தெருத் தெருவாக பிரசாரம் செய்வோம்.

தேர்தல் களத்தை சந்திக்க சீமான் தயார். வலுவான வஜ்ராயுதமாக சீமான் இருப்பார். கலையுலகில் இருக்கும் தமிழ் இன உணவாளர்களும் இணைந்து வெற்றியை ஈட்டுவார்கள் என்றார் வைகோ.

ஹி ஹி உங்களுக்கு பக்கபலமாக ஜெயலலிதாவுக்கு இன்னொரு அடிமை சிக்கிருச்சு......வைகோ .....

7 கருத்துகள்:

  1. இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதுன்னு தெரியல. இருக்கும் கொஞ்ச நஞ்ச உணர்வாளர்களையும் இப்படி ஓட்டுக்காக இனத்தின் பெயரை சொல்லி கூட்டம் சேர்க்கும் இவர்கள் உருவாகிக்கொண்டேத்தான் இருக்கின்றனர். மக்கள் விழிக்கும் வரை இவர்கள் கை ஓங்கியே இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதுன்னு தெரியல. இருக்கும் கொஞ்ச நஞ்ச உணர்வாளர்களையும் இப்படி ஓட்டுக்காக இனத்தின் பெயரை சொல்லி கூட்டம் சேர்க்கும் இவர்கள் உருவாகிக்கொண்டேத்தான் இருக்கின்றனர். மக்கள் விழிக்கும் வரை இவர்கள் கை ஓங்கியே இருக்கும்


    உண்மை

    பதிலளிநீக்கு
  3. கொஞ்சம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருக்கு தலைவரே...

    பதிலளிநீக்கு
  4. தேர்தல் முடியுறதுக்குள்ள என்னைய பைத்தியாக்கிடுவானுங்க போல

    பதிலளிநீக்கு
  5. இன்னுமொரு 'கைப்புள்ள'.
    ஆயாசமாக இருக்கிறது.
    -----------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன'2011)

    பதிலளிநீக்கு
  6. நாம் தமிழர்கள் தானே...இதெல்லாம் பொருத்துகொள்ளத்தான் வேண்டும்....

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பர்களே....

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....